Sunday, July 6, 2008

ஆதிகேசவப்பெருமாள்

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்.காஞ்சிபுரம்.மூலவர் ஆதிகேசவப்பெருமாள்.தாயார் அலமேல்மங்கை பத்மாஸனி.தீர்த்தம் கஜேந்திர புஷ்கரிணி.விமானம் சக்ராக்ருதி விமானம் பிரதிஷ்டை.மேற்கு பார்த்து நின்ற திருக்கோலம் தலவரலாறு.இந்திரனுக்கு நிகரான சக்தி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார்.பயந்து போன இந்திரன் மகாசந்தனின் தவத்தை கலைக்க தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான்.இதற்கெல்லாம்அவர்அசையவில்லை.பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான்.இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட் டமாக காடுகளில் திரியும் போது சாளக்கிராமத்தில் நீராடியது.அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது.மிகவும் வருந்திய யானை பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது.அதன்படியே இந்த யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது.ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது.இவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14 000 மலர்களை பறித்து கொடுத்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது.ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலிருந்த குளத்திற்கு சென்று பூ பறித்தது.அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது.பயந்து போன யானை அஷ்டபுஜ பெருமாள் தன்னை காப்பாற்றும்படி ஆதிமூலமே என அபயக்குரல் கொடுத்தது.அஷ்டபுஜபெருமாள்.இதனால் வருந்திய சரஸ்வதி யாகத்தை அழிக்க சரபாஸ்வரன் போன்ற கொடியஅரக்கர்களை அனுப்பி வைத்தாள்.தன்னை காக்கும்படி பிரம்மனும் பெருமாளை வேண்ட.தலசிறப்பு.மங்களாசாசனத்திற்குபின் தான் அஷ்டபுஜபெருமாள் பிரபலமானார் என்றும் கூறுவார்கள்.108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.இங்குள்ள தாயாரை தனியாக பாடல் பாடி மங்களாசாசனம் செய்த சிறப்பு பெற்ற தலம்.இந்த பெருமாளின் வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம் கத்தி புஷ்பம் அம்பு ஆகியவையும் இடது நான்கு திருக்கரங்களில் சங்கு வில் கேடயம் கதை ஆகியவையும் கொண்டு அருள் பாலிக்கிறார்.சாதாரணமாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும்.ஆனால் இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பம்சமாகும்.பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால் வீடு கட்ட நிலம் வாங்க இருப்பவர்கள் விளை நிலங்களை வாங்குபவர்கள் கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.நேரம் காலை 7 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.இருப்பிடம்.போன் 044 2722 5242.அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம்.அருகிலுள்ள விமான நிலையம் சென்னை.

No comments: