Monday, July 14, 2008

உலக்கை அருவி

உலக்கை அருவி
அருவியை சுற்றி பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். உலக்கை அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். கன்னியாகுமரியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவலை தாலுக்காவிலுள்ள அழகிய பாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். ஒதுக்கப்பட்ட காடுகள் வழியாகவே இதற்குச் செல்லும் பாதைகள் உள்ளன. அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர். அருவியை சுற்றி பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும்.

No comments: