Monday, July 14, 2008

தலயசனம்

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயில் பழங்காலத்தைச் சேர்ந்த கோயிலாக இருந்த போதிலும் இன்னும் புழக்கத்திலுள்ள கோயிலாகவே இருந்து வருகின்றது. இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள் என வழங்கி வருகின்றது.
இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் கடல் மல்லைத் தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
இத்தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

இரதம்

பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன.
இவை நிலத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப் பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும். இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப் படுகின்றன.பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல.
பொருளடக்கம் [மறை]1 தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் சிவன் கோயில் 2 வீம இரதம் என அழைக்கப்படும் திருமால் கோயில் 3 அர்ச்சுன இரதம் என அழைக்கப்படும் முருகன் கோயில் 4 நகுல சகாதேவ இரதம் எனப்படும் இந்திரன் கோயில் 5 திரௌபதை இரதம் எனும் கொற்றவைக் கோயில்
தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் சிவன் கோயில்தனிக் கட்டுரை: தர்மராஜ இரதம்
இவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். ஆதிதளம் என அழைக்கப்படும் நிலத் தளத்துடன் சேர்த்து இக் கோயில் மூன்று தளங்கள் கொண்டது. நிலத் தளம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. இதன் மேல் தளங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல் தளங்களுக்குச் செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.
வீம இரதம் என அழைக்கப்படும் திருமால் கோயில்தனிக் கட்டுரை: வீம இரதம்
வீம இரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இது நீண்ட செவ்வக வடிவான தள அமைப்பைக் கொண்டுள்ளது. இத் தள அமைப்பு, இதன் மேற் காணப்படும் நீண்ட சாலை விமான அமைப்புக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தர்மராஜ இரதம், அருச்சுனன் இரதம் போலன்றி இக்கோயிலில் சிற்பங்கள் எதுவும் காணப்படாமை குறிப்பிடத் தக்கது.
அர்ச்சுன இரதம் என அழைக்கப்படும் முருகன் கோயில்தனிக் கட்டுரை:அருச்சுன இரதம்
அருச்சுன இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர்.
நகுல சகாதேவ இரதம் எனப்படும் இந்திரன் கோயில்தனிக்கட்டுரை: நகுல சகாதேவ இரதம்
இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப் படுகின்றது. இது சிற்ப நூல்களில் கஜபிருஷ்டம் (யானையின் பின்பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது.
திரௌபதை இரதம் எனும் கொற்றவைக் கோயில்தனிக்கட்டுரை: திரௌபதை இரதம்
சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும்.
கட்டிடக்கலை அடிப்படையில் இக் கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டிட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் ஒரு சிறப்பாகும்.

மாமல்லபுரம் - பகுதி 5

மாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். சிற்பம் எனும் போது அதனுள் கட்டிடங்கள், அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் என்னும் இக்கட்டுரை புடைப்புச் சிற்ப வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வௌதப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது.
பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன. இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.
மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வௌதத்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.

மாமல்லபுரம் - பகுதி 4

ஐந்து இரதம் இயற்கையான பாறையைச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர் போல காட்சியளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தையுடைய தர்மராஜ இரதம், சாலை சிகரத்தையுடைய பீம இரதம், சதுரமான சிகரத்தையுடைய திரௌபதி இரதம் மற்றும் கெஜபிருஷ்டம் சிகரத்தையுடைய நகுல-சகாதேவ் இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காக தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். தர்மராஜ இரதத்தில் காணப்படும் அழகு வாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும் மேலும் பல்லவ-கிரகந்த எழுத்துக்கள் பொறிப்புடைய முதலாம் நரசிம்மவர்மனின் விருது பெயர்களும் அந்த இரதத்தில் காணப்படுகின்றன.

மாமல்லபுரம் - பகுதி 2

மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களுள் மிகப் புகழ் பெற்ற சிற்பங்களுள் மகிடாசுரமர்த்தினி சிற்பம் முதன்மையானது. அங்குள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் என அழைக்கப்படும் குடைவரையில் இது செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்குப் பக்கச் சுவரின் உட்புறம் அமைந்துள்ள இந்தச் சிற்பம் நேர்த்தியாகச் அமைந்துள்ளது. மகிடாசுரனை வதம் செய்ய வரும் மகிடாசுரமர்த்தினி என அழைக்கப்படும் சக்தி, பத்துக் கைகள் உடையவளாய் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சக்தியின் பத்துக் கைகளிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தியபடி பூதகணங்களும் காணப்படுகின்றன. எருமைத் தலை கொண்ட மகிடாசுரன், கதாயுதத்துடன் சத்தியை எதிர்ப்பதும், இரண்டு படைகளும் மோதுகின்ற காட்சியும் உயிர்ப்புடன் அமைந்துள்ளன.

மாமல்லபுரம் - பகுதி 1

மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது அமைந்துள்ள ஒரு குடைவரையாகும். இம்மண்டபம் குடையப்பட்டுள்ள பாறைக்கு மேல், ஒலக்கனேஸ்வரர் கோயில் எனும் பெயர் கொண்ட கட்டுமானக் கோயில் அமைந்துள்ளது.
இதன் முகப்பு நான்கு தனித் தூண்களையும் அவற்றின் இரு புறமும் பக்கச் சுவர்களோடு ஒட்டிய இரண்டு அரைத்தூண்களும் கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பில் அதிட்டானம் காணப்படவில்லை. ஆனால் உயரமாக அமைந்துள்ள மண்டபத்துக்குள் செல்வதற்காக இரண்டு பக்கமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று கருவறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குடைவரையின் நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் பெரும்பாலான பல்லவர் கோயில்களில் காணப்படுவதுபோலச் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் லிங்கம் பொருத்துவதற்கான குழி காணப்படுகின்றது. இக்கருவறைக்கு இருபுறமும் காணப்படும் கருவறைகளில், தெற்குப் பக்கத்தில் உள்ளது சிவபிரானுக்கு என அமைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மூன்றாவது கருவறையில் முற்றுப் பெற்ற சிற்பங்கள் எதுவும் காணப் படாவிட்டாலும், சிற்பங்கள் செதுக்கப்பட இருந்ததற்கான சான்றுகள் தென்படுகின்றன. இக்கருவறை திருமாலுக்கு உரியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நடுவிலுள்ள கருவறைக்கு முன்னால், குடைவரையின் உள்ளேயே, இரண்டு சிம்மத்தூண்களுடன் கூடிய சிறிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுபக்கச் சுவரொன்றில் செதுக்கப்பட்டுள்ள மகிடாசுரமர்த்தினி அசுரனுடன் போரிடும் காட்சியைக் காட்டும் புடைப்புச் சிற்பம் இக் குடைவரைக்குரிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ள இச் சிற்பம், மாமல்லபுரத்திலுள்ள பரவலாக அறியப்பட்ட சிற்பங்களுள் ஒன்று.
இதற்கு எதிரேயுள்ள பக்கச் சுவரில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் - பகுதி 3

தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் கோயிலானது, மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற பஞ்சபாண்டவர் இரதங்கள் எனப் பரவலாக அறியப்படுகின்ற ஒற்றைக் கற்றளிகளில் ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளமொன்றில் காணப்படுகின்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இதன் பெயர் ஸ்ரீ அத்யந்தகாம பல்லவேச்சுர கிருஹம் என அறியப்படுகின்றது. இதன் மூலம் இது அந்யந்தகாமன் என்னும் விருதுப்பெயர் கொண்ட பல்லவ மன்னன் ஒருவனால் கட்டப்பட்டது என்பது தௌதவு. எனினும் இவ் விருதுப்பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட பல்லவ மன்னர்களைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இராஜசிம்மன் எனப்படுகின்ற இரண்டாம் நரசிம்மனே இங்குள்ள கற்றளிகளைக் கட்டுவித்தவன் எனச் சிலரும், இவை முதலாம் நரசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது என வேறு சிலரும் நிறுவ முயன்றுள்ளனர்.

மாமல்லபுரம் - பகுதி 6

அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும், அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட இப் பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இது ஒரு ஆறு அல்லது நீரோட்டமாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு படைகள் (layers) அல்லது நிலைகளாகக் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.
இச் சிற்பத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு மனித உருவமும், அவனுக்கு அருகில், சூலாயுதத்தை ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவனும் செதுக்கப்பட்டுள்ளது. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அருச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்த கதையைக் குறிப்பதாகக் கருதிச் சிலர் இதனை அருச்சுனன் தபசு என அழைக்கின்றனர். வேறு சிலர் இது பகீரதன் தவம் என்கின்றனர். தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினானாம். ஆனால் கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்தானாம். சிவன் கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பது புராணக்கதை. இதுவே இச் சிற்பத்தின் கருப்பொருள் என்பது அவர்கள் கருத்து.

பாஞ்சாலங்குறிச்சி

ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.
பாஞ்சை மண்ணுக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் அவர்கள் பிறந்த ஒட்டப்பிடாரம் உள்ளது.

பாபநாசம்

(பாபநாசம்) இறைவர் திருப்பெயர் : பாவநாசர், பாபவிநாசகர். இறைவியார் திருப்பெயர் : லோகநாயகி, உலகம்மை. தல மரம் : களா மரம். தீர்த்தம் : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம். வழிபட்டநூர் : அகத்தியர். வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1);அப்பர் - தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8).
தல வரலாறு பாபநாசம், பொதியின்மலை பாபநாசம் என்னும் இரண்டும் ஒன்றே. மக்கள் 'பாவநாசம்' என்றும் வழங்குகின்றனர்.
பொதிய மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் தலமே இவ் வைப்புத் தலம். சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில், பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.
அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும்.
விக்ரமசிங்கபுரத்தில் - "நமசிவாயக் கவிராயர்" என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் - உலகம்மை மீது அளவிறந்த பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வௌதப்படுத்தியது.
இங்குள்ள அகஸ்தியர் அருவி ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் சிறப்புடையது.
சிறப்புக்கள் இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
தமிழ் முனியான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் இதுதான்.
இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது அகத்திய முனிவர் அவரது கோயிலில் இருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்தபிறகுதான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும்.
நெல்லையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம் திருத்தலம்.
இத்தலம் மாணிக்கவாசகரின் (திருவாசகத்திலும்) திருவாக்கிலும் இடம் பெற்றுள்ளன.
பெரிய கோயில், கோயிலின் முன் தாமிரபரணி ஆறு (பொருநையாறு) அழகாகப் பாய்ந்தோடுகிறது. நீராடும் வசதியுள்ளது.
சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்து தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதியமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகின்றது.
ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.
பெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளி அகத்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் திருமணக் கோலக் காட்சித் தந்தருளிய தலமிதுவாகும்.
தீர்த்தம் - தாமிர பரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம் முதலியன. (இவற்றுள் கல்யாண தீர்த்தமும் பைரவ தீர்த்தமும் மலையுச்சியில் உள்ளன.
சுவாமிக்கு பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.
தன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் - பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் - வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் - பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் - பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம்.
சுவாமியின் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாடமைந்த மிக நுண்மையான சிற்பங்கள் காணப்படுகிறன.
இக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒருவகை பிரசாதமும், அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகிறது.
பங்குனியில் தெப்பத் திருவிழாவும், தேர்த் திருவிழாவும், சித்திரை முதல் நாள் அகத்தியருக்குத் திருமணக் காட்சி தரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
அமைவிடம் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

திருநெல்வேலி - பகுதி 1

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்

திருநெல்வேலி - பகுதி 2

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.
அமைவிடம் :
மதுரை மாவட்டத்திலிருந்து வடக்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது பழமுதிர்ச்சோலை. திருமாலின் திருக்கோயிலான, சுந்தராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் அழகராக அவர் நின்று அருள்புரியும் அழகர்கோயில் திருத்தலத்தில் அமைந்திருப்பது பழமுதிர்ச்சோலை.
பழமுதிர்ச்சோலை :
மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.
இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப் படுகின்றன.
மாலும்-முருகனும் :
பெருமாளும் அழகியவர், முருகன் என்றாலும் அழகுடையவன் என்று பொருள்படும். சுந்தரராஜன் என்றாலும் அழகுடைய பெருமாளைக் குறிக்கிறது. மிகப்பழமையான திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று.
திருமுருகாற்றுப் படையைத் தவிர, இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில் சிறந்த விஷ்ணுத் தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது.
திருமலையைப் போன்ற இனிய தோற்றமுடையதாக இருப்பதால் திருப்பதி திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையை வணங்கி வழிபடலாம்.
முருகன் அடியார்கள் :
திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார்.
புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
சைவ-வைணவ ஒற்றுமை :
அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வௌ஢ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.
இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதிதான் கொடுத்து வருகிறார்கள். துளசி எப்போதும் கொடுப்பதில்லை.
கோயில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வௌ஢ளி விக்ரகம் இருந்து வருவதுடன் பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது.
இத்திருத்தலம் வைணவத் தலமாகவும், குமார தலமாகவும் விளங்கி சிவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

முட்டம்

முட்டம் ஒரு அழகிய கடற்கரை கிராமம். மீன்பிடிப்பு தொழிலை மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகியலை பல தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன. அழகிய நில அமைப்பைக்கொண்டது முட்டம். பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் வடமேற்கில் செம்மண் அகளிகளுமாக முட்டத்தின் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை.
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது.
முட்டம் ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குவதில் ஐயமே இல்லை

வாரணாசி - பகுதி 5

புனித கங்கை நதியின், பிறை நுதல் போன்றமைந்த எழில் மிகுந்த காசி மாநகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; மிகப் பழங்காலத்திலிருந்தே, கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் வாழும் தலமாகப் புகழ் பெற்று விளங்கி வந்துள்ளது. இந்த நகரத்துக்கு வாரணாசி என்ற பெயரும் உண்டு. நகா஢ன் வடக்கு, தெற்கு திசைகளில் பாயும் வருணா அசி என்ற இரு நதிகளின் பெயரால் வாரணாசி என்றழைக்கப்பட்டு வந்தது. இந்தப் பெயர் பின்னர் உருமாறிச் சிதைந்து பெனாரஸ் என்றுள்ளது. 1956-ம் ஆண்டு மே மாதம் 24 ந்த தேதி அரசின் ஆணைப்படி மீண்டும் வாரணாசி என்ற தனது புகழ் மிக்க பழைய பெயரால் அழைக்கப்படுகிறது. வரலாறு அறிந்திராத காலத்திலிருந்தே இந்துக்களின் புனிதத் தலமாக இருந்து வந்திருக்கிறது. காசியில் நீராடி, வழிபட்டு, தனது மூதாதையருக்கு நீர்க்கடன் செய்வதற்கென ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யாத்஡ணகர்கள் வாரணாசி தலத்தை நாடி வருகின்றனர். புத்தபிரான் முதல் உபதேசம் செய்த சாரநாத் என்ற இடம் வாரணாசியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜீவன் ஆத்ம சாந்தியைப் பெற்று ஆத்ம போதமாம் ஞானம் அடைந்து முடிவில் மகாபா஢ நிர்வாண நிலையை அடைய எட்டு அம்சவழியினை அவர் உபதேசித்தார்.
சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த இடங்கள்
அருள்மிகு காசி விசுவநாதர் கோயில்
வாரணாசி நகருக்கு வழிபடுவதற்காக வரும் பக்தர்கள் முதலில் செல்வது புகழ்மிக்க காசி-விசுவநாதர் ஆலயத்திற்குத்தான். முகலாய மன்னன் ஔரங்கசீப், இங்கிருந்த புராதனக் கோயிலை இடித்துத் தகர்த்து விடவே, 18-ம் நுற்றாண்டில் இந்தூர் மகாராணி அகல்யா பாயினால் மீண்டும் கட்டப்பட்டது. மகாராஜா ரஞ்ஜீத் சிங், கோவில் தங்கத்தால் வேய்ந்ததால், காசி-விசுவநாதர் கோயில், தங்கக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
நதிக்கரை: காசி நகா஢ல், கங்கை நதியில் நீராடுவோருக்கு மரணபயம் ஏற்படுவதில்லை. இங்கு நீராடுவோ஡஢ன், பாவங்கள் கரைந்து முக்தி பெறுவார்கள் என்ற ஜதீகம் இருப்பதால், இங்குள்ள ஸ்நாத கட்டங்களில், சூ஡஢யோதயத்தின் போதும் அஸ்தமானத்தின் போதும் மக்கள் நீராடி, சூ஡஢யனுக்கு பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்து வழிபடும் காட்சி மிகச் சிறப்பானது.
பாரத-மாதா கோவில்
வாரணாசியில், பாரத மாதாவுக்கான நூதனமான கோவில் உள்ளது. வழக்கமான தேவ, தேவி சிலை உருவத்துக்குப் பதில், பளிங்குக் கல்லில் பாரத நாட்டின் வரைபடம் செதுக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இந்தக் கோவில், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.
துர்கா கோவில்: வடநாட்டு "நாகரா" பாணி சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட துர்கைக் கோவில் கோபுரத்தின் அடியில் ஐந்து சிகரங்களாகத் தொடங்கி, படிப்படியாகக் குறுகி உச்சியில் ஒரு சிகரத்துடன் முடிவடையும் கோபுரம், ஆன்மாக்கள் அனைத்தும் பல நிலைகளைக் கடந்து இறுதியில் இறைவனுடன் ஒன்று கலப்பதைக் குறிக்கிறது.
மம்கீர் மசூதி: இந்த இடம், பெனி மாதல்கா தரேரா என்று சாதாரணமாக அழைக்கப்படுகிறது 17-வது நூற்றாண்டில் பென் மாதவ் ராவ் சிந்தியா என்ற அரசரால் கட்டப்பட்ட விஷ்ணு கோவிலை அழித்து, ஔரங்கசீப் கட்டிய இந்த மசூதி, இந்து-முஸ்லீம் இருவித கட்டிடக் கலைகளின் அபூர்வ கலவையாகக் காட்சி அளிக்கிறது.
ஞானவாபி மசூதி: புராதனமான விசுவேசுவரா கோவிலை அழித்து அவுரங்கசீப் கட்டிய இந்த மசூதியின் அடிப்புறத்திலும் பின்பக்கத்திலும் பழங்காலக் கோவில் சிற்பக்கலையின் அ஡஢ய அம்சங்களைக் காணலாம்.
துளசி-மானஸ மந்திர்: துர்கைக் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த ராமர் கோயில், 1964-ல் வாராணாசியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டது. கோவிலின் பளிங்குச் சுவர்களில் துளசிதாஸா஢ன் ஸ்ரீராம சா஢த் மானஸ் காவியம் முழுவதும் செதுக்கப்பட்டுள்ளது. அழகிய புல் தரையின் நடுவே இந்த வெண்பளிங்குக் கோவில் எழிலாக உயர்ந்து நிற்கிறது.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்
சிறந்த கல்விமானான வாரணாசி அரசர் நன்கொடையாக அளித்த 2000 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஆசியாவிலேயே மிகப் பொ஢ய பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக் கழகத்தின் உள்ளேயே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விசுவநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பண்டித மதன் மோகன் மாளவியால் திட்டமிடப்பட்டு, பிர்ளா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. இந்து கலாச்சாரத்தைப் பரப்புவதற்காக மட்டுமின்றி, ஜாதி, இன காழ்ப்புக்களிலிருந்து விடுபட்ட, புராதன இந்து சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் பண்டித மதன்மோகன் மாளவியா, பல்கலைக் கழகத்தை நிறுவினார். இந்த பல்கலைக் கழகத்தில், ஓவியங்களும், கலைப் பொருள்களும் நிரம்பிய பாரத் கலா பவனம் என்ற கலைக்காட்சியகம் கண்டு மகிழத் தக்க ஒன்றதாகும்.
சாரநாத்:
பகவான் புத்தர் தனது முதன் முதலாக உபதேசித்த சாரநாத்தில் அசோக சக்கரவர்த்தி நிறுவிய பல ஸ்தூபங்கள் உள்ளன. சுதந்திர பாரதத்தின் தேசீயச் சின்னமாக விளங்கும் "தர்ம ராஜிகா" ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. சாரநாத்தில் பார்க்கவேண்டிய பல அழகிய கோவில்கள், மடாலயங்கள் உள்ளன. காலத்தால் அழிந்து உருக்குலைந்து விட்டாலும், அக்கால சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக், காட்டுகின்றன. புத்தமதம் பரவிய பர்மீய, திபெத்திய, சீன நாடுகளின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்களும் விஹாரங்களும் சாரநாத்தில் உள்ளன.வாரணாசியிலிருந்து, சாரநாத் செல்ல உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா மையம் ஏற்பாடு செய்யும் சுற்றுலா பேருந்து தினசா஢ வாரணாசி பயணிகள் விடுதியிலிருந்து செல்கிறது. சாரநாத்தில் பயணிகள் தங்குவதற்கென உத்திரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணிகள் விடுதியும், தர்மசாலா (சத்திரங்களும்) உள்ளன.
சுற்றுலாக்கள் செல்லவும் 'பிக்னிக்' செல்லவும் ஏற்ற இடங்கள் :
ராம்நகர் கோட்டை : வாராணசியிலிருந்து 17.5 கி.மீ. தொலைவில் உள்ளது. வாரணாசி அரசா஢ன் மாளிகை உள்ளது. தர்பார் மற்றும் அருங்காட்சியகத்தில் அரசுவாழ்வின் அம்சங்களாக விளங்கிய பலவித ஆயுதங்கள், மரச் சாமான்கள், யானை சேணங்கள், பலவித ஆடை அலங்காரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. தினசா஢ பிற்பகல் நேரத்தில் வாரணாசி பயணிகள் விடுதியிலிருந்து ராம்நகர் கோட்டை செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுனார் கோட்டை கங்கை நதிக்கரையில் மிர்ஜாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் கோட்டை வாரணாசியிலிருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது முகலாயப் போரசர் ஹீமாயுனைத் தோற்கடித்து அ஡஢யணை ஏறிய ஷெர்ஷா சூ஡஢யன் கோட்டையாகும் இது. வாரணாசியிலிருந்து இங்கு செல்ல பஸ் வசதி உண்டு.
ஜோன்யூர்: வாரணாசியிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள ஜோன்பூர் ஒருகாலத்தில் இஸ்லாமியக் கலை, கலாச்சாரத்தின் மையமாக இருந்தது, தற்போது வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் தயா஡஢ப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. தங்குவதற்கென பிடபிள்யூடி பங்காளவும் மற்றும் சில எளிய விடுதிகளம் உள்ளன.வாரணாசியிலிருந்து பஸ் வசதி உண்டு.
டன்டா நீர்வீழ்ச்சி: வாரணாசியிலிருந்து 95 கி.மீ தொலைவில் மிர்ஜாபூர் மாவட்டத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, அழகிய வனாந்திர சூழலைக் கொண்டது. காசியிலிருந்து இங்கு செல்ல பஸ் வசதி உண்டு.
விண்ட்ஹாம் நீர்வீழ்ச்சி: பிக்னிக், மகிழ்ச்சியான சுற்றுலாக்களுக்கு உகந்த இடம். வாரணாசியிலிருந்து 93 கி.மீ தொலைவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வாரணாசியிலிருந்தும், மிர்ஜாபூ஡஢லிருந்தும் பஸ் வசதி உண்டு.ராஜ்தா஡஢ தேவ்தா஡஢ நீர்வீழ்ச்சிகள்: காசியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு செல்ல பஸ் வசதி உண்டு.
சுற்றுலாத்துறை ஏற்று நடத்தும் சுற்றுலாப் பயணங்கள்:
வாரணாசி (கன்டோ ன்மென்ட் ரயில் நிலையத்துக்கு எதி஡஢ல் உள்ளது) பரேட் கோபீ, அரசு சுற்றுலாப்பயணிகள் விடுதியிலிருந்து சுற்றுலா பஸ்கள் செல்கின்றன.

வண்டலூர்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வெளிநாடுகளிலிருந்து 2 நீர்யானைகள் வரவழைக்கப்பட உள்ளது. . இந்த பூங்காவில் ஏற்கனவே 2 ஆண் நீர்யானைகள் உள்ளன. தற்போது பிரான்சில் உள்ள லிசிக்ஸ் செர்சா உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் நீர்யானையும், லண்டனில் உள்ள மார்வல் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் நீர்யானையும் கொண்டு வரப்பட உள்ளதாக அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குனர் மிகார் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறியவகை உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், அது கிடைத்த ஒரு சில மாதங்களில் இரண்டு நீர்யானைகளும் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நீர்யானைகளுக்கு நீலநாக்கு உள்ளிட்ட நோய்கள் உள்ளதா என்று பரிசோதித்த பிறகே, அவை அழைத்துவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு ஒரு ஜோடி நீர்யானைகள் ஹோனோ லுலுவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு குட்டி ஈன்ற பெண் நீர்யானை இறந்து விட்டது.
சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் வண்டலூர் உயிரியல் பூங்காவின் வண்ணத்துப்பூச்சிகளுக்கான பிரத்யேக பூங்கா ஒன்றை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மிகார் ரஞ்சன் கூறினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இது ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார். 2009ம் ஆண்டில் இரவு நேர சபாரி அறிமுகப்படுத்தப்படும் என்று மாநில அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இங்குள்ள சிங்கங்களை காண்பதற்காக நடத்தப்படும் சபாரி, பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வால்பாறை

வால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்
விடியற்காலை ஆறு மணிக்கு கோவையில் இருந்து கிளம்பினோம். இந்த பயணம் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன். அம்மா அப்பா தங்கை நான் நால்வர். நண்பர்களுடன் இரண்டு மாதம் முன்னர் செல்ல இருந்த வால்பாறைக்கு குடும்பத்துடன் செல்கிறேன். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல வேண்டும். காலை உணவினை பொள்ளாச்சியில் முடித்து, செல்லும் வழியில் இருந்த ஆழியார் அணையில் வண்டி நின்றது.
ஆச்சரியபட வைத்த ஆழியார் அணை :
நாங்கள் தான் அணையை பார்வையிட அன்றைய தினம் முதன்முதலில் சென்றோம். கூடவே ஒரு ஜோடிப்புறாக்கள். தோட்டம் சரியாக பராமரிக்கபடவில்லை என்ற வருத்தத்துடன் உள்ளே உளவினோம். நீண்ட படிகள் ஏறி தண்ணீர் தேக்கத்தை காணச்சென்ற போது அங்கே ஓர் அழகிய ரம்மிய காட்சி காத்திருந்தது. வாழ்வில் மிக ரசித்த காட்சியில் இது மூன்றாம் இடத்தை பிடிக்கின்றது. எல்லா நேரமும் இவ்வளவு அழகான காட்சி இதே இடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வௌதயே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சி
அந்தமான் தீவுகள் சென்றிருந்த போது, ஓரு கடற்கரையில் நாங்கள் நால்வர் மட்டும் இருந்தோம். அந்தி சாயும் பொழுது. கண்ணின் பார்வை எவ்வளவு தூரம் தெரியுமோ அவ்வளவு தூரம் கடல். இளநீல நிறத்தில் நீர். இடப்பக்கம் சின்ன மலைக்குன்று. தூரத்தில் சில குன்றுகள். வலப்பக்கம் சூரியன் மறைய காத்திருந்தது. அற்புதம் என்னவெனில் கடலில் அலைகள் ஏதும் இல்லை. முட்டி அளவு தண்ணீர் மட்டுமே சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு. அந்த நேரத்தில் புகைப்படங்களில் ஆர்வம் ஆரம்பிக்காத நேரம். கருவியில் படம்பிடிக்காமல் போனாலும் இன்றும் கண் முன்னே விரிகின்றது.
ஆழியார் அணையில் சிறிது நேரம் கழித்துவிட்டு, எதிரே இருந்த மீன் காட்சியகத்திற்கு சென்றோம். இங்கு மீன்களும் அழகு, அதனைவிட அழகு நேர்த்தியாக மீன்களுக்கு கீழே அடிக்கி வைத்திருந்த கற்கள். வித வித வண்ணங்களில், வேறு வேறு வடிவங்களில், மிக நேர்த்தி. கண்டிப்பாக இந்த சின்ன காட்சியகத்தை அட இங்க என்ன இருக்க போகுது என்று விட்டுவிடாதீர்கள்.
தேயிலை தோட்ட தேன்:மலை ஏறத்துவங்கியதும் சின்னதாக ஓரு அருவி இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. இரண்டே நிமிடங்களில் அங்கே நான் முதலில் அருவியில் குளிக்க, அப்பாவும் வாகன ஓட்டுனர் விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டனர். முந்தைய நாள் கோவை குற்றாலத்தில் குளித்ததை விட நீரின் வெப்பம் சற்று கூடுதலாக இருந்தது. அரை மணி நேரம் அங்கேயே நீரில் அமர்ந்திருந்தோம். பின்னர் இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றது என வௌதயே வந்துவிட்டநூம். அப்பா கொஞ்ச நேரம் மரம் நிழலில், அருவின் ஓசையில், மெல்லிய காற்றில் திட்டு ஒன்று உறங்கினார். இந்த சமயம் விசுவின் காதல் கதை வௌதவந்தது. தான் எப்படி தன் மனைவியை காதலித்து கைப்பிடித்தார், பிரச்சனைகள் என்ன, எப்படி இப்போது சமாளிக்கிறார்,குழந்தை, தொழில் என்று பேசிக்கொண்டே இருந்தார். அண்ணா அண்ணா என்று தான் என்னை அழைத்தார். அந்த மனிதனுக்குள் தான் எத்தனை அனுபவம், இவை அனைத்தையும் மூடிக்கொண்டு பேசியபடியே பயணம் முழுக்க வந்தார்.
மொத்தம் நாற்பது ஊசிமுனை வளைவுகள் (Hairpin Bend). மெதுவாக வண்டி ஏறியது. வழியில் எங்கெங்கெல்லாம் அழகான காட்சி தென்படுகின்றதோ அங்கெல்லாம் நின்றது. மற்ற ஓட்டுனராக இருந்தால் சலிப்புற்று போயிருப்பார்கள். வேறு எங்கும் இதுவரை காணக்கிடைக்காத அளவிற்கு எங்கும் தேயிலைத்தோட்டங்கள். வால்பாறையை அடைந்ததும் அப்பாவின் வங்கி கிளைக்கு சென்று எங்கு தங்கலாம் என விசாரித்தோம். மதிய உணவினை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு சோலையார் அணைக்கு கிளம்பினோம்.
சோலையார் அணை :சோலையார் அணை சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தது. மெதுவாக வண்டி ஊர்ந்து சென்றது. அணையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம். ஒரு வண்டி மட்டும் செல்லக்கூடிய மண் பாதை. விசு லாவகமாக வண்டி ஓட்டி சென்றார். வழியில் இருவர் வண்டியை வழிமறித்தனர். ஒரு மலையாளகாரர், மற்றொருவர் தமிழர். Fullஆக இருந்தார். பாத்து போங்க அங்க யானை ஒன்னு இருக்கு.. . ஏதோ சாதாரணமாக, டீ சாப்பிடுகின்றீர்களா என்பது போல சொன்னார். யானை ஏதாச்சும் செய்யுமா? என எங்கள் வண்டியில் இருந்து. அவரும் சலிக்காமல். நேத்து ஒரு பஸ்ஸை வழிமறிச்சி, வெரட்டிடுச்சி. மெதுவா போனா எதுவும் பண்ணாது, பயப்பட வேண்டாம்.. வடிவேலு வேலு திரைப்படத்தில் சொல்லுவார் பயப்படதாவங்க எல்லாம் பயப்படுறவங்க கிட்ட பயப்படாம போ பயப்படாம போன்னு சொல்றீங்களே .. வண்டி சீறிக்கொண்டு சென்றது. ஓட்டலை நோக்கி. அருகே இருந்த மார்கெட்டிற்கு சென்று இரவு எங்கு உண்ணலாம் என்று தேடினோம். கண்டுபிடித்தோம். உண்டநூம். குடும்ப சபை கூடி முக்கிய அறிவிப்புகள், முடிவுகள் எடுத்து உறங்கினோம்.
காலை 4 மணிக்கு அப்பா எல்லோரையும் எழுப்பிவிட்டார். வாங்க இரவினை ரசியுங்கள் என்று படாதபாடு படுத்திவிட்டார். மெட்டை மாடிக்கு சென்று நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை கண்டு, குளிர் தாங்காமல் மீண்டும் போர்வைக்குள் புகுந்தேன். கலைஞரின் கட்டுரைகள் புத்தகத்தை படித்தபடி மீண்டும் தூங்கினேன். தூங்கினோம். ஒழுங்காக காலை ஆறு மணிக்கு எழுந்திருந்தால் நல்ல நடை சென்றிருக்கலாம்.

காலை நேராக ஆணைமுடி சிகரத்திற்கு சென்றோம். வழியில் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றோம். அங்கே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விநாயகர் சிலை அற்புதமாக இருந்தது. அந்த கோவிலில் இருக்கும் பூசாரி ரசிக்கவல்ல மனிதர். எழுபத்தி இரண்டு வயதாகின்றது. An interesting humorous wonderful Personality (இது பாலச்சந்தர், பாரதிராஜா மாதிரி வசனங்கள் நடுவே பீட்டர் விடும் ஒரு முயற்சி ) . விசுவும் அவரும் செம கலக்கல். ஆணைமுடி என்கின்ற கிராமத்தில் தேநீர் அருந்தினோம். அங்கே எங்களோடு சிவா (3092) என்பவர் சேர்ந்து கொண்டார். சிவா உள்ளூர்வாசி. அப்பா காலத்தில் திருநெல்வேலியில் இருந்து இங்கே வந்துவிட்டனர். தொழிற்சாலையில் பணி புரிகின்றார். நாங்கள் சென்ற தினம் விடுமுறையில் இருந்தார். அந்த ஊரைப்பற்றியும் தொழிலாளிகளின் கஷ்டங்களை பற்றியும் சொன்னார். எங்களை ஆணைமுடி சிகரத்திற்கு அழைத்து சென்றார். ஆணைமுடி சிகரம் , தென் இந்தியாவில் மேகக்கூட்டங்கள் வரும் மிக உயர்ந்த சிகரமாம். கலக்கலான இடம். அருகே சின்ன முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். சுயம்பு கோவில்.
அங்கிருந்து தேயிலை தோட்ட நடுவே பிருந்தாவனம் போல இடம் ஒன்றுக்கு அழைத்து சொன்றார். ஒவ்வொரு செடியின் மகிமை, இடம் பற்றி, மரம் பற்றி ஏராளமான விஷயம் சொன்னார். மூன்று மகன்கள். அடுத்த முறை செல்லும் போது ஆணை முடியில் ஒரு வீடு எடுத்து கொடுத்து, சமையலுக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். (அடுத்த பயணம் நண்பர்களோடு விரைவில் !!!) ஆரஞ்சு தோட்டத்திற்கு சென்றோம். வால்பாறையினை சுத்தி வந்தோம். மதியம் உணவு முடித்து மீண்டும் கோவைக்கு பயணித்தோம்.
நிச்சயமாக நேரம் போதவில்லை. மேலும் பெற்றோர்களுடன் சென்றதால் அதிக இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயம் மூன்று நாட்கள் தங்கி நன்றாக ரசிக்க ஏராளமான இடம் இங்கே இருக்கின்றது.
பார்க்க வேண்டிய இடங்கள்:-1. சோலையார் அணை2. நீரணை3. அதிரம்பள்ளி அருவி (20 கி.மீ) (புன்னகை மன்னன் அருவி)4. ஆனைமுடி சிகரம்5. பூஞ்சோலை6. பாலாஜி கோவில்7. சித்தி விநாயகர் கோவில்8. காடம்பறை அணை9. குரங்கு அருவி (Monkey Falls)
எங்கு தங்குவது:-ஒரே ஒரு நல்ல விடுதி மட்டும் இருக்கின்றது. தங்கலாம் !!! : Green Hill Hotels P.Ltd, StateBank Road, Valparai Ph: 044523- 222861 . மின்னஞ்சல் : greenhillhotel@hotmail.com
எப்படி செல்வது:-கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். வால்பாறையில் ஜீப்புகள் கிடைக்கின்றது. அல்லது கோவையில் இருந்தே ஒரு வண்டி வைத்துக்கொண்டு போகலாம், வழியில் நின்று ஆர அமர ரசிக்கலாம்.
உணவு:வௌதயூருக்கு செல்லும் போது இந்த உணவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். வால்பாறையில் எங்கு விசாரித்ததிலும் ஒரே ஒரு ஓட்டலில் மட்டும் சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார்கள். உணவு நன்றாக கிடைக்கும். லட்சுமி செட்டிநாடு மெஸ். ஐந்து சகோதரர்கள் நடத்துகின்றார்கள். இவர்களை விசாரித்தால் கூட எங்கெல்லாம் செல்லலாம் என்று உதவுவார்கள்.
வால்பாறை போன்ற இடங்களில் இங்கு தான் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது, அவரவர் ரசனைக்கேற்றவாரு எங்கும் நின்று ரசிக்கலாம். இதுவரை வால்பாறையை சிற்றுலா தளமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அப்படி அறிவிக்காத்தால் இன்னும் இந்த அழகு கெடாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதில் ஆனந்தம் தான்.

அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் கேடிஸ்ரீ தமிழகத்தில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது குத்தாலம் எனும் ஓர் ஊர். குத்தாலத்திலிருந்து திருமணஞ்சேரி என்ற ஊருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலத்தில் குடிக்கொண்டிருக்கும் உத்தவேதீஸ்வரர் சொன்ளவாறறிவார் என்றும் அழைக்கப்படுகிறார். மிருதுமுகுளகுசாம்பிகை என்ற பெயரில் அம்பாள் இங்கு வீற்றிருக்கிறார். இத்திருத்தலத்திற்கு உத்தாலமரம் (அத்திமரம்) தலைமரமாக உள்ளது.

கோயிலின் வடதுபுறம் காவிரி ஆறு பொங்கி பாய்கிறது. இங்கு ஒரு காலத்தில் ஆற்றிடைக்குறைவாக இருந்ததாகவும், அந்தப் பகுதியில் இந்த கோயில் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் 'துருத்தி' என்ற பெயரும் இவ்விடத்திற்கு உண்டு.

அன்று பல்வேறு காரணங்களால் பல்வேறு பெயர்களில் இத்தலம் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவ்விடம் 'உத்தாலம்' என்னும் ஒருவகை ஆத்திமரங்களால் சூழப்பட்ட பெரும் காடாக இருந்தததாகவும், அதனால் இவ்விடம் 'உத்தாவகவனம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றன.

இதன் காரணமாகவே உத்தாலம் இங்கு தலமரமாக போற்றப்படுகிறது. பிற்காலத்தில் உத்தாலம் என்னும் சொல்லே 'குத்தாலம்' என்று மருவி அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தலபுராணம்

உத்தவேதீஸ்வரரின் திருவிளையாடல்கள் ஒன்றல்ல.. இரண்டல்ல.. பல பல என்றாலும், அவை அனைத்தும் சுவையானவை. அத்துனையும் அற்புதமான நிகழ்வுகள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக அம்பாள் பூமியில் அவதரித்து பெண்ணாக வளர்ந்து கடைசியில் இறைவனே அவரைத் திருமணம் செய்து கொள்ளுவதை கூறலாம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இத்திருத்தலத்தில் நிகழ்ந்திருப்பதாக புராணகால வரலாறுகள் கூறுகிறது.

ஒருமுறை அம்பாளின் வேண்டுதலுக்கிணங்கி, சிவபெருமான் அவரை பூவுலகில் பரதமுனிவரின் வேள்விக்குண்டத்தில் தோன்றி அவரது பெண்ணாக வளர்ந்து வரும்படியும், தாம் உரிய காலத்தில் உலகறிய அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினாராம். இதனையடுத்து அம்பாளும் வேள்ளிக்குண்டத்தில் தோன்றி பரதவமுனிவரின் மகளாக வளர்ந்து வந்தார். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்நிலையில் ஒருநாள் சிவபெருமான் அவர் முன் தோன்றி, அம்பாளின் கைப்பற்றினார். உடனே அம்பாள் சிவபெருமானைப் பார்த்து, இதுவல்ல நான் வேண்டியது. பரதவமுனிவரிடம் நீங்கள் பெண் கேட்டு இந்த உலகம் அறிய என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்..'' என்றார். அம்பாளின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் பரதவமுனிவரிடம் பெண் கேட்டு சென்றார். அவரும் தன் மகளான அம்பாளை சந்தோஷமாக சிவபெருமானுக்கு திருமணம் செய்துதருவதாக கூறினார். இதனை அடுத்து சிவபெருமான் அம்பாளை உலகறியத் திருமணம் செய்து கொண்டார். இங்கு இறைவனாகிய சிவபெருமான் தான் கூறியவாறு நடந்து கொண்டதால் 'சொன்னவாறறிவார்'' என்று பெயர் பெற்றார். அன்று அவருக்கு குடையாக வந்த வேதம் 'உத்தால' மரமாயிற்று.

இத்தலநாயகியான அம்பாள் வேள்விக்குடியில் தோன்றியதும், திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம் செய்து கொண்டதும், பிறகு பாலிகைகளை திருமுனைப்பாடியில் கரைத்ததும், கடைசியாக திருத்துருத்தியில் கிரகப்பிரவேசம் செய்து கொண்டதும் சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

எந்த ஒரு கோயிலிலும் இல்லாத அதிசயமாக இத்திருத்தலத்தில் இரண்டு அம்பாள் சன்னதிகள் இருப்பது சிறப்பு. ஒன்று பாலாம்பிகை சன்னதி. மற்றொன்று நறுஞ்சாந்து இளமுலையம்மன் சன்னதி. இச்சன்னதி கோயிலுக்குள் உள்ளது. இச்சன்னதிக்கு எதிரில் ஒரு பலகணி உள்ளது. அதற்கு மேற்கில் உத்தாலமரம் உள்ளது. அங்குதான் உத்தவேதீஸ்வரர் தோன்றியதாக கருதப்படுகிறது. அவரது திருவடிகள் அங்குதான் காணப்படுகிறது. அந்தப் பலகணி வழியாக உத்தவேதீஸ்வரரை பார்ப்பதாக ஒரு ஐதீகம் இங்கு நிலவுகிறது. இவர் திருமணத்திற்கு முன் தோன்றிய அம்பாள்.

உத்தவேதீஸ்வரர் திருமணத்திற்கு பின் தோன்றிய அம்பாள் உத்தால மரத்திற்கு வடபுறம் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் உள்ள மிருது முகுளகுசாம்பிக்கையாகும். இவரே முக்கியமான அம்பாளாகும். இத்தலத்தில் இறைவன் பகல்வேளையில் மட்டும் தங்கி இரவில் அருகில் உள்ள திருவேள்விக்குடிக்குச் சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.

கோயில் அமைப்பு

இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு இராஜகோபுரம் உள்ளது . கோபுர வாசலை அடுத்துப் பரந்த முன்வெளியில் கொடிமரம், பலிபீடம் நந்தி ஆகியவையும், இடப்புறம் கோயிலின் புண்ணிய தீர்த்தமான பதுமதீர்த்தக்குளமும், அதன் கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சிறிய ஆலயமும் அமைந்துள்ளது. கொடிமரத்தை அடுத்த உத்தாலமரம் அமைந்துள்ளது. இதன் அடிப்பகுதியைச் சுற்றிலும் மேடை அமைக்கப்பட்டு உத்தவேதீஸ்வரின் இரு பாதுகைகள் உள்ளது சிறப்பு.

இடப்பக்கம் தெற்கு நோக்கிய சன்னதியில் பிரதான அம்பாள் எழுந்தருளியுள்ளார். அதனைச் சுற்றி அகன்ற வெளித்திருச்சுற்று. இது தற்போது உபயோகத்தில் இல்லை. தென்மேற்கில் தலவிநாயகரான துணை வந்த விநயாகரை வழிபட்டு இறைவனின் கருவறைக்கு செல்லலாம். இங்கு இறைவன் இலிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார். அதுபோல் தென்புறம் கருவறைச்சுவரில் தடசிணாமூர்த்தியை அடுத்து செம்பியன் மாதேவியடிகளின் திருஉருவச்சிலை உள்ளது. மேற்கில் பாலாம்பிக்கை சன்னதி உள்ளது. அவர் இங்கு கன்னிக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். வெளிப்புறம் அரும்பன்னவனமுலையம்மை, அனைத்து அலங்காரங்களுடன் சிரித்த முகத்துடன காட்சியளிக்கிறார்.

பூஜைகள்

தினமும் ஐந்து காலபூஜைகள் இங்கு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் உத்திராட்டாதி நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவமும், கார்த்திகை மாதம் நான்காம், ஐந்தாம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் ஆடிக் கார்த்திகையில் சுப்பிரமணியருக்கு லட்சார்ச்சனையும், நவராத்திரி மற்றும் சிவராத்திரி விழாக்களும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

பிராத்தனைகள்

ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 48 நாட்கள் பதுமதீர்த்தக்குளத்தில் நீராடி இத்திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு, இங்குள்ள சிவாச்சாரியார்கள் கொடுக்கும் மருந்தை உட்க்கொண்டால் தீராதநோய்கள் எல்லாம் தீரும் என்ற ஓர் நம்பிக்கை இங்கு அதிகம் நிலவுகிறது. அதுபோல் கன்னிப்பெண்கள் இங்குள்ள பாலாம்பிகைக்கு மலர் மாலை அணிவித்து வழிப்பட்டால் நல்ல குணமுள்ள மணமகன் கிடைப்பான் என்றும் கூறப்படுகிறது.

உலக்கை அருவி

உலக்கை அருவி
அருவியை சுற்றி பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். உலக்கை அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். கன்னியாகுமரியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவலை தாலுக்காவிலுள்ள அழகிய பாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். ஒதுக்கப்பட்ட காடுகள் வழியாகவே இதற்குச் செல்லும் பாதைகள் உள்ளன. அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர். அருவியை சுற்றி பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும்.

முருகப் பெருமானின் இரண்டாவது படை வீடு - திருச்செந்தூர்

இரண்டாவது படை வீடு - திருச்செந்தூர் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில். இங்குதான் முருகப் பெருமான் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப்பட்டு பிறகு சூரபத்மனை அழித்தார். போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷி, வெள்ளை  யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
இத்திருத்தலத்திற்கு செந்தி மாநகர் என்றும், திருச்சீரலைவாய் என்றும் பெயர்கள் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றழைக்கப்படுகிறது.
அமைவிடம் :
திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். இக்கோயிலானது தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் வருகிறது. இத்தலத்திற்கு நேரடியாக மதுரை, திருச்சி, சென்னை, கோவை முதலிய பெருநகரங்களிலிருந்து அரசு விரைவுப் பேருந்துகள் வழியாகச் செல்லலாம். சென்னை-திருநெல்வேலி செல்லும் ரயில் மூலமும் செல்லாம்.
திருச்செந்தூர் சிறப்பு :
திருசெந்தூரின் புராண வரலாற்றை ஆராய்ந்தால், முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கியதாகவும் அங்கு தேவதச்சனான விஸ்வகர்மனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி, தேவகுருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப் பெற்று அசுரர்களின் வரலாற்றினை அறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
வியாழ nக்ஷத்திரம் :
வியாழ பகவானால் பூசிக்கப்பட்ட ஸ்தலமாதலின் திருச்செந்தூர் வியாழ nக்ஷத்திரம் என்று போற்றப்படுகிறது. இங்கிருந்துதான் குமரக்கடவுள் வீரவாகுத் தேவரை அனுப்பி, சூரபத்மனுக்கு அறிவுரை கூறி வரச் சொன்னார். வீரவாகு தேவரும் தூதுச் சென்றார். ஆனால், அவரது அறிவுரைகள் சூரபத்மனால் ஏற்கப்படவில்லை. தூது பயனற்றுப் போனது. மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
சூர சம்ஹாரம் :
பிறகு முருகப்பெருமான் இங்கு அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். மனக் கருணையால் அவனை ஆட்கொண்டார்.
மாமரம் இரண்டாகப் பிளந்தது. பிளந்தவுடனேயே அதன் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
வெற்றி நகரம் :
இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடமிருந்து மீட்டு வந்தமையால், திருச்செந்தூர் ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. அப்பெயரே மருகி செந்தில் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் பொருளுண்டு. செல்வமும் அருள் வளமும் அளிக்க வல்லது திருச்செந்தூர். இத்திருநகரில் முருகப்பெருமான் ஜெயமூர்த்தியாகவே திகழ்கிறார்.
போரில் அசுரர்களை அழித்த முருகனின் வேலாயுதம் பக்தர்களின் பகையையும் அழித்து வருவதில் ஐயமில்லை.
திருமுருகாற்றுப்படை :
இந்நிகழ்ச்சியை உறுதி செய்யும் வகையில் படித்தோரை பரவசமடையச் செய்யும் திருமுருகாற்றுப்படையில்,
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்டதீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரிகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்துளைத்தவேல் உண்டே துணை."
திருச்செந்தூர் குறித்து வழங்கும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம்.
"சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி. மாமரமாய்க் காட்சியளித்த சூரபத்மனைக் கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை இது ஒரு யாத்திரைத்தலம் மட்டுமல்ல, பிராத்தனைத் தலமும்கூட. புண்ணியபூமி என்று சொன்னால் அதற்கு உதாரணம் திருவண்ணாமலை தான். இங்கே காலடி வைக்காத ஞான தபோனர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் அற்புதங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
24 ஏக்கர் பரப்பளவில் 6 பிரகாரங்களுடன் 9 ராஜகோபுரங்களுடன் மலையடிவாரத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது ஆலயம். கிழக்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் பாதாளலிங்கேஸ்வரரைத்  தரிசிக்கலாம். படியிறங்கினால் பாதாளத்தில் இருக்கிறார் ஈஸ்வரன். ரமணமகரிஷி பலகாலம் தங்கித்தவம் செய்த இடம் இது. அதை நினைத்தாலே உடம்பு சிலிர்க்கிறது. இடதுபக்கம் கம்பத்து இளையனார் சன்னதி. அழகு கொஞ்ச காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
இரண்டாவது கோபுரம் வல்லான மகாராஜா கோபுரம். அருணகிரிநாதர் இதன்மீது ஏறி, தமது ஊனுடலை நீக்கிக்கொள்ள கீழேவிழுந்தபோது, முருகன் அவரைக் காப்பாற்றி அருள் செய்தாராம். முருகன் சன்னதியில் அருணகிரிநாதரும் இருப்பதைப் பார்க்கலாம்!
மூன்றாவது கோபுரம் கிளிக்கோபுரம். அருணகிரி நாதர் தன் உடலை விட்டு நீங்கி, கிளி ரூபத்தில் போய் பாரிஜாத மலர் கொண்டுவந்தார். அப்போது அவரது உடல் காணாமல் போக, கிளி ரூபத்திலேயே கந்தர் அநுபூதி பாடிய கோபுரம் இது. அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் கிளி தெரியும்.
இந்த ஆலயத்தில் செந்தூரம் அணிந்த பெரிய திருமேனியோடு சம்பந்த விநாயகர் வெகு கம்பிரமாகக் காட்சியளிக்கிறார். கயமுகாசுரனைக் கொன்று, அவன் ரத்தத்தை தம் உடலில் பூசிக் கொண்டதாக வரலாறு சொல்கிறது.
அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் அர்த்த மண்டபம் அழகிய சலவைக்கல் திருப்பணியோடு தூய்மையாக இருக்கிறது. உள்ளே அருணாச்சலேஸ்வரர், அருளே திருமேனியாகச் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற அருணாசலேஸ்வரர் சூரியன், சந்திரன், பிரம்மன், திருமால், முதலியோரால் வழிபடப்பட்ட அண்ணாமலையார் என்று அவரைப் பற்றி நினைக்க, நினைக்க மெய் மறந்து போகிறது. உடல் சிலிர்க்கிறது.
அம்பாள் சன்னதியில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வது போல உண்ணாமலையம்மை சிறிய திருவுருவில் அருட்காட்சி வழங்குகிறார். இவருக்கும் ஒரு கதை உண்டு. பார்வதி தேவி, ஒரு சமயம் விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள். சூரிய சந்திரர்களாகவும், அக்னியாகவும் உள்ள அந்த கண்களை பார்வதி தேவி மூடியதால் உலகெங்கும் இருள் சூழ்ந்தது. தேவி பதறினாள், கைகளை அகற்றினாள்.
உலகை இருள் சூழச்செய்த பாவம் நீங்க, பார்வதிதேவி திருவண்ணாமலை வந்து பவழக் குன்றில் கடுந்தவம் செய்தாள். கார்த்திகைப் பரணிநாளில், பிரதோஷ காலத்தில், மலைமேல், ஜோதி உருவாகச் சிவபெருமான் தரிசனம் தந்து, தேவிக்குத் தன் இடபாகத்தைத்தந்தார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உலகறிந்த பெருவிழாவாக நடக்கிறது. பெரிய கொப்பரை ஒன்றில் நெய்த்துணி, கற்பூரம் ஆகியவற்றைக் கொண்டு மலையுச்சில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. கோயில் முழுக்க ஔத வெள்ளத்தில் திகழும் அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.
மலையே சிவபெருமானாக விளங்கும் பௌர்ணமி அன்று இங்கே மலை வலம் வருதல் மிக்க புண்ணியத்தை தருவதாகும். மலையின் சுற்று 10 கிலோமீட்டர். மலையைச் சுற்றி வரும்போது அஷ்டலிங்கங்கள், ஆதி அண்ணாமலையார் கோவில் மற்றும் சேஷாத்ரி  சுவாமிகள் ஆசிரமம், ரமணாசிரமம் போன்றவற்றையும் தரிசிக்கலாம். மலைப்பாதை நெடுக இரவில் வெளிச்சம் பகல்போல ஜொலிக்கிறது. (உபயம்:- நடிகர் ரஜினிகாந்த்)
ஒருமுறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற சண்டைவந்தது. இருவரும் சிவபெருமான் முன்பு போய் நின்றனர். "உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் ஜெயிப்பவர்களே.. சிறந்தவர்கள்.." என்றார் சிவன்.
மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமான் போடும் பந்தயத்திற்காக காத்திருந்தனர். சிவன் திடீரென ஆதியும், அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியாக விஸ்வரூபம் எடுத்தார்.
"உங்கள் இருவரில் யார் என்னுடைய முடியையோ, அடியையோ முதலில் காண்கிறீர்களோ, அவரே எல்லோரையும் விட பெரியவர்" என்று கூறினார் சிவன்.
பிரம்மாவும், விஷ்ணுவும் போட்டிக்குத் தயாரானார்கள்.
"நான் சிவனின் திருவடியைக் காண்கிறேன்" என்று மகாவிஷ்னு பன்றியாக உருமாறி பூமியைத் தோண்டி, உள்ளே சென்றார்.
சிவனின் திருவடிகள் பாதாளம் ஏழுக்கும் கீழே சென்று கொண்டிருந்தது. விஷ்னு ஒவ்வொரு பாதாளமாக போய் கொண்டிருந்தார்.
பிரம்மா?
சிவபெருமானின் திருமுடியைக் காண்பதற்காக பிரம்மா வானுலகில் பறந்து, பறந்து சென்றார். சிவனின் திருமுடியோ அகண்ட முகடுகளைப் பிளந்து மேலே சென்று கொண்டே இருந்தது. எவ்வளவு உயரம் போயும் பிரம்மாவால் சிவனின் முடியைக் காண முடியவில்லை!
ஒருவேளை, இந்நேரம் மகாவிஷ்ணு சிவனின் அடியைக் கண்டிருப்பாரோ என்று அச்சம் வேறு. அப்போது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.
பிரம்மன் அதை தாவிப் பிடித்து,"எங்கேயிருந்து வருகிறாய்? என்று கேட்டார்.
தாழம்பூ பதில் சொன்னது. "நான் சிவனின் தலைமுடியில் இருந்து தவறி விழுந்து பல யுகங்கள் ஆகிவிட்டன. கீழேவிழுந்து கொண்டிருக்கிறேன்."
பிரம்மா சோர்ந்து போனார். தந்திரமாய் ஒரு வேலை செய்தார். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. அதனால் தாழம்பூவுடன் ஓர் ஒப்பந்தம் போட்டார்.
அதன்படி தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு (பொய்) சாட்சி சொல்லும் படியும் தாழம்பூவிடம் கேட்டார். தாழம்பூ ஒப்புக்கொள்ள, சந்தோஷமாய் கீழே இறங்கினார் பிரம்மா. அதேநேரம், சிவனின் திருவடியைத் தேடிப்போன விஷ்ணு அதைக் காணாதபடியால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி வந்து விட்டார்!
ஆனால், பிரம்மனோ,"சிவபெருமானே.. நான் உங்களின் திருமுடியைப் பார்த்துவிட்டேன்... இதோ அங்கிருந்து தாழம்பூ கொண்டுவந்திருக்கிறேன்... இதிலிருந்தே தெரிகிறதா... நான்தான் சிறந்தவன் என்று..." என்றார்.
சிவபெருமான் சினமடைந்தார். உண்மை அவருக்குத் தெரியாதா என்ன? "பிரம்மனே... பொய் சொன்ன நீ பூமியில் போய் சராசரி மனிதனாகப் பிறப்பாயாக..." என்று சாபமிட்டார். தாழம்பூவையும் சிவபெருமான் விடவில்லை. "பொய் சொன்ன நீ பூஜைக்கு லாயக்கில்லை. சிவபூஜைக்கு உன்னை புறக்கணிப்பார்கள்" என்று தூக்கியெறிந்தார்.
உண்மையைச் சொன்ன மகாவிஷ்ணுவுக்கும், மனம் திருந்தி வந்த பிரம்மனுக்கும் கடைசியில் 'சிவ பரம்பொருளே உலகின் முழு முதற்பரம் பொருள்' என்பதை உணர்த்த சிவபெருமான் தன் அருட்பெரும் ஜோதியைக் குறுக்கி, மலை உருவில் நின்றார். அந்த ஜோதியில் இருந்து சிவலிங்கத் திருவுரு ஒன்றும் வௌதப்பட்டது.
அந்த மலைதான் திருவண்ணாமலை! அந்த சிவலிங்கம்தான் அருணாச்சலேஸ்வரர்!

திருநள்ளாறு

சனி தோஷ நிவர்த்தி தரும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர்! நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.
இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்; விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.
திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் "ஈசுவர பட்டம்" பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
அமைவிடம் :
காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.
திருநள்ளாறு :
இத்தலம் தர்ப்பாரண்யம் என்றும், பிறகு நகவிடங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டு தற்போது திருநள்ளாறு எனப் போற்றப்படுகிறது. நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு ஆறுகள் கூட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. சிலர் நளன் ஆறு என்பதே பின்னாளில் நள்ளாறு என்றாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.
இங்குள்ள திருக்குளத்தில் சனி நீராடி சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனிபகவானுடைய பாதிப்புகள் நீங்கி நலம் பல உண்டாகும்.
சனியால் பாதிக்கப்பட்ட நளன் :
சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தாள்.
நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் தெரியவருகிறது. சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்ததால் நளமகராஜனின் எல்லா துன்பங்களும் நீங்கியதாம்.
"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன்" என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.
நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.

திருச்சிராப்பள்ளி - பகுதி 7

திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாக திருச்சிராப்பள்ளியை, திருச்சி என்று அழைப்பார்கள்.
திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்த பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.
தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது ஒரு வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.

பொருளடக்கம் [மறை]1 பெயர்க் காரணம் 2 வரலாறு 3 எல்லைகள் 4 ஆறுகள் 5 அணைகள் 5.1 கல்லணை 5.2 மேலணை 6 வருவாய் நிர்வாகம் 7 திருத்தலங்கள் 8 சுற்றுலா தலங்கள் 9 திருச்சி கல்லூரிகள் 10 மக்கள் வகைப்பாடு 11 ஆதாரங்கள் 12 வௌத இணைப்புகள்
பெயர்க் காரணம்திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
வரலாறுதென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

உச்சி பிள்ளையார் கோயில் உள்ள திருச்சி மலைக்கோட்டை எல்லைகள்வடக்கில் பெரம்பலூர் மாவட்டத்தையும், கிழக்கில் பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
ஆறுகள்திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வௌ஢ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வௌ஢ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
அணைகள்
கல்லணைகல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நௌதந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வௌ஢ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.
மேலணைமேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வௌ஢ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.

திருத்தலங்கள்அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்,மலைக்கோட்டை, திருச்சி அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு சம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
சுற்றுலா தலங்கள்மலைக்கோட்டை ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் முக்கொம்பு கல்லணை வயலூர் முருகன் கோயில் கங்கை கொண்ட சோழபுரம்

திருச்சிராப்பள்ளி - பகுதி 6

திருச்சியில் மிகவும் பிரசித்திபெற்ற இடம் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில். இம்மலைக்கோவில் தரைமட்டத்திலிருந்து 83 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மலையில் குடைந்த 437 படிகளை ஏற வேண்டும். உச்சிக்கு செல்லும் பாதி வழியிலேயே தாயுமானவர் சன்னிதானம் (சிவன் கோவில்)உள்ளது.இதனுடன் இணைந்தது நுற்றுக்கால் மண்டபம் மற்றும் விமானம். மலை உச்சியிலிருந்து திருச்சி மாநகர்முழுவதையும்,&nஸ்ரீரங்கம்,காவேரி ஆறு, கொள்ளிடம் மற்றும் திருவானைக்கோவில் போன்ற இடங்களையும் காணலாம். ஸ்ரீரங்கம் தென்னகத்தின் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீரங்கம் காவேரி ஆறு மற்றும் முக்கொம்பு சூழ அமைந்துள்ளது. தெற்கே ஒடும்நதி காவேரி எனவும் வடக்கே பாயும்நதி கொள்ளிடம் என்றும் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரெங்கநாதர் பள்ளிகொண்டுள்ளார்.சுமார் 22 கோபுரங்களை கொண்ட உயர்ந்த ஸ்ரீரங்கம் கோவில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 21 கோபுரங்கள் 14வது முதல் 17வது நூற்றாண்டு வரை கட்டப்பட்டது.72மீ உயரம் கொண்ட 13 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் 1987-ல் கட்டப்பட்டது. ஜம்புகேஸ்வரர் கோவில் ஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே 2 கி. மீ தொலைவில் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. சிவனை வழிப்பட்ட யானையின் பெயரால் இச்சிவன் கோவில் பெயர் பெற்றுள்ளது(திருவானைக்கோவில்). ஜம்பு மரத்தின் அடியில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கமானது நீர் முழ்கியுள்ளது.இதுநீர் அவதாரத்தில் கடவுள் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. உத்தமர் கோவில் இத்திருக்கோவில் திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிரம்மா,சிவா,விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களும் ஓரே இடத்தில் காணப்படுவது இக்கோவிலின் சிறப்பாகும். 108 முக்கிய சிவதலங்களுள் இதுவும் ஓன்றாகும். கல்வி கடவுளான சரஸ்வதிக்கென தனி சன்னிதானம் உண்டு. ஆழ்வார்கள் 12 பேர்களில் ஓருவரான திருமங்கையாழ்வார் இக்கோவில் பற்றி பாடியுள்ளார். சமயபுரம் கோவில் மாரியம்மமன் கோவில் கொண்டுள்ள தலம். தேசிய நெடுஞ்சாலை 45-ல் திருச்சியிலிருந்து 20 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. புனித அந்தோனியார் ஆலயம் திருச்சி நகரின் நடுவில் உள்ள இவ்வாலயத்தை சுற்றி கடைகள் அதிகம் உண்டு. இக்கோவில் மிகச்சிறந்த கலைநயத்துடன் கூடிய கட்டுமானத்துடன் அமைந்துள்ளதால் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களுள் ஓன்றாகும். ஹசரத் நாதர்வளி ஓராயிரம் பழமைவாய்ந்த இந்த தர்கா திருச்சியின் மைய பகுதியில் அமைந்துள்ளது. பளிங்கினால் ஆன முலஸ்தானம் தர்காவிற்கு மேலும் அழகூட்டி காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. முக்கொம்பு முக்கொம்பு- காவிரி நதியிலிருந்து கொள்ளிடம் பிரியுமிடத்தில் திருச்சியிலிருந்து 18 கி.மீதொலைவில் உள்ள உல்லாச பொழுது போக்குமிடம்.சிறுவர்கள்,பெரியவர்கள் என அனைவருக்குமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது.
கல்லணை கல்லணை- திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கல்லணை.வரலாற்று சிறப்புமிக்க கல்லணை நீர் தேக்கம் கரிகால சோழமன்னனால் கட்டப்பட்டது.இதுவும் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஒரு சிறந்த பொழுது போக்குமிடம். வெக்காளியம்மன் கோவில் வெக்காளியம்மன் கோவில்- உறையூரில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன்திருக்கோவில் திருச்சியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் உண்டு. வயலூர் வயலூர்- திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வயலூர்,குமாரவயலூர் என்றும் அறியப்படும். இத்தலம் முருக்க கடவுள் குடிகொண்டுள்ள இடமாகும். புளியஞ்சோலை புலியஞ்சோலை- திருச்சியிலிருந்து 72 கி.மீ தொலைவில் கொல்லிமலைத் தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய நீர் வீழ்ச்சி கொண்ட சுற்றுலா இடமாகும்.

மூன்றாவதுபடை வீடு - பழனி

மூன்றாவதுபடை வீடு - பழனி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.
பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.
இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியதே என்பர்.
இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் "திரு ஆ இனன் குடி" என்று பெயர் பெற்றது.
திரு - லட்சுமிஆ - காமதேனுஇனன் - சூரியன்கு - பூமாதேவிடி - அக்கினிதேவன்
இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.
அமைவிடம் :
மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.
இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.
மலையின் மகிமை :
பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திரு நீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டநூர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.
திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.
கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.
பழம் நீ - பழனி :
முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.
பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.
முருகனின் திருவிளையாடல் :
பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தபடியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். முருகன் இதில் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.

திருநள்ளாறு - பகுதி 2

சனி தோஷ நிவர்த்தி தரும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர்! நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.
இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்; விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.
திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் "ஈசுவர பட்டம்" பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
அமைவிடம் :
காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.
திருநள்ளாறு :
இத்தலம் தர்ப்பாரண்யம் என்றும், பிறகு நகவிடங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டு தற்போது திருநள்ளாறு எனப் போற்றப்படுகிறது. நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு ஆறுகள் கூட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. சிலர் நளன் ஆறு என்பதே பின்னாளில் நள்ளாறு என்றாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.
இங்குள்ள திருக்குளத்தில் சனி நீராடி சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனிபகவானுடைய பாதிப்புகள் நீங்கி நலம் பல உண்டாகும்.
சனியால் பாதிக்கப்பட்ட நளன் :
சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தாள்.
நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் தெரியவருகிறது. சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்ததால் நளமகராஜனின் எல்லா துன்பங்களும் நீங்கியதாம்.
"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன்" என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.
நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.

திருமால் திருக்கோவில் வழிபாட்டு மரபுகள்

பக்தியின் மொழி தமிழ் என்று போற்றப்படுகின்றது. தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி இயக்கம் இந்தியா முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வைணவப் பக்தி இயக்கம் வட இந்தியாவில் சமூக, சமய வழிபாட்டு நெறிகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடல்லாமல், அவ்வவ் வட்டார மொழிகளின் மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவியது. தமிழ்ப் பக்திப் பேராற்றில் இணைகளில் ஒன்றாகிய வைணவத்தின் எழுச்சியில் பொங்கியெழுந்த ஆழ்வார்களின் அருளிச்செயல் வெள்ளம், தமிழ்நாட்டுத் திருமால் திருக்கோவில் வழிபாட்டு மரபுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இக்கட்டுரை ஆராய முயல்கின்றது.
'ஆழ்வார்' என்ற சொல் வைணவ மரபுகளில் 'பக்தியில் ஆழங்கால்பட்டவர்' என்று பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால், கல்வெட்டுகளில் ஆளும்வர்க்கத்தினர் ஆள்வார்/ஆழ்வார் என்று பொறிக்கப்பட்டுள்ளனர். 'நாயன்மார்' என்னும் சொல் 'தலைவர்கள்' என்னும் பொருளைத் தருவது போன்றே, 'ஆழ்வார்' என்னும் சொல்லையும் பக்தியால் மக்களை ஆளுகை செய்தவர்/தலைவர் என்று பொருள் கொள்வதே வரலாற்று நியதிக்கு ஒத்ததாகும்.
ஆழ்வார்களுள் உயர் சாதியிரான பிராமணர் முதல் இழிகுலத்தோர் என ஒதுக்கப்பட்ட பாண் சாதியினர் ஈறாகப் பலரும் அடங்குவர். எனினும், இவ்வியக்கத்தை முன்னின்று நடத்திய நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் வருண அமைப்பில் நான்காம் படியில் இருந்த சூத்திரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஒப்பிடும்போது, சைவ பக்தி இயக்கத்தை முன்னின்று நடத்திய சைவ சமய குரவர் நால்வரில் மூவர் பிராமணர் என்பது இங்கே ஒப்பு நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
திருக்கோயில்களில் இறைவன் முன்னர் நாயன்மார்கள், ஆழ்வார்களின் தமிழ்ப் பாக்களை விண்ணப்பிக்கும் வழிபாட்டு மரபு பல்லவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. இம்மரபு கோவில்களில் பூசனை நெறிகளுள் இன்றியமையாத ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் உருவாக்கம் பெற்ற சோழப் பேரரசு, இப்பாடல்களைத் தேடி மீள்கண்டுபிடிப்புச் செய்து, தொகுத்தும் வகுத்தும் அவற்றுக்கொரு தத்துவப் பின்னணியைக் கொடுக்க வேண்டிய சூழலை எதிர்கொண்டது. நம்பியாண்டார் நம்பி சோழப் பேரரசின் துணைகொண்டு தேவாரத் திருமுறைகளைத் தொகுத்து, அவற்றின் பண்புகளையும் மீட்டுருவாக்கம் செய்தார். நாதமுனி ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அரசின் துணையின்றித் தாமாகவே நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் தொகுத்து வௌதப்படுத்தினார்.
நாதமுனியின் தொகுப்பு திருமால் திருக்கோவில் வழிபாட்டு நெறிகளில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வழிபாடும் சமயமும் தத்துவமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கவொண்ணாதபடி வைணவ ஆசாரியர்களின் வாழ்க்கையை அது உருவாக்கியது. தமிழ் மொழியில் இயற்றப்பட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், தேவபாடை எனப் போற்றப்பட்ட வடமொழி வேதங்களுக்கு ஒப்பானவை என்னும் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. அதுவரை, எந்த ஒரு தேசிய மொழியும் கோவில் மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாதமுனிக்குப் பின்னர் வந்த ஆசாரிய பரம்பரையினர் இக்கருத்தாக்கத்தின் தளத்தை மேலும் விரிவுபடுத்தினர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களும் வேதங்களைப் போன்றே இறைவனால் அருளப்பட்டவை; அநாதியானவை; வேதங்களின் உட்பொருளையே விளக்குபவை என அவர்கள் விளக்கவுரை எழுதினர். இராமாநுஜர் தம்முடைய விசிட்டாத்துவிதத் தத்துவத்தைச் சங்கரருக்கு மறுப்பாக வடமொழியில் எழுதிய போது, ஆழ்வார்களின் பாசுரங்களே வேத உபநிடத வாக்கியங்களைத் தௌதவாகப் புரிந்து கொள்ள அவருக்கு உதவின என்பர். வேதாந்த தேசிகரும் இக்கருத்தைச் ''செய்ய தமிழ் மாலைகள் நாம் தௌதய ஓதி, தெரியாத மறை நிலங்கள் தௌதகின்றோமே'' என்று குறிப்பிடுகின்றார். ஆழ்வார்களின் அருளிச் செய்லகள் திராவிட வேதம் எனப்பட்டது. உபய வேதாந்தம் என்னும் கோட்பாடு வைணவர் மத்தியில் உருவாயிற்று.
பாஞ்சராத்திர ஆகமத்தைப் பின்பற்றிய நாதமுனி தொடக்கமான வைணவ ஆசாரியர்கள், திருவரங்கக் கோவிலிலும் மற்றைய திருமால் திருக்கோவில்களிலும் வழிபாட்டு நெறிகளைச் சீர்திருத்தி அமைத்தபோது, ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முதன்மை நல்கினர். அவை கோவில் கருவறைக்குள் விண்ணப்பிக்கப்பட்டன. நாள் வழிபாட்டில் இறைவனைத் துயிலெழுப்பி நீராடச் செய்து பூச்சட்டி திருவமுது செய்யவைத்தல் போன்ற பாவனச் சடங்குகளில் திருப்பள்ளியெழுச்சி, நீராட்டம், பூச்சுடல் போன்ற திவ்யப் பிரபந்தப் பாடல்களைப் பாடி, ஓதினர். திருமால் திருக்கோவில்களில் வேத அத்யயனம் போன்றே தமிழ்ப் பாசுரங்களும் திருவத்யயனம் என்னும் பெயரால் ஒழுங்கு படுத்தப்பட்டது.
திருவாய்மொழி திருவரங்கம் பெரிய கோவிலில் திருமங்கையாழ்வார் காலம் முதலே (கி.பி.9 ஆம் நூற்றாண்டு) இறைவன் திருமுன்னர் விண்ணப்பம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நாதமுனி இவ்வேற்பாட்டை மேலும் செம்மைப்படுத்தி, வைகுந்த ஏகாதசியை ஒட்டி, ஆழ்வார்களின் பாசுரங்கள் நாலாயிரத்தையும் திருமால் திருக்கோவில்களில் விண்ணப்பிக்கும்படி செய்தார். இது உண்மையில் ஒரு தமிழ்த் திருவிழா என்பதில் ஐயமில்லை. மேலும், அவர் ஆழ்வார்களின் பாசுரங்களின் உட்பொருளை அரையர் சேவை மூலமாக நாடகமாக நடிக்கவும் எற்பாடு செய்தார். திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்திக்கு முன்னர் ஆழ்வார்கள் பாசுரங்களை ஒதிச் செல்லுதல் வைணவ மரபுகளுள் ஒன்று. சைவ மரபுகளுள் திருப்பதிகங்கள் இறைவன் பின்னால் ஓதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை

ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற பிரதீஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ள அழகிய நகரமாகும் தஞ்சை.
தஞ்சையைச் சுற்றிப்பார்க்க உகந்த காலம் அக்டநூபர் மாதத்தில் இருந்து மார்ச் வரையிலாகும். அந்த சமயத்தில்தான் அங்குள்ள தட்பவெப்பம் அருமையாக இருக்கும்.
அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உண்டு. தரிசிக்க பிரதீஸ்வரர் கோயில், பார்க்க மாளிகை, சங்கீதா மஹால், சரஸ்வதி மஹால், படிக்க பெரிய நூலகம், கண்டு அறிய ராஜா அருங்காட்சியகம், கோயில் அருங்காட்சியகம் உட்பட ஏராளம் ஏராளம்.
தஞ்சை செல்லும் சுற்றுலாப் பயணிகள், விமானம் வழியாக செல்ல திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து தஞ்சை செல்லலாம்.
ரயிலில் செல்ல வேண்டுமானால், திருச்சி, மதுரை, சென்னை, சிதம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து தஞ்சாவூருக்கு நேரடி ரயில்கள் உள்ளன.
சாலை மார்கமாக செல்ல : சிதம்பரம், கன்னியாகுமாரி, கும்பகோணம், சென்னை, மதுரை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், திருச்சிராப்பளியில் இருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சையை சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அருகில் இருக்கும் வேளாங்கன்னி (95 கி.மீ.), கோடிக்கரை (30 கி.மீ.), பூம்புகார் (100 கி.மீ.) போன்ற இடங்களையும் பார்த்துவிட்டு திரும்பலாம்.

தம்புள்ளை பொற்கோவில்

தம்புள்ளை பொற்கோவில் (தம்புள்ளை குகையோவியங்கள்) இலங்கையின் மத்திய மாகாணம், மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். கொழும்புக்கு கிழக்கே 148 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டிக்கு வடக்கே 72 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்துக்கு எழும் சிறு மலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது. இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன. 4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்கும். 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில், புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு (பிரசங்கம்), புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை.

தஞ்சாவூர் - பகுதி 3

சோழர்களின் தலைநகரமாய் விளங்கிய தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பிரஹதீஸ்வரர் கோயில் அமைந்த நகரம் தஞ்சை. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தி இந்தக் கோவிலில்தான் உள்ளது. தஞ்சை சரசுவதிமகால் நூலகம் உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது. கி.பி. 1400களில் இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.
சித்தன்னவாசல், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலே உள்ள குகை ஓவியத்திற்குப் புகழ் மிக்க ஊர். இவ்வூரில் உள்ள கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.
நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச் சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். இது தஞ்சை மாவட்டக் கடலோரத்தில் உள்ள பேராவூரணி அருகில் உள்ளது.
திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாக திருச்சிராப்பள்ளியை, திருச்சி என்று அழைப்பார்கள். திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மலைக்கோட்டையாகும். காவிரியின் தென்கரையில் இது கம்பீரமாக அமைந்துள்ளது. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் இது மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோவிலும், மேலே உச்சிப்பிள்ளையார் கோவிலும், இடையே தாயுமானவர் கோவிலும் உள்ளன.

தஞ்சாவூர் - பகுதி 2

இராஜேந்திர சோழன் கட்டிய பெருவுடையார் கோயில்! தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழப் பேரரசர் இராஜ இராஜ சோழர் கட்டிய வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலைப் போன்று, அவரது மகன் இராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய பெருவுடையார் கோயிலும் தமிழரின் கட்டடக் கலைக்கு அழகிய சான்றாய் இன்றளவும் அழியாமல் நிற்கிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து 10 கி.மீ. தூரத்திலுள்ளது கங்கை கொண்ட சோழபுரம். கும்பகோணம் செல்லும் பிரதான சாலையிலிருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள இக்கோயில், இந்திய தொல்லியல் துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு தற்பொழுது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக (யுனிசெஃப்) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பேரரசர் இராஜ ராஜ சோழருக்குப் பின் அரியணையேறிய இராஜேந்திர சோழர், கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டியது மட்டுமின்றி, வங்கக் கடல் கடந்து கடாரம் (இன்றைய புரூனே/சாரபாக் தீவு) வரை வென்று புகழ் பெற்றவர்.

இப்படிப்பட்ட பெரும் வெற்றிகளுக்குப் பிறகு இராஜேந்திர சோழரின் அரசு, வடக்கே துங்கபத்திரை ஆற்றை எல்லையாகவும், தெற்கே இலங்கைத் தீவை எல்லையாகவும் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. பரந்துபட்ட பேரரசை உருவாக்கிய இராஜேந்திர சோழர், தனது தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினார். புதிதாக தலைநகரை உருவாக்கினார். அதுவே கங்கை கொண்ட சோழபுரம்.
தனது தந்தை இராஜ ராஜ சோழரைப் போல், பெருவுடையாருக்கு (சிவபெருமான்) கோயில் கட்டி, அதை மையமாகக் கொண்டு தனது தலைநகரை
தஞ்சை பெரிய கோயிலைப் போலவே அமைப்பிலும், வடிவிலும் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டது இத்திருக்கோயில். 11வது நூற்றாண்டில் - 1030வது ஆண்டில் இக்கோயிலை கட்டிமுடித்தார் இராஜேந்திர சோழர்.
கங்கை கொண்ட சோழபுரமே அடுத்த 250 ஆண்டுகளுக்கு சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியுள்ளது.
இக்கோயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இராஜேந்திர சோழர் தனது அரண்மனையைக் கட்டியிருந்தார். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மனை காலத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து நிற்கவில்லை. இன்றைக்கு அவ்விடம் மாளிகை மேடு என்று அழைக்கப்பட்டாலும் மணல் மேடாக, ஒரு வரலாற்று சுவடாகத்தான் திகழ்கிறது. ஆனால், தான் வணங்கும் தெய்வத்திற்காக, கல்லே கிடைக்காத தஞ்சை மண்ணிற்கு பெரும் கற்களை கொண்டுவந்து நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் இராஜேந்திரனது ஆட்சிக்கும், மாட்சிமைக்கும் சான்றாக நின்று கொண்டிருக்கிறது.
தஞ்சை கோயிலில் காணும் பல சிறப்புக்கள் இக்கோயிலில் இல்லையென்றாலும், தெய்வீகத்திற்கும், சிற்ப, கட்டட கலைகளுக்கும் உன்னதமான சான்றாகத் திகழ்கிறது இத்திருக்கோயில்.
சுற்றிச் சுற்றிவந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று எண்ணவைக்கும் இக்கலைப் பொக்கிஷத்தை அடையாளம் கண்டு அழிவிலிருந்து காப்பாற்றி உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற தொல்லியல் துறை மிகுந்த பாராட்டிற்குறியது.
இவ்விடத்திற்குச் செல்ல...
சென்னையிலிருந்து 250 கி.மீ. தூரத்தில், கும்பகோணம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் குறுக்கிடும் ஜெயங்கொண்டம் கூட்டுச் சாலையில் இறங்கி, அங்கிருந்து மேற்காக 4 கி.மீ. தூரம் சென்றால் கங்கை கொண்ட சோழபுரத்தை அடையலாம்.
தங்குமிடம் : கும்பகோணத்தில் தங்கிக்கொண்டு ஒரு மணி நேர பயணத்தில் இவ்விடத்திற்கு வரலாம்.

தஞ்சாவூர் - பகுதி 1

சோழமன்னர்களின் ஆட்சிகாலத்தில் தலைநகரமாக விளங்கிய தஞ்சாவூர் திருச்சியிலிருந்து கிழக்கே 55 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி நதியின் நீர் பாசனத்தால் செழிப்பாக விளங்கும் தஞ்சை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் ராஜ்ஜியத்தில் மிகவும் புகழ்பெற்ற சக்கரவர்த்தி ராஜசோழ காலத்தில் கட்டட நிர்மான கலைகளின் பெருமை தஞ்சையில் கோவில்களாகவும் நினைவுச்சின்னங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கலாச்சார முன்னேற்றத்திற்கு பெயர் பெற்று விளங்கும் இம்மாவட்டம் கைத்தொழில் ஈடுப்பட்டு இருப்பவர்களை கவர்ந்து கைவினை வர்த்தக பொருள்களை உருவாக்குகிறது. கலாச்சாரம், கைத்தொழில்தந்திரம் முதலியவற்றை கற்று கொடுப்பதில் பரம்பரை உரிமை கொண்டுள்ளது. இங்கு மென்மையான பட்டு கம்பளம், ஆபரணங்கள், மெல்லிய தங்க தகடுகளில் வரைந்த தஞ்சை ஒவியங்கள், இசைக்கருவிகள், வெண்கலத்தாலான சிற்ப்பங்கள் போன்றவற்றிற்காக புகழ்பெற்று விளங்கிறது. ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் சோழர் காலத்தின் கட்டட நிர்மான கலையின் பெருமைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் ராஜ ராஜ சோழ சக்கரவர்த்தியால் 10-ம் நூற்றாண்டில் கட்டடப்பட்டுள்ளது. சிவ தலங்களில் ஒன்றான இக்கோவிலின் கோபுரத்தில் காணப்படும் சிற்ப்பங்கள் விஷ்ணு கடவுளுக்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தமத சிற்பங்கள் கோவிலினுள் காணப்படும். இத்தலத்தில் உள்ள மிகப்பெரிய நந்தி சிலை இந்தியாவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 80 டன் கருங்கல்லால் உருவாக்கப்பட்ட கோபுரத்தின் சிற்ப்பங்கள் திராவிட கைத்தொழிமூலுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும். அரண்மனை கோவிலுக்கு அருகே அமைந்துள்ள அரண்மனை கி.பி 1550-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. பெரிய தாழ்வாரங்கள், மண்டபங்கள், கூடங்கள், மிக உயரமான ஆயுத சாலைகள் போன்றவற்றை கொண்டு அமைந்த இந்த பெரிய அரண்மனையின் கொத்த வேளைகள் நாயக்கர்களாலும் மேலும் மேற்கே ஒரு பகுதி மராட்டியர்களாலும் கட்டபட்டடுள்ளது. இங்கு காணப்படும் தர்பார் மண்டபம் இக்காலகட்டத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மேலும் கலைகூடம், சரஸ்வதி மஹால் நூலகம், ராயல் அருகாட்சியகம் மற்றும் இசைக்கூடம் உள்ளது. கலைக்கூடம் இக்கலைகூடத்தில் அற்புதமான வெண்கல கடவுள் சிலைகள், விலை மதிப்பற்ற கற்சிற்ப்பங்கள் சோழர் காலத்தின் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் உள்ளது. கலை ஆர்வமிக்கவர்களின் கண்களுக்கு விருந்தாக இக்கலைகூடம் அமைந்துள்ளது. ராயல் அருங்காட்சியகம்&சரபோஜி நினைவிடம் அரண்மனையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ராயல் அருங்காட்சியகம் மராட்டியர்களுக்கு சொந்தமான அரிய தொல்பொருட்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கையொழுத்து பிரதிகள், கலைப்பொருட்கள் ஆயுதங்கள், யாணை தந்தங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள், கண்ணாடி, மரம், துணி வகைகள், தோல் வகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மராட்டிய வரலாற்றை விளக்கும் வண்ணம் இங்கு காணப்படும் இசைக்கருவிகள், உடைகள், ஒவியங்கள், கற்கள், உலோக சிற்ப்பங்கள், மரத்தாலான பொருட்கள் உள்ளது. தொல்காப்பியர் சதுக்கம் 8-வது உலக தமிழ்மாநாட்டின் போது தொல்காப்பியர் சதுக்கம் கட்டப்பட்டுள்ளது. உயர்ந்து காணப்படும் இந்த சதுக்கத்தின் மேலிருந்து பார்த்தால் தஞ்சை மாநகரை முழுவதையும் காணலாம். சங்கீதா இசை அரங்கம் செவிப்புலனுக்கு ஏற்றவாறு திறம்பட கட்டப்பட்ட சங்கீதா மஹால் தஞ்சை அரண்மனையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய கால கட்டட தொழில் நிபுணர்களின் பொறியியல் திறமைக்கு ஓர் எடுத்துகாட்டாக விளங்கிறது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சையிலிருந்து 6 கி.மீ தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. தஞ்சை மாவட்டதின் மிக பிரத்திமானது இக்கோவில். சரஸ்வதி மஹால் நூலகம்: உலக சரித்திரத்தின் மத்திய காலத்தை சார்ந்த நூலகங்களில் ஒன்றாக விளங்குகிறது தஞ்சை மகாராஜ சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம். பழமைவாய்ந்த பாணிக்கும் காலத்துக்குறிய பணம் பெருமதியான பொருட்கள் முதலியவற்றை விளக்கும் இந்நூலகம் நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்களின் ராஜ்ஜியத்தின் சிறப்பை கூறுகிறது. பண்டைகால கலை, கலாச்சாரம, இலக்கியம் போன்றவற்றிற்கு உதாரணமாக இங்கு மதிப்புள்ள அறிய கையொழுத்து பிரதிகள், புத்தகங்கள், வரைப்படங்கள், ஒவியங்கள் உள்ளன. பிரட்டானிக்கா என்சைக்கலோ பீடியா நடத்திய நூலக கணக்கெடுப்பில் சரஸ்வதி மஹால் நூலகம் இந்தியாவின் மிக பிரத்திமான நூலகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16-ம் நூற்றாண்டில் நாயக்கரால் அரண்மனை நூலகம் என பெயர் சூடப்பட்டு பின்னர் மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் இந்திய அரசால் பராமரிக்கப்படும் இந்த நூலகம் 1918-ம் ஆண்டில் பொது நூலமாக மாற்றப்பட்டது. சர்ஜா மடை:சுற்றுலா பயணிகள் இங்கிருந்து தஞ்சை மாநகரை கண்டு களிக்கலாம். மரசிற்ப்பங்களை கொண்ட சர்ஜா மடை அரண்மனை வளாகத்தில் உள்ளது. ராஜராஜன் மணி மண்டபம்:இந்த மண்டபம் 8-ம் உலக தமிழ் மாநாட்டின் போது கட்டப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான பொருட்களை கொண்டு சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் அருங்காட்சியகம்: இந்த அருங்காட்சியகம் ராஜ ராஜன் மணிமண்டபத்தின் அடிதளத்தில் சுற்றுலா பயணிகள் பயணடைய செயல்ப்படுகிறது. தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. நாகேஸ்வரன் கோவில்:சோழர் காலத்தின் சிற்பங்களை சிறப்புற விளக்கும் இக்கோவில் கி.பி 1005-ம் ஆண்டு தஞ்சையிக்கு மிக அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பிரார்தனை, அழகியியல், புராண கதை போன்றவற்றிற்கு பிரசித்தமாக விளங்குகிறது. வௌதநாட்டவர்கள் பலரும் இக்கோவிலில் உள்ள சிற்ப்பங்கள், கல்வொட்டு முதலியவற்றை ஆர்வமுடன் அறிந்து கொள்கிறார்கள். அயிராவதீஸ்வரர் கோவில் :தஞ்சையிலிருந்து 34 கி.மீ தொலைவில் தாராசுரத்தில் அயிராவதீஸ்வரர் கோவில் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவில் உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக யுனஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு : ஒரத்தநாட்டில் மராட்டிய சத்திரம் சரபோஜி இரண்டாம் மன்னரின் மனைவி ராணி முத்தமாள் காலத்திற்கு பிறகு அவர் பெயரால் அமைக்கப்பட்டது. இரத வடிவில் காணப்படும் இச்சத்திரத்தில் அதிகமான அளவில் சமயம் சார்ந்த மரச்சிற்ப்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட்ள்ளது . மனோரா : தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வரலாற்று புகழ்மிக்க உயரமான நினைவுச்சின்னமாக மனோரா விளங்கிறது. தஞ்சையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இச்சிறிய கோட்டை பலகோண வடிவில் 8 மாடி உயரம் கொண்டது. நெப்போலியனை வெற்றிகண்ட வெள்ளையர்களை சிறப்பிக்க சரபோஜி இரண்டாம் மன்னரால் 1815-ம் ஆண்டு மணோரா கட்டப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை : தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்து தொழில்களை கொண்டது பட்டுக்கோட்டை. பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா, கல்ப் போன்ற நாடுகளிலிருந்து முதலீடுகள் இந்நகரத்தின் வர்த்தக வளர்ச்சி உதவுகிறது. மேலும் சமீப காலத்தில் லண்டலிருந்து முதலீடு வரத் தொடங்கியுள்ளது. மடக்கூர், அறந்தாங்கி, துவரங்குறிச்சி, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, ஒரத்தநாடு, பாபநாடு போன்ற முக்கிய நகரங்கள் பட்டுக்கோட்டையை சுற்றி உள்ளது. குவார்ட்ஸ் தேவாலயம்: அரண்மனை தோட்டத்தில் உள்ள இந்த தேவாலயம் கி.பி 1779-ம் ஆண்டு சரபோஜி மன்னரரால் கட்டப்பட்டுள்ளது. சரபோஜி மன்னர் சமய பிரசாரகர் Rev.C.V குவார்ட்ஸ் மேல் கொண்ட அன்புக்கு அடையாளமாக இந்த தேவாலயத்தை உருவாக்கியுள்ளார். கடந்த காலத்தில் வெள்ளையரின் இராணுவம் வழிப்பட்டதாக கூறப்படுகிறது.

வரதய்யா பாளையம்

தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள வரதய்யா பாளயம் அருகே அற்புதமான ஒரு சிறு நீர்வீழ்ச்சி உள்ளது. தீவிர சுற்றுலா விரும்பிகள் மட்டுமே அறிந்த இடமாக இருந்தாலும் அனைவராலும் ரசிக்கக் கூடியது.
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில், நெல்லூர் மாவட்டத்தில் தடாவைத் தாண்டியதும் தெற்காகத் திரும்பும் ஸ்ரீ காளஹஸ்த்தி செல்லும் சாலையில் 11 கி.மீ சென்றால் வரதய்யா பாளையத்தை அடையலாம்.
அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மீண்டும் தெற்காக ஒரு சிறிய சாலை பிரியும். ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சி எங்கு என்று அங்கிருப்பவர்களைக் கேட்டால் வழி சொல்வார்கள். (அதன் உண்மையானப் பெயர் உப்பலமடுவு நீர்வீழ்ச்சி. ஆனால் தடா நீர்வீழ்ச்சி என்று அறியப்பட்டுள்ளது).
ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை (10 கி.மீ. தூரம்) கரடு முரடாக இருக்கும். பாதி தூரத்திற்கு சரளைக் கற்களால் நிறம்பிய பாதைதான். அதன்பிறகு மண் பாதை, சிறிது தூரத்திற்கு கூழாங்கல் நிறைந்த மிக்க் கடினமான பாதை. எனவே எந்த வாகனத்தில் சென்றாலும் மிக எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
கண்ணிற்கு எட்டியவரை நீண்ட பாதை மட்டுமே தெரியும். சாலை என்று அழைக்கப்படும் சிறு சிறு பாறைகள் நிறைந்த அந்த பாதைக்கு இரு மருங்கிலும் விதவிதமான செடிகளும், மரங்களும், கொடிகளும் படர்ந்திருக்கும்.
அப்படியே ஒரு சில கிலோ மீட்டர்கள் பயணித்தால் அந்த சாலை ஓரிடத்தில் முடிவுக்கு வரும். நீங்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்றிருந்தால் வேறு வழியே இல்லை. அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு சிறு ஓடையைக் (அந்த நீர்வீழ்ச்சிதான் ஓடையாக) கடந்து நடந்து செல்ல வேண்டும்.
ஒரு வேளை இருசக்கர வாகனத்தில் சென்றால் அந்த ஓடையில் உங்கள் வண்டியை இறக்கி தள்ளிக் கொண்டு சென்று பின்னர் ஓட்டிக் கொண்டு செல்லலாம். ஏனெனில் அது ஒத்தையடிப் பாதை.
நீங்கள் நடந்தாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி சரியாக 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த சுற்றுலாத் தலம் குழந்தைகள், முதியவர்களுக்கானது அல்ல. ஏனெனில் இத்தனை தூரம் அதுவும் கரடுமுரடான பாதையில் நடப்பது இவ்விருவருக்குமே சற்று சிரமமான காரியம்.
நடப்பது வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் அவ்வாறு இல்லை, இரு மருங்கிலும் இருக்கும் விதவிதமான செடிகளையும், நடுநடுவே ஓடும் ஓடைகளையும் தாண்டிச் செல்கையில் எந்த வலியும் தெரியாது.
5 கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் நீர்வீழ்ச்சியின் முக்கியமானதொரு இடத்தை அடையலாம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அடர்ந்த மரங்களுக்கு இடையே அந்த நதியின் ஓரத்தில் உள்ள இடம்தான் ஜப்பலமடுவு. தடா நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் ஒரு பெரிய ஓடையை காணலாம். அங்கு ஆள் மூழ்கும் ஆழத்திற்கு நீர் இருக்கும். குதித்தும், நீந்தியும், ஆடியும், பாடியும் மகிழலாம். உடலுக்கும், மனதிற்கும் சக்தியை ஏற்றிக் கொண்டு தடா நீர்வீழ்ச்சியைக் காண ஆயத்தமாக வேண்டும்.
2 கிலோ மீட்டர் தூரம் இந்த பயணம் அமையும். இதை மட்டும் நீங்கள் அடைந்துவிட்டால் போதும்.... பூமியில் இருக்கும் அந்த சொர்கத்தை நீங்கள் காணலாம். மலையின் உச்சியில் இருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கும். அங்கு நீங்கள் தண்ணீரில் ஆட்டம் போடலாம். நீச்சலடித்து மகிழலாம், ஆனந்தக் குளியல் போடலாம். மலையின் உச்சயில் இருந்து கண்ணாடி போன்ற கற்களை சல்லென தழுவிக் கொள்ள அருவி மகள் கொட்டுவதையும், அங்கே சூழ்ந்திருக்கும் பாறைகள் அவளை ஏந்திக் கொள்வதையும் காணக் கண் கோடி வேண்டும்.