Monday, July 14, 2008

மாமல்லபுரம்

மாமல்லபுரம். சென்னையிலிருந்து சுமார் 58கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த தலை சிறந்த சுற்றுலா தலம்.
பாலியின் நினைவாக மஹாபலிபுரம் என்று மாமல்லபுரம் அழைக்கப்படுகிறது.
பல்லவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மாமல்லபுரம் ஒரு சான்றாக விளங்குகிறது.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந் தமாமல்லபுரத்தில் சுமார் 40 வகையான புராதானச் சின்னங்கள் உள்ளன. இவற்றில் புடைப்புச் சித்திரங்கள் உலகில் மிகப் பழமை வாய்ந்தவை என்று கருதப்படுகிறது.
மாமல்லபுரத்தைச் சுற்றிப் பார்க்கவும், கடற்கரையில் குளிக்கவும் வௌதநாட்டினர் பெரிதும் விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டின் கோவில் நகரமான மாமல்லபுரத்தில் எல்லா வகையான அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
கலை, வரலாறு, புராதானம், பக்தி, பாரம்பரியம், தற்கால சுற்றுலா கவர்ச்சி என்று அனைத்து வகை அம்சங்களும் மாமல்லபுரத்தில் காணப்படுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரம் கொண்ட இரு மலைகள் இங்கு உள்ளன.
இந்த மலைக்கு அருகில் வெட்டி உருவாக்கப்பட்ட கோயில் உள்ளது. இது ரதம் என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் புகழ் வாய்ந்த கடற்கரை கோயில் கடற்கரை அருகே உள்ளது. மிகப்பெரிய அலைகள் இந்த கோயில் சுவரையே தொட்டுச் செல்லும்.
இங்கு மூன்று கோயில்கள் உள்ளன. ஒன்று கடலை நோக்கி உள்ளது. மற்றொன்று நகரை நோக்கி உள்ளது. இவை சைவக் கோயில்கள். இவற்றிற்கு இடையில் வைஷ்ணவக் கோயில் உள்ளது. இதில் அனந்தசாயி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சைவக் கோயில்களின் மேற்புறம் விமானங்கள் உள்ளன.
த்வஜஸ்தம்பம் மற்றும் பலிபீடம் ஆகியவை முக்கிய கோயிலின் முன்புறம் இருக்கவேண்டும். ஆனால் இவை மேற்கு புறத்தில் இருக்கின்றன. இங்கு ஒரு பிரகாரமும் இருக்கிறது. இங்கு சுவரின் மீது நந்திகளும் வரையப்பட்டுள்ளன.
இதற்கு வட புறத்தில் ஒரு கோயில் உள்ளது. இது ஸ்தலசயன பெருமாள் கோயிலாகும். இது விஜயநகர பேரரசு காலத்தில் மேம்படுத்தப்பட்டது.
முக்கிய மலைக்கு 200 மீட்டர் தெற்கே ஐந்து ரதங்கள் சிறிய மலையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய பாறைமீது பெரிய ரதமான தர்மராஜ ரதம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வடக்கே இதைவிட குறைவான உயரத்தில் பீம ரதமும், அதைவிட குறைவான உயரத்தில் அர்ஜுன ரதமும், அதைவிட குறைவான உயரத்தில் த்ரௌபதி ரதமும் வடிக்கப்பட்டுள்ளன.
த்ரௌபதி ரதத்திக்கு மேற்கான ஒரு பெரிய பாறையில் சகாதேவ ரதம் உள்ளது. த்ரௌபதி ரதத்திற்கு முன்பாக ஒரு யானையும் சிங்கமும் வடிக்கப்பட்டுள்ளன. த்ரௌபதி ரதத்திற்கு பின்பும் ஒரு அடித்தளத்தில் ஒரு நந்தி வடிக்கப்பட்டுள்ளது.
மகிஷாசுரமர்த்தினி கோயில் மலையில் கிழக்குப் புறத்தில் இருந்ததை தொல்லியில் துறை கண்டுபிடித்தது. இங்கு ஒரு கோயில் உள்ளது. இங்கு அப்போது கட்டப்பட்ட நான்கு கலங்கரை விளக்கங்களில் ஒன்று இருந்திருக்கிறது. இதன் அருகில் மற்றொரு கலங்கரை விளக்கம் கட்டப்படும் வரை இது பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
மகிஷாசுரமர்த்தனி மண்டபத்தில் மூன்று கோயில்கள் உள்ளன.
நாட்டிய விழா
ஏழாம் நூற்றாண்டு புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் ஆண்டுதோறும் நாட்டியவிழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி நாட்டிய விழா தொடங்குகிறது. பிப்ரவரி வரை ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் இந்த விழா நடக்கிறது. அகில இந்திய அளவில் புகழ் வாய்ந்த நாட்டிய மற்றும் இசைக் கலைஞர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். நாட்டுப்புறக் கலைஞர்களும் இந்த விழாவில் தங்கள் திறமையை வௌதப்படுத்துகிறார்கள்.
மாமல்லபுரம் செல்வது எப்படி?
சென்னையிலிருந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை இருப்பதால் சென்னையிலிருந்து செல்வது சிறந்தது.
சென்னையிலிருந்து 58 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் இருப்பதால் சாலை வழியாக செல்லலாம்.
பாண்டிச்சேரி, கடலூர் போன்ற ஊர்களிலிருந்தும் மாமல்லபுரத்திற்கு செல்லலாம்

No comments: