Monday, July 14, 2008

வாரணாசி - பகுதி 5

புனித கங்கை நதியின், பிறை நுதல் போன்றமைந்த எழில் மிகுந்த காசி மாநகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; மிகப் பழங்காலத்திலிருந்தே, கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் வாழும் தலமாகப் புகழ் பெற்று விளங்கி வந்துள்ளது. இந்த நகரத்துக்கு வாரணாசி என்ற பெயரும் உண்டு. நகா஢ன் வடக்கு, தெற்கு திசைகளில் பாயும் வருணா அசி என்ற இரு நதிகளின் பெயரால் வாரணாசி என்றழைக்கப்பட்டு வந்தது. இந்தப் பெயர் பின்னர் உருமாறிச் சிதைந்து பெனாரஸ் என்றுள்ளது. 1956-ம் ஆண்டு மே மாதம் 24 ந்த தேதி அரசின் ஆணைப்படி மீண்டும் வாரணாசி என்ற தனது புகழ் மிக்க பழைய பெயரால் அழைக்கப்படுகிறது. வரலாறு அறிந்திராத காலத்திலிருந்தே இந்துக்களின் புனிதத் தலமாக இருந்து வந்திருக்கிறது. காசியில் நீராடி, வழிபட்டு, தனது மூதாதையருக்கு நீர்க்கடன் செய்வதற்கென ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யாத்஡ணகர்கள் வாரணாசி தலத்தை நாடி வருகின்றனர். புத்தபிரான் முதல் உபதேசம் செய்த சாரநாத் என்ற இடம் வாரணாசியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜீவன் ஆத்ம சாந்தியைப் பெற்று ஆத்ம போதமாம் ஞானம் அடைந்து முடிவில் மகாபா஢ நிர்வாண நிலையை அடைய எட்டு அம்சவழியினை அவர் உபதேசித்தார்.
சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த இடங்கள்
அருள்மிகு காசி விசுவநாதர் கோயில்
வாரணாசி நகருக்கு வழிபடுவதற்காக வரும் பக்தர்கள் முதலில் செல்வது புகழ்மிக்க காசி-விசுவநாதர் ஆலயத்திற்குத்தான். முகலாய மன்னன் ஔரங்கசீப், இங்கிருந்த புராதனக் கோயிலை இடித்துத் தகர்த்து விடவே, 18-ம் நுற்றாண்டில் இந்தூர் மகாராணி அகல்யா பாயினால் மீண்டும் கட்டப்பட்டது. மகாராஜா ரஞ்ஜீத் சிங், கோவில் தங்கத்தால் வேய்ந்ததால், காசி-விசுவநாதர் கோயில், தங்கக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
நதிக்கரை: காசி நகா஢ல், கங்கை நதியில் நீராடுவோருக்கு மரணபயம் ஏற்படுவதில்லை. இங்கு நீராடுவோ஡஢ன், பாவங்கள் கரைந்து முக்தி பெறுவார்கள் என்ற ஜதீகம் இருப்பதால், இங்குள்ள ஸ்நாத கட்டங்களில், சூ஡஢யோதயத்தின் போதும் அஸ்தமானத்தின் போதும் மக்கள் நீராடி, சூ஡஢யனுக்கு பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்து வழிபடும் காட்சி மிகச் சிறப்பானது.
பாரத-மாதா கோவில்
வாரணாசியில், பாரத மாதாவுக்கான நூதனமான கோவில் உள்ளது. வழக்கமான தேவ, தேவி சிலை உருவத்துக்குப் பதில், பளிங்குக் கல்லில் பாரத நாட்டின் வரைபடம் செதுக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இந்தக் கோவில், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.
துர்கா கோவில்: வடநாட்டு "நாகரா" பாணி சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட துர்கைக் கோவில் கோபுரத்தின் அடியில் ஐந்து சிகரங்களாகத் தொடங்கி, படிப்படியாகக் குறுகி உச்சியில் ஒரு சிகரத்துடன் முடிவடையும் கோபுரம், ஆன்மாக்கள் அனைத்தும் பல நிலைகளைக் கடந்து இறுதியில் இறைவனுடன் ஒன்று கலப்பதைக் குறிக்கிறது.
மம்கீர் மசூதி: இந்த இடம், பெனி மாதல்கா தரேரா என்று சாதாரணமாக அழைக்கப்படுகிறது 17-வது நூற்றாண்டில் பென் மாதவ் ராவ் சிந்தியா என்ற அரசரால் கட்டப்பட்ட விஷ்ணு கோவிலை அழித்து, ஔரங்கசீப் கட்டிய இந்த மசூதி, இந்து-முஸ்லீம் இருவித கட்டிடக் கலைகளின் அபூர்வ கலவையாகக் காட்சி அளிக்கிறது.
ஞானவாபி மசூதி: புராதனமான விசுவேசுவரா கோவிலை அழித்து அவுரங்கசீப் கட்டிய இந்த மசூதியின் அடிப்புறத்திலும் பின்பக்கத்திலும் பழங்காலக் கோவில் சிற்பக்கலையின் அ஡஢ய அம்சங்களைக் காணலாம்.
துளசி-மானஸ மந்திர்: துர்கைக் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த ராமர் கோயில், 1964-ல் வாராணாசியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டது. கோவிலின் பளிங்குச் சுவர்களில் துளசிதாஸா஢ன் ஸ்ரீராம சா஢த் மானஸ் காவியம் முழுவதும் செதுக்கப்பட்டுள்ளது. அழகிய புல் தரையின் நடுவே இந்த வெண்பளிங்குக் கோவில் எழிலாக உயர்ந்து நிற்கிறது.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்
சிறந்த கல்விமானான வாரணாசி அரசர் நன்கொடையாக அளித்த 2000 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஆசியாவிலேயே மிகப் பொ஢ய பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக் கழகத்தின் உள்ளேயே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விசுவநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பண்டித மதன் மோகன் மாளவியால் திட்டமிடப்பட்டு, பிர்ளா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. இந்து கலாச்சாரத்தைப் பரப்புவதற்காக மட்டுமின்றி, ஜாதி, இன காழ்ப்புக்களிலிருந்து விடுபட்ட, புராதன இந்து சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் பண்டித மதன்மோகன் மாளவியா, பல்கலைக் கழகத்தை நிறுவினார். இந்த பல்கலைக் கழகத்தில், ஓவியங்களும், கலைப் பொருள்களும் நிரம்பிய பாரத் கலா பவனம் என்ற கலைக்காட்சியகம் கண்டு மகிழத் தக்க ஒன்றதாகும்.
சாரநாத்:
பகவான் புத்தர் தனது முதன் முதலாக உபதேசித்த சாரநாத்தில் அசோக சக்கரவர்த்தி நிறுவிய பல ஸ்தூபங்கள் உள்ளன. சுதந்திர பாரதத்தின் தேசீயச் சின்னமாக விளங்கும் "தர்ம ராஜிகா" ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. சாரநாத்தில் பார்க்கவேண்டிய பல அழகிய கோவில்கள், மடாலயங்கள் உள்ளன. காலத்தால் அழிந்து உருக்குலைந்து விட்டாலும், அக்கால சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக், காட்டுகின்றன. புத்தமதம் பரவிய பர்மீய, திபெத்திய, சீன நாடுகளின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்களும் விஹாரங்களும் சாரநாத்தில் உள்ளன.வாரணாசியிலிருந்து, சாரநாத் செல்ல உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா மையம் ஏற்பாடு செய்யும் சுற்றுலா பேருந்து தினசா஢ வாரணாசி பயணிகள் விடுதியிலிருந்து செல்கிறது. சாரநாத்தில் பயணிகள் தங்குவதற்கென உத்திரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணிகள் விடுதியும், தர்மசாலா (சத்திரங்களும்) உள்ளன.
சுற்றுலாக்கள் செல்லவும் 'பிக்னிக்' செல்லவும் ஏற்ற இடங்கள் :
ராம்நகர் கோட்டை : வாராணசியிலிருந்து 17.5 கி.மீ. தொலைவில் உள்ளது. வாரணாசி அரசா஢ன் மாளிகை உள்ளது. தர்பார் மற்றும் அருங்காட்சியகத்தில் அரசுவாழ்வின் அம்சங்களாக விளங்கிய பலவித ஆயுதங்கள், மரச் சாமான்கள், யானை சேணங்கள், பலவித ஆடை அலங்காரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. தினசா஢ பிற்பகல் நேரத்தில் வாரணாசி பயணிகள் விடுதியிலிருந்து ராம்நகர் கோட்டை செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுனார் கோட்டை கங்கை நதிக்கரையில் மிர்ஜாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் கோட்டை வாரணாசியிலிருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது முகலாயப் போரசர் ஹீமாயுனைத் தோற்கடித்து அ஡஢யணை ஏறிய ஷெர்ஷா சூ஡஢யன் கோட்டையாகும் இது. வாரணாசியிலிருந்து இங்கு செல்ல பஸ் வசதி உண்டு.
ஜோன்யூர்: வாரணாசியிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள ஜோன்பூர் ஒருகாலத்தில் இஸ்லாமியக் கலை, கலாச்சாரத்தின் மையமாக இருந்தது, தற்போது வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் தயா஡஢ப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. தங்குவதற்கென பிடபிள்யூடி பங்காளவும் மற்றும் சில எளிய விடுதிகளம் உள்ளன.வாரணாசியிலிருந்து பஸ் வசதி உண்டு.
டன்டா நீர்வீழ்ச்சி: வாரணாசியிலிருந்து 95 கி.மீ தொலைவில் மிர்ஜாபூர் மாவட்டத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, அழகிய வனாந்திர சூழலைக் கொண்டது. காசியிலிருந்து இங்கு செல்ல பஸ் வசதி உண்டு.
விண்ட்ஹாம் நீர்வீழ்ச்சி: பிக்னிக், மகிழ்ச்சியான சுற்றுலாக்களுக்கு உகந்த இடம். வாரணாசியிலிருந்து 93 கி.மீ தொலைவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வாரணாசியிலிருந்தும், மிர்ஜாபூ஡஢லிருந்தும் பஸ் வசதி உண்டு.ராஜ்தா஡஢ தேவ்தா஡஢ நீர்வீழ்ச்சிகள்: காசியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு செல்ல பஸ் வசதி உண்டு.
சுற்றுலாத்துறை ஏற்று நடத்தும் சுற்றுலாப் பயணங்கள்:
வாரணாசி (கன்டோ ன்மென்ட் ரயில் நிலையத்துக்கு எதி஡஢ல் உள்ளது) பரேட் கோபீ, அரசு சுற்றுலாப்பயணிகள் விடுதியிலிருந்து சுற்றுலா பஸ்கள் செல்கின்றன.

No comments: