Sunday, July 6, 2008

ஆச்சாள்புரம்

அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில்.ஆச்சாள்புரம் சுவாமி சிவலோக தியாகராஜர் அம்மன் திருவெண்ணீற்று உமையம்மை தலபெருமைகள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும் சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி.அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம்.இவரை உடலால் சிறியவர் உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.ஆச்சாள் ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள்.இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.முக்தி கிடைப்பது நிச்சயம்.வசிஷ்டர் பராசரர் பிருகு ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார்.பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார்.விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார்.இந்திரன் போகம் பெற்றான்.சந்திரன் அபயம் பெற்றான்.கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள்.இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும்.பந்த பாசம் விலகும்.சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார்.சம்பந்தர்.திருநீலகண்ட யாழ்ப்பாணர் முருக நாயனார் திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.சீர்காழியிலிருந்து வடகிழக்கில் 13 கி.மீ. துணரத்திலும் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கில் 12 கி.மீ துணரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது.இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து மஹேந்திரபள்ளி செல்லும் பஸ்சில் ஏறி ஆச்சாள்புரத்தில் இறங்க வேண்டும்.தொலைபேசி எண் 04364 278 272அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழிஅருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும் அடுத்து நுணற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது.நுணற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தப்பெருமான் ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும் திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த திருநீற்றை பூசினால் நோய் விலகும் முன்ஜென்ம பாவம் விலகும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.தல வரலாறு சீர்காழியில் சிவபாதஇருதயர் என்ற அந்தண தம்பதியினருக்கு முருகப்பெருமானின் அம்சமாக அவதரித்தவர் சம்பந்தர்.அப்போது இவருக்கு பசி வந்திட அம்மே அப்பா என அழுதார்.இவரது அழு குரல் கேட்டு அன்னை பார்வதி சிவனுடன் காட்சி கொடுத்து.தனது திருமுலைப்பாலை ஞானம் கலந்து பொற்கிண்ணத்தில் வைத்து ஊட்டிவிட்டார்.அன்றிலிருந்து திருஞான சம்பந்தர்.இவருக்கு 16 வயது நடக்கும் போது இவரது தந்தை இவரை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.முதலில் மறுத்த சம்பந்தர் பின் இறைவனின் விளையாட்டு தான் இது.என்று பின்னர் சம்மதித்தார்.தந்தை சிவபாத இருதயரும்.நல்லுணரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகளை மணம் பேசி திருமண ஏற்பாடுகளை கவனித்தார்.ஞானசம்பந்தரும் இத்தலத்திற்கு வந்து மணக்கோலம் பூண்டார்.திருநீலநக்கநாயனார் மணவிழா சடங்குகளை செய்தார்.சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன் என்று கூறி திருமணக்கோயிலை அடைந்து கல்லுணர்ப் பெருமணம் என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார்.நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக என்று அருள்புரிகிறார்.இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி தாமும் தன் துணைவியாருடன் தன் 16வது வயதில் சிவஜோதியில் கலந்தார்.இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.ஆண்டு தோறும் வைகாசி மூல விழாவில் இந்த காட்சி திருவிழாவாக நடக்கிறது.

No comments: