Sunday, July 13, 2008

யாங்சு நகரின் இயற்கை காட்சி


குவெய்லினின் இயற்கை காட்சி, சீனாவில் ஈடிணையற்றது என பழமொழி உண்டு. அங்குள்ள எழிலான பசுமையான அடர்த்தியான மலைகளும் தெளிந்த ஆற்று நீரும் தனிச்சிறப்பியல்புடைய ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தவை. இதன் காரணமாக, யாங்சு எனும் சிறு நகருக்கு உலகின் பல்வேறு இடத்து பயணிகள் வருகை தருகின்றனர். அங்கு குடியேறுவோரும் உண்டு. சிச்சியெ என்று அழைக்கப்படும் ஒரு சிறு வீதி, இந்நகரில் மிகவும் புகழ்பெற்ற ஓர் இடமாகும். சில நூறு மீட்டர் நீளமே உடைய இவ்வீதி சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடையது. வீதி நெடுங்கிலும் அமைந்துள்ள, பாணியில் நேறுபடும் சிறிய பான அகங்கள், அற்புதமானவை. அவற்றில் பல இங்கு குடியேறியுள்ள வெளிநாட்டவரால் நடத்தப்படுகின்றன. வருகை தருவோரும் உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள்.

ஜப்பானிய நாட்டவரான hayashi katsuyuki என்பவர், இங்கு குடிபெயர்ந்துள்ள அந்நியராவார். வெளிநாட்டவர்களைப் போல, அவரும் யாங்சுவில் சிறிய தங்கும் விடுதியை நிர்வகிக்கின்றார். அதன் முதலாவது மாடியின் உணவகத்தில் சுவை மிக்க ஜப்பானிய உணவை உட்கொள்ளலாம். பல நாடுகளுக்குச் சென்றிருப்பதாக அவர் செய்திமுகவரிடம் தெரிவித்தார். இருப்பினும், யாங்சு வந்த பின், இங்கு குடியேறிவிட முடிவு செய்தேன். யாங்சுவின் சுற்றுப்புறங்களிலான எழிலான இயற்கை காட்சி மட்டுமல்ல, எளிமையான உள்ளூர் பழக்க வழக்கங்களும் தன்னை ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நகரத்தின் ஓர் உறுப்பினர் எனக் கருதி, பெவுது மக்களுக்கு நன்மை பயக்கும் பலவற்றை அவர் செய்துள்ளார். அவர் கூறியதாவது, 1996ஆம் ஆணஅடு நான் முதன்முறையாக இங்கு வந்து, இயற்கை காட்சியைக் கண்டுகளிக்கத் திட்டமிட்டேன். ஆனால், பின்னர் இங்கு குடியேற தீர்மானித்தேன்.1998ஆம் ஆண்டு, லீச்சாங் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள லௌச்சேசான் மலையில் மலை ஏறு பாதையொன்றைக் கட்டியமைத்தேன். மேலும், நட்புறவு பந்தல், சமாதான பந்தல் முதலியவற்றையும் கட்டியமைத்தேன் என்றார் அவர்.
யாங்சுவின் எழில் மிக்க இயற்கை காட்சியையும் வயல் காட்சியையும் கண்டு ரசிக்க, நகரிலுள்ள மிதி வண்டி கடையில் மிதி வண்டியை வாடகைக்கு எடுத்து, 40 நிமிடப் பயணத்துக்குப் பின், யியுலியான் மலை எனும் இயற்கை காட்சிப் பிரதேசத்தை அடையலாம். யியுலியான் மலை என்பது அற்புதமான மலையாகும். மலைச் சிகரத்தில் இயற்கையான வட்டமான துவாரம் உண்டு. மலையடிவாரத்திலிருந்து மேலே பார்த்தால், வட்டமான நிலா, இம்மலைச்சிகரத்தில் பெவுறிக்கப்படுவது போன்ற காட்சி தென்படுகின்றது. இம்மலையின் சுற்றுப்புறங்களிலும் இயற்கை காட்சித் தலங்கள் பல இருக்கின்றன. மலைக்கு அருகில் பண்டைய பெரிய ஆல மரம் ஒன்று உள்ளது. வரலாற்றில் லியூசான்சியெ எனும் நாட்டுப்புறப் பாடகி, பாட்டு பாடும் இடமாகும் என்று கூறப்படுகின்றது. வறிய குடும்பத்தில் பிறந்த அவள், தன் இனிமையான பாட்டெவுலி மூலம் மதிப்பையும் காதலையும் வென்றெடுத்தாள். இது பற்றிய கதை, சீனாவில் பரவியுள்ளது. பசி ஏற்படும் போது, இம்மலை நெடுகிலும் உள்ள விவசாயி குடும்பத்து வீட்டில், உணவு உண்ணலாம்.

காரணம், ஒவ்வொரு குடும்பமும், ஒரு சிறிய தங்கும் விடுதியாகும். பயணிகளுக்கு உணவு உறைவிட வசதி வழங்கும். தாங்கெய்வுன் எனும் அம்மையார் தங்கும் விடுதியின் உரிமையாளராவார். இத்தகைய தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கான கட்டணம், அறை வாடகை 100 யுவான், அதாவது 600 ரூபாய் ஆகும். அன்றி, செவுந்தமாக சமைக்கலாம். பயணிகளுடன் இணைந்து, விவசாய பணியிலும் குடும்ப வேலையிலும் ஈடுபடுவது, அவருக்கு மிகவும் பிரியம். இவ்வாறு, பயணிகள் கிராமப்புற வாழ்க்கையை நேரில் உணர்ந்துகெவுள்ளலாம் என்றார் அவர். அவர் கூறியதாவது, சில பயணிகள் எங்களுடன் சேர்ந்து, நெல் நாற்றுகளை நடுதல், பயிரிடுதல், கதிரடித்தல் ஆகியவற்றில் ஈடுபட விரும்புகின்றனர்.
காய்கறி பயிரிடும் போது, நிலத்தைத் தோண்டுவதில் எங்களுக்கு உதவுவார்கள். வௌதநாட்டு மாணவர்களையும் நான் வரவேற்றேன். அவர்கள், எங்களுடந் சேர்ந்து, உழைத்தனர். உரமிட்டனர். நன்று என அவர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் நகரங்களில் இதெல்லாவற்றையும் அவர்கள் அனுபவித்திருக்கவில்லை. யாங்சு நகரத்தின் சுற்றுப்புறங்களிலுள்ள குக்கிராமங்களில் சுற்றுலா மேற்கெவுள்ளும் போது, மெவுழிப்பிரச்சினை ஏற்பட்டது. இங்குள்ள கிராம வாசிகள், அந்நிய மெவுழி பேசுகின்றனர். பயணிகளுடன் எளிய முறையில் பேச முடியும். யாங்சு மாவட்ட அரசு அதிகாரியான சாங்சிகாங் செய்திமுகவரிடம் கூறியதாவது இங்கே, 80 விழுக்காட்டினர் அயல்மெவுழி பேச முடியும். குழந்தைகளும் அப்படியே. 50 விழுக்காட்டு குடும்பங்கள், வரவேற்புப் பணியில் ஈடுபடுகின்றன. மகளிர், சுற்றுப்பயணத்தின் வழிகாட்டியாயிருப்பது, மிகப் பெரிய தனிச்சிறப்பியல்பு ஆகும். ஆண்கள் வயல் வேலை செய்கின்றனர். ஊற்றுநீர் விற்கும் போது, பெண்கள் வௌதநாட்டுப் பயணிகளுடன் பேசுவதன் மூலம் கற்றுத்தேர்ந்தனர்

No comments: