Sunday, July 13, 2008

சென் நுங் ஜியா

சென் நுங் ஜியா எனும் இயற்கைப் புகலிடம்
சீனாவின் மத்தியப்பகுதியில் ஹுபெய், சி சுவான் ஆகிய இரண்டு மாநிலங்கள் சந்திக்குமிடத்தில் சென் நுங் ஜியா அமைந்துள்ளது. அங்கு, மலைகள் தொடர்ச்சியாக அமைந்து காணப்படுகின்றன. அடர்ந்த காடுகளில், எண்ணற்ற அரிய காட்டு தாவரங்களும் வன விலங்குகளும் காணப்படுகின்றன. ஆகையால், இவ்விடம் "வன விலங்கு மற்றும் தாவர தோட்டம்" என கூறப்படுகின்றது.
சிறப்பு வாய்ந்த புவி நிலை மற்றும் மேம்பாடான கால நிலையினால், இங்குள்ள வியிரினங்களின் வகை, பலதரப்பட்டது. உயிரின வாழ்க்கை சூழல் மிகவும் மேம்பாடானது. முழுமையான தொடக்கக்கால உயிரின வகைகள் வளர்கின்றன. உயிரின இனங்களின் பல தரப்பட்ட தன்மையையும் எடுத்துக்காட்டுத் தன்மையையும் இன்ன பிறவற்றையும் ஆதாய்வதற்கான சிறந்த இடமாக, சென் நுங் ஜியா திகழ்கின்றது.

இங்குள்ள உயிரினத்தின் பலதரப்பட்ட தன்மையை மேலும் பாதுகாக்கவும், அறிவியல் ஆய்வில் ஈடுபடவும், 23 ஆண்டுகளுக்கு முன், சீன அரசு சென் நுங் ஜியா பிரதேசத்தின் 70 ஆயிரம் ஹேக்டர்க்கு அதிகமான நிலத்தை இயற்கை புகவிடமாக வரையறுத்தது. 1990ஆம் ஆண்டு, யுனேஸ்கோ இப்புகலிடத்தை, சர்வதேச மனிதர் மற்றும் உயிரின வளைய பாதுகாப்பு மண்டல வலைப்பின்னலில் சேர்த்துள்ளது. 1992ஆம் ஆண்டு உலக வங்கியின் உலக நிதியத்தைச் சேர்ந்த நன்கொடை நிதி உதவி நிகழ்ச்சியில் இது சேர்க்கப்பட்டுள்ளது.

சென் நுங் ஜியாவிலுள்ள இயற்கை புகவிடம் பற்றி அதன் தலைவர் திரு சியெ தெங் பெங் வருமாறு கூறுகின்றார்.
இங்கு, தாவரங்கள் பல்வகைப்பட்டவை. அவை, பண்டைக் கால, அற்புதமான, அரிய தனித்துவம் உடையவை. புள்ளிவிவரங்களின் படி, இயற்கை புகலிடத்தில் 3106 வகை உயரிய தாவரங்கள் உள்ளன. 34 வகை அரிய தாவரங்கள் சீனாவின் சிறப்பு பாதுகாப்பில் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள, ஆனால் பாதுகாக்கப்பட வேண்டிய தாவரங்களின் எண்ணிக்கையில் அவை சுமார் 8.2 விழுக்காடாகும்.
சென் நுங் ஜியா, உலகில் காண்பதற்கு அற்புதமான தாவர களஞ்சியமாகும். 67 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்திய தாவரங்கள் இங்கு உள்ளன. அண்மையில் அழிவின் விளிம்பில் உள்ள அரிய 5 தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சென் நுங் ஜியாவிலுள்ள ஏராலமான விலங்கு வளத்தில், சீனாவின் முதல்நிலை அரசு பாதுகாப்பிலுள்ள அரிய விலங்கான பொன்நிற ரோம குரங்கும் ஒன்று ஆகும்.
ராட்சதப் பண்டா போலவே, அதுவும் சீனாவின் அரிய விலங்கு ஆகும். நாட்டின் கருவூலம் என அது அழைக்கப்படுகின்றது. 1980ஆம் ஆண்டு, சென் நுங் ஜியாவில் முதன்முதலாக இத்தகைய குரங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஆம்டுகளுக்குப் பின், இங்கு இயற்கை புகலிடம் நிறுவப்பட்டது. இதனால் பொன்நிற ரோம குரங்கும் அவை தங்குமிடமும் பயனுள்ள முறையில் பாதுகாக்கப்படுகின்றன. 1982ஆம் ஆண்டு இங்கு 500 குரங்குகள் இருந்தன. 1998ஆம் ஆண்டில் 760 ஆக அது அதிகரித்துள்ளது. அழிவின் விலிம்பிலுள்ள இவ்விலங்கை காப்பாற்றும் வகையில், புகலிடத்தில் உலகில் முதலாவது பொன்நிற ரோம குரங்கின் செயற்கை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தளம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது என்று திரு சியெ தெங் பெங் தெரிவித்தார்.
இங்கு புகலிடம் உருவாக்கப்பட்ட பின், இம்மண்டலத்தில் வேறுபட்ட பயன்பாட்டு பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மையப்பகுதியில், முற்றிலும் மூடப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடைமுறைக்கு வருகிறது. இதில் கண்காணிப்பும் ஆராய்ச்சியும் நடைபெறுகின்றன. சோதனை பகுதியில், அறிவியல் கள ஆய்வும் பாடம் சொல்லிக் கொடுத்தலும் நடைபெறுகின்றன. நிர்வாகப்பகுதியில், திட்டமிட்ட முறையில் தாவரங்களைப் பயிரிடலாம். அவற்றை வளர்க்க முடியும். தவிர, வேளாளர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைப் பிரதேசங்களும் நிலையாக்கப்படுகின்றன. சுற்றுலா பிரதேசமும் வரையறுக்கப்படுள்ளது.

இயற்கை புகலிடம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், இதற்கு நிதி தேவைப்படுகின்றது. 1996ஆம் ஆண்டு முதல், இயற்கை புகலிடத்தில் ஒரு பகுதி காட்சியிடம் சுற்றுலாத் தலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்புகலிடத்தில் இப்பணிக்குப் பொறுப்பான திரு சு ச்சௌ சுவான் எமது செய்தியாளரிடம் பின் வருவாறு கூறுகிறார்.
இயற்கை மூலவளத்தையும் சூழலையும் பயனுள்ள முறையில் பாதுகாக்கும் நிலையில், இயற்கை மூலவளத்தையும் இயற்கை காட்சிகளையும் இப்பிரதேசம் அறிவியல் முறையில் பயன்படுத்துகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சுற்றுலாவை வளர்ச்சியுறச் செய்வது, இப்புகலிடத்துக்கும் அதன் அருகிலுள்ள பொது மக்களுக்கும் மிகப் பெரும் நன்மை புரிந்துள்ளது.
புகலிடத்தின் நிர்வாகப் பணிக்கு பொறுப்பான சீன தேசிய வனத் தொழில் பணியகத்தின் அதிகாரி லியு தே வாங், சென் நுங் ஜியா இயற்கை புகலிடத்தில் சோதனை பயணம் மேற்கொண்டு திரும்பினார். பெய்ஜிங்கில் எமது செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில், அவர் பின் வருமாறு இந்த இயற்கை புகலிடத்தை மதிப்பிட்டார்.
1983ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், இப்புகலிடம் அதிக பணி புரிந்துள்ளது. பொது மக்களின் வாழ்வு பிரச்சினையை பயன்தரும் முறையில் அது தீர்த்துள்ளது. இதனால், இயற்கை மூலவளத்தின் மீதான சீர்குறைவு குறைக்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆய்வுத்துறையிலும் நரிவாகத்தைப் பாதுகாப்பதிலும் அது குறிப்பிடத்தக்க சாதனை பெற்றுள்ளது. சென் நுங் ஜியா இயற்கை புகவிடம், சீனாவின் தேசிய நிலை இயற்கை புகலிங்களில், செல்வாக்கு உடைய ஒன்றாகும். அதிக சாதனை பெற்றுள்ள புகலிடமும் ஆகும்.

No comments: