Sunday, July 13, 2008

பெய்ச்சிங் வன மிருகக் காட்சிசாலை

பெய்ச்சிங் வன மிருகக் காட்சிசாலை
இப்பொழுது நீங்கள் கேட்டது, crackle என்னும் பறவை எழுப்பிய ஓசையாகும். வணக்கம். செல்வமடைய வாழ்த்து என்பது அதன் பொருள். இன்றைய நிகழ்ச்சியில் இந்தப் பறவையின் வீடான பெச்சிங்கிலுள்ள வன மிருகக் காட்சிசாலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். பெய்ச்சிங் நகர் பிரதேசத்திலிருந்து புறப்பட்டு, கார் மூலம் சென்றால் சுமார் ஒரு மணிநேரத்தில், நான் பெய்ச்சிங் வன மிருகக் காட்சிசாலை சென்றடைந்தேன். இந்த வன மிருகக் காட்சிசாலையில் நுழைந்ததும், செழித்து வளரும் காடு நம் கண் முன்னால் காட்சியளிக்கின்றது. இதன் 95 விழுக்காட்டு நிலப்பரப்பை காடு ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது என்று இந்த வன மிருகக் காட்சிசாலையின் துணை பொது மேலாளர் லீவெய்காங் கூறினார்.இந்த வன மிருகக் காட்சிசாலையின் மொத்த நிலப்பரப்பு 240 ஹெக்டர் ஆகும்.

மிருகங்கள் சுதந்திரமாகத் திரியும் பகுதி, மிருகங்களை நடந்த வண்ணம் பார்வையிடும் பகுதி, மிருகங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்றும் பகுதி, குழந்தைகளுக்காக மிருகப் பகுதியும் விளையாட்டுப் பகுதியும் ஆகிய நான்கு பகுதிகளாக இந்த மிருகக் காட்சிச்சாலை பிரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மிருகங்களை நடந்த வண்ணம் பார்வையிடும் பகுதியில், பெவுன் நிற ரோம குரங்கின் வீட்டைக் காணலாம். இந்தக் குரங்குகள், பந்து வடிவத்தில் கட்டப்பட்ட இரண்டு கண்ணாடி கட்டதங்களில் வாழ்கிறேன். பயணிகள் கண்ணாடியால் ஆன, நீளமான ஊடுவழி மூலம், பெவுன் நிறமான, ஈர்ப்பு தன்மை வாய்ந்த, பயில் திறமிக்க இந்த குரங்குகளைப் பார்வையிடலாம். இந்தப் பகுதியின் வெப்ப மண்டலக் காட்டுப் பிரதேசத்தில் நுழைந்த போது, முற்றிலும் வேறுபாடான ஒரு காட்சி தோன்றியது. அகலமான தௌதவுமிக்க கண்ணாடி அறையில், வெப்ப மண்டல தாவரங்கள் செழித்து வளர்கின்றன. வெப்ப மண்டல மிருகங்கள் சுதந்திரமாகத் திரிகின்றன. மெலிந்தும் உயரமாகவும் இருக்கும் greaper flamingo எனும் பறவை, நீரோரத்தில் நடந்திருந்தன. கிளியும் great pied hornbiu என்னும் பறவையும் தடிப்பான இலையின் மேல் குரலில் உரையாடின.
வட பகுதியின் வானிலையில், வெப்ப மண்டலக் காட்டுப் பிரதேசத்தை உருவாக்கும் பெவுருட்டு, சில வெப்ப மண்டல தாவரங்களைப் பியிரிட்டு, வெப்ப நிலையைச் சரிப்படுத்தும் அதே வேளையில், இந்த வெப்ப மண்டல விலங்குகள் மீது திவலை தூவி, செயற்கை மழையையும் உருவாக்க வேண்டும் என்று வளர்ப்பாளர் தெரிவித்தார். மிருகங்கள் சுதந்திரமாகத் திரியும் பகுதியில் பேரூந்தில் அமர்ந்த வாறு வெளியேயுள்ள விலங்குகளைப் பார்வையிடலாம். இப்பகுதியில், கரடியும் மானும் ஒரே இடத்தில் வாழ்கின்றன. காட்டுப் பன்றியும் ஓநாயும் வேறு இடத்தில் வாழ்கின்றன. கரடி மற்றும் மானின் வீட்டில், குட்டி கரடி, மரத்தின் இலையை விழுங்கித் தின்கிறது. அதற்கு அருகில், தன் அழகான கண்ணைத் திறந்து, குட்டி கரடியை மான் பயத்துடன் காண்கிந்றது. அது முன் வரத் துமியவில்லை. அதிலிருந்து விலகவும் விரும்பவில்லை. அறவே தைரியம் அற்ற கணத்தைக் காட்டுகின்றது.

இந்தக் கண்காட்சி முறை, சீனாவில் முதல் முறையாகும். இது பயணிகளுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வாங்வெய் என்னும் அம்மையார் கூறியதாவது, இந்தப் பகுதியில், பயணிகள் பேரூந்திலும் மிருகங்கள் வெளியும் இருக்கின்றனர். மனிதன் ஒரு கூண்டில் இருக்கும் அதே வேளையில் மிருகங்கள் வெளியே இருப்பதென்ற உணர்வு எனக்குத் தோன்றியது. இது புதுமை மிக்கது என்று நினைத்தேன். குழந்தைகளுக்கான மிருகப் பகுதியில், அண்மையில் பிறந்த தியன்தியன், காங்காங் என்னும் இரண்டு புலிக் குட்டிகளைக் காணலாம். அவை இரண்டும், ஒரே வயதுடைய சிங்கக் குட்டி மற்றும் குட்டி ஓநாய்களுடன் சேர்ந்து வாழ்கின்றன. குழந்தைகளுக்கான விலங்குப் பகுதியில் இந்த இரண்டு புலிக் குட்டிகளை விட மேலும் சிறிதாக இருக்கும் மிருகங்களும் இருக்கின்றன. குட்டி வளர்ப்பு அறையில், அண்மையில் பிறந்த பால் ஊட்டும் விலங்குகளும் உள்ளன. அவை, நிலையான வெப்பமுடன் கூடிய கண்ணாடி பெட்டியில் வாழ்கின்றன. குழந்தைகள், வளர்ப்பாளர்களின் உதவியுடன், இந்தச் சிறிய மிருகங்களின் வளற்ப்புப் போக்கைப் பார்வையிடலாம்.

No comments: