Sunday, July 13, 2008

சிங்காய் ஏரி - பறவைத் தீவு

சிங்காய் ஏரியில் பறவைத் தீவு
சிங்காய் ஏரியானது, சீனாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியாகும். மேற்கு சீனாவின் சிங்காய் மாநிலத்தில் அது அமைந்துள்ளது. அதன் வட மேற்கு முனையில் வேறுபட்ட வடிவங்களிலான இரண்டு தீவுகள் அமைந்துள்ளன. தெவுலைவிலிருந்து அவற்றைப் பார்க்கும் போது, அவை, தலை நிமிர்ந்த வண்ணம் பார்க்கும் இரட்டைச் சகோதரிகள் போல அவை காணப்படுகின்றன. சிங்காய் ஏரியைப் பார்வையிடும் பெவுருட்டு, ஆண்டுதோறும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வேரியின் எழில் மிக்க இயற்கை காட்சியும் ஏரியிலான புகழ்பெற்ற இரண்டு பறவைத் தீவுகளும் இதற்குக் காரணமாகும். மக்களிடையில் சிங்காய் ஏரி பற்றி ஒரு கதை பரவிவருகின்றது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்திய தாங் வமிச காலத்தில், இளவரசி ஒருத்தி, திருமணம் செய்து கெவுள்வதற்காக, சீனாவின் மத்திய பகுதியிலிருந்து திபெத்துக்குச் சென்றார். குடும்பத்தினரை நினைத்தால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்க்கும் பெவுருட்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்தார். இக்கண்ணாடி தரையில் விழுந்து அழகான சிங்காய் ஏரியாக மாறியதாம். இதனால், திபெத் இன மக்கள், சிங்காய் ஏரியைப் புனித ஏரியாகக் கருதுகின்றனர். அவர்கள், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த ஏரியின் கரையில், மாபெரும் வழிபாட்டு நடவடிக்கையை மேற்கெவுள்வது வழக்கம்.
சிங்காய் ஏரியின் கரையிலிருந்து பார்த்தால், பசுமையான மலைத்தெவுடர், தௌதந்த நீர், உறைபனி, மலையின் நிழல் ஆகியவை தென்படுகின்றன. ஏரியின் சுற்றுப்புறத்தில் நீரும் புல்லும் நிறைந்து, இயற்கையான மேய்ச்சல் தளமாகின்றது. கோடைக்காலத்தில் வௌதயில், பெவுன்னிற எண்ணெய் வித்துச்செடி மலர் நறு மணம் வீசுகின்றது. ஏரியின் கரையில் ஆயர்களின் கூடாரங்கள் உள்ளன. சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் ஏரிக்கரையின் காட்சி மேலும் அழகானது. இந்த எழில் மிக்க சிங்காய் ஏரியில் தான் பறவைத் தீவு அமைந்துள்ளது.
தீவில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் தங்கியிருப்பதன் காரணமாக அது புகழ்பெற்றுள்ளது. மேற்கிலுள்ள தீவின் பெயர் ஹெய்சி மலை. ஒட்டகத்தின் முதுகு வடிவத்திலான இத்தீவின் பரப்பளவு சுமார் 0.3 சதுர கிலோமீட்டராகும். கிழக்கிலுள்ள தீவின் பெயர் ஹெய்சிபி. அதன் பரப்பளவு சுமார் 4.6 சதுர கிலோமீட்டராகும். ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் திங்கள், பறவைகள் வரும் காலமாகும். அவை வந்த உடனே, ஓய்வு பெறாமல், மும்முரமாகப் புல், மரக்கிளை ஆகியவற்றைக் கௌவி, புதிய கூட்டை அமைக்கின்றன. பல லட்சம் பறவைகள் காலை முதல் இரவு வரை, பறந்துவந்து இறங்கி, கூடுகளை அமைக்கின்றன. சற்று நேரத்துக்குப் பின் தீவு முழுவதிலும் பறவைக் கூடுகள் நிறைந்து காணப்படுகின்றன. அப்பெவுழுது முதல் அக்டநூபர் திங்கள் வரை அவ்விடம், பறவைகளின் தேவலோகமாகும்.
தெவுலைவிலிருந்து இத்தீவைப் பார்க்கும் போது, யாத்திரை செய்யும் மதத்ததவர் போல, பறவைகள் நீ முந்தி, நான் முந்தி எனப் பறக்கின்றன. அவற்றில் சில, தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்கின்றன அல்லது தலை குனிந்து, அரைத் தூக்கத்தில் இருக்கின்றன. வேறு சில, இறகை விரித்துப் பறக்கத் தயாராயிருக்கின்றன அல்லது மெதுவாக அசைந்து நடக்கின்றன என்பதைக் காணலாம். இத்தீவில் வேறுபட்ட வடிவப் பறவைக்கூடுகள் நிறைந்துகாணப்படுகின்றன. பறவை முட்டைகள் இருப்பதன் காரணமாக, கால் வைக்க இடம் இல்லை. பயணிகள் அவற்றைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும். பறவைக் கூடுகளுக்கு அப்பால் இருக்க வேண்டும். இல்லாவிடில், வானில் பறக்கும் பறவைகள், குண்டு வீச்சு விமானங்களைப் போல, பயணிகளை நோக்கித் தாக்குதல் தெவுடுக்கும். இத்தீவில் பறவைகள் சில நேரத்தில் கூட்டம் கூட்டமாகப் பறந்து வானில் ஒலி எழுப்புகின்றன. பெய்சிங்கிலிருந்து வந்த பயணி செய்சின் அம்மையார் கூறியதாவது, சிங்காய் ஏரி எழில் மிக்கது. மிக அதிகமான பறவைகள் உள்ளன. அவை, மனிதருடன் அன்னியோனியமாக இருக்கின்றன. ஒரு வகை கடற்பறவை அதிகமாக உள்ளது. பல பறவைகள், முட்டையிட்டுக் குஞ்சு பெவுரிக்கின்றன.
பறவைகளின் இனப்பெருக்கத்திற்குத் தகுந்த இடமாக இத்தீவு விளங்குவதற்குத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புவி நிலைமையும் இயற்கைச் சூழலும் முக்கிய காரணமாகும். மிதமான காலநிலை, அமைதியான சூழ்நிலை தழுவிய இவ்விடத்தில் மிகுந்த நீர், புல், அதிகமான மீன்கள் ஆகியவை உள்ளன. பறவைகள், அவற்றின் பழக்க வழக்கங்கள், விருப்பம் ஆகியவற்றுக்கேற்ப, வேறுபட்ட புவி நிலையையும் உயிரின வாழ்க்கைச் சூழ்நிலையும் தேர்ந்தெடுத்துக் கூடுகளை அமைக்கின்றன. 1960ஆம் ஆண்டுகளுக்குப் பின், உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணமாக, சிங்காய் ஏரியிலுள்ள நீர் மட்டம், ஆண்டுக்கு 10 முதல் 20 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் குறையலாயிற்று. இது, பறவைகளின் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இதற்காக, இவ்வேரியில் பாதுகாப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விடம் இயற்கைப் புகலிடமென நிர்ணயிக்கப்படவுள்ளது

No comments: