கவர்ச்சிகரமான சியு ச்சாய்கெவுவ் இயற்கை காட்சித் தலம்
பிரபல இயற்கை காட்சித் தலமான சியு ச்சாய்கெவுவ் மனிதக் குலத்தின் சுவர்க்கம் என அழைக்கப்பட்டு வருகின்றது. அது, உலக இயற்கை மரபுச் செல்வமாகும். சியு ச்சாய்கெவுவ் என்பது சுமார் 40 கிலோமீட்டர் ஆழமுடைய பள்ளத்தாக்காகும். இப்பள்ளத்தாக்கில் 9 திபெத் இன சிற்றூர்கள் இருப்பதன் காரணமாக இவ்விடம் புகழ்பெற்றுள்ளது. சுமார் 620 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய சியு ச்சாய்கெவுவில் ஆட்கள் குறைவு. நவீனமாக்கத்தின் பாதிப்பு இல்லாமல் இயற்கை காட்சி அழகு ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இவ்விடத்தில் நுழைந்த பின் காணக் கூடிய இடங்கள் எல்லாம் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும். பச்சை நிற மலைகள், அமைதியான நீர், மரப்பலகைகளால் போடப்பட்ட நீளமான குறுகிய பாதைகள், மலையில் உலா போகும் வெண்ணிற மேகக் கூட்டங்கள் முதலியவை கண்ணைக் கவர்கின்றன.
இங்குள்ள நீர் பயணிகளை வியப்படையச் செய்யக் கூடியது. சில சமயத்தில் இந்நீர், நீலமணிக் கல் போல நீல நிறமுடையது. சில சமயத்தில், பச்சைக் கல் போல பச்சை நிறமுடையது. இது பற்றி ஒரு கனெடிய பயணி கூறுகிறார், என் பெயர் லின்தா. நான் கனெடியர். இவ்விடம் எழில் மிக்கது. குறிப்பாக இங்குள்ள நீர் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. இந்நீர் இவ்வளவு நீல நிறமுடையது ஏன் ஆகாயத்தை விட நீல நிறமுடையது ஏன் என்று எனக்குத் தெரியாது. சியு ச்சாய்கெவுவ், ஓர் அருமையான எழில் மிக்க இடம் என்பது உண்ம என்றார் அவர். இந்த வண்ண நிற நீர், சில வேளையில் பள்ளத்தாக்கில் அமைதியாக ஓடுகின்றது. அது, வண்ண நாடா போல, மலைகளுக்கிடையில் தெவுங்கவிடப்படுகின்றது. சில வேளையில், மலைகளுக்கு ஊடே பாய்ந்து ஓடி, பீடபூமியில் தௌதந்த நீருடன் கூடிய ஏரியை உருவாக்கியுள்ளது. சில வேளையில், அது மலையிலிருந்து அருவியாகக் கெவுட்டுகிறது. நீர் வீழ்ச்சி வேறுபட்ட வடிவத்தில் காணப்படலாம். அவற்றில் பல பத்து மீட்டர் அகலமுடைய பச்சை நீர், வழுவழுப்பான பட்டுத் துணிப் போல் மலையிலுள்ள ஏரியில் நுழைந்தமை எழில் மிக்கது. 50 வயதுக்கு மேற்பட்ட சௌ ஸ்காங் என்பவர், தென் மேற்கு சீனாவின் சுங்சிங் மாநகரிலிருந்து வந்த பயணி. அவர் சியு ச்சாய்கெவுவில் ஒரேயடியில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் நடந்துவிட்டார். எனினும், களைப்பு உணரவில்லை. சியு ச்சாய்கெவுவிலுள்ள ஏரி நீர் எவ்வளவோ அழகாக இருப்பதால், மக்களுக்குக் களைப்பு தெரியாமல் போயிற்று என்றார் அவர். சியு ச்சாய்கெவுவிலுள்ள நீர் எழில் மிக்கது. ஈடிணையற்றது. பளிங்கு போன்றது. வண்ண நிறமுடையது. குறிப்பாக பல ஏரிகள் உள்ளன. அவற்றில் பல தூய்மையான நீல நிறமுடையவை. மிகவும் சிறப்பானது என்றார் அவர்.
சியெ ச்சாயிலுள்ள நீர் மிகவும் மர்மமான முறையில் வண்ணங்கள் மாறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன என்று சிறு வயதிலிருந்தே சியு ச்சாய்கெவுவில் வாழ்ந்துவரும் திபெத் இன நங்கை யெவெவுன் எமது செய்தியாளரிடம் கூறினார். நீரில் 200க்கும் அதிகமான பாசிவகைகள் உள்ளன என்பது இதற்கு ஒரு காரணமாகும். ஏனெனில், தாவரங்களின் நிறம் வேறுபட்டதால் வெவ்வேறான நிறங்களில் நீர் காணப்படுகின்றது. சூரிய ஔதயின் பிரதிபலிப்பினால் நீரின் நிறம் வேறுபடுகிறது என்பது இதற்கு மற்றெவுரு காரணமாகும். சூரியன் ஔதயில், வேறுபட்ட கோணத்திலும் நேரத்திலும் திசையிலும் நின்றவாறு, சியு ச்சாய்கெவுவ் நீரைக் காணும் போது, நீரின் நிற மாற்றத்தைக் கண்டுகளிக்கலாம் என்றார் அவர். மழைக்குப் பின், மலைகளுக்கிடையிலும் நீரிலும் வானவில் தோன்றுகிறது. அப்போது சியு ச்சாய்கெவுவில் நடந்துசென்றால் மனிதருக்குப் பெவுய்த் தோற்றம் தோன்றக் கூடும். அதாவது, எங்கு வானம் எங்கு பூமி என்பது தெரியாத ஒரு காட்சி தென்படும்.
No comments:
Post a Comment