Monday, July 7, 2008

கோகிலேஸ்வரர்

அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில்.திருக்கோழம்பியம் தஞ்சாவூர் மாவட்டம் மூலவர் கோகிலேஸ்வரர் கோழம்ப நாதர் அம்மன் சவுந்தரநாயகி தல விருட்சம் வில்வம் முல்லைக்கொடி தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் பழமை ஆயிரம் ஆண்டுகள் புராணபெயர் திருக்கோழம்பம் ஊர் திருக்கோழம்பியம் மாவட்டம் தஞ்சாவூர் தலவரலாறு வனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர்.ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன்.பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள்.இதனால் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார்.பெருமாளுக்கும் பிரம்மனுக்கும் சிவனின் அடிமுடி காண்பதில் பிரச்னை ஏற்பட்டது.பிரம்மன் முடியை காண்பதற்காக சென்று முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன் முடியை கண்டதாக பொய் சொன்னார்.இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார்.பின்பு பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார்.சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான்.சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து.சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான்.குயில் கோகில வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார்.தல சிறப்பு சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இதுவும் ஒன்று.பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது.சுற்றியுள்ள தலங்கள் இத்தலத்தை சுற்றி திருநல்லம் கோனேரிராஜபுரம் வைகல் மாடக்கோயில்.திருநீலக்குடி தென்குரங்காடுதுறை.திருவீழிமிழலை திருமீயச்சூர் ஆகிய தேவாரப்பதிகம் பெற்ற தலங்கள் உள்ளன.திருவீழிமிழலையில் மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவன்.திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்டது இக்கோயில்.பூஜை நேரம் காலை 9 12 மாலை 4 6 மணிவரை.திருவிழா கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்திரம் இருப்பிடம் கும்பகோணம் மயிலாடுதுறை செல்லும் வழியில் திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ துணரத்தில் உள்ளது திருக்குளம்பியம்.திருவாவடுதுறையில் இருந்து இறங்கி ஆட்டோ வில் செல்ல வேண்டும்.போன் 04364 232 005.அருகிலுள்ள ரயில் நி஬லையம் கும்பகோணம்அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

No comments: