Monday, July 7, 2008

திருவிடந்தை

அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில்.திருவிடந்தை மூலவர் நித்ய கல்யாணர் லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர் நித்யகல்யாணப்பெருமாள் தாயார்.கோமளவல்லித்தாயார் தீர்த்தம் வராஹ தீர்த்தம் கல்யாண தீர்த்தம் சிறப்பு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.விமானம் கல்யாண விமானம்.மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் தரிசனம் கண்டவர்கள் மார்க்கண்டேயர் ஊர் திருவிடந்தை மாவட்டம் காஞ்சிபுரம் தல வரலாறு திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான்.அக்காலத்தில் மாலி மால்யவான்.ஸஸமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர்.பலி மறுத்து விட்டான்.இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று.பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர்.அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான்.இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.இந்த தோஷம் போக்க பெருமாளை குறித்து இத்தலத்தில் தவமிருந்தான்.தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.தினமும் திருமணம் ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர்.குனி மட்டும் சொர்க்கம் சென்றார்.அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம் நீ திருமணமாகதாவள்.காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார்.தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டி தவமிருந்தார்.நாராயணன் வரவில்லை.ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான்.திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினான்.அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார்.அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான்.கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான்.அது வேறு யாருமல்ல.வராஹமூர்த்தி வடிவில் வந்த நாராயணன்.திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் இத்லதலம் திருவிடவெந்தை எனப்பட்டது.இது காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆனது.தல சிறப்பு.திருமணத்தடை உள்ள பெண்கள் இங்குள்ள தாயாரை வழிபட்டு பலன் பெறலாம்.இத்தலத்தை திருமங்கையாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.நித்யகல்யாண பெருமாளாக அருள்பாலிக்கும் இத்தல பெருமாளின் தாடையில் ஒரு பொட்டு இருக்கிறது.திருஷ்டிப்பொட்டு போல இயற்கையாக அமைந்துள்ளது சிறப்பு.360 கன்னியரை ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் சூட்டப்பட்டது.360 கன்னியரில் முதல் கன்னிக்கு கோமளவல்லி என்று பெயர்.இங்கு தனி சன்னதியில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.நாமெல்லாம் நாயகி பெருமாள் ஒருவரே நாயகன் என்பது தான் இக்கோயிலின் தத்துவம்.இங்குள்ள பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும் மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவியின் தலை மீது வைத்துக் கொண்டும் அகிலவல்லி தாயாரை இடது தொடையில் தாங்கி கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.திருஷ்டி தோஷம் ராகு கேது தோஷம் சுக்ர தோஷம் உள்ளவர்களுக்குரிய பரிகார தலம்.பூஜை நேரம் காலை 6 12 மணி மாலை 3 8 மணி.இருப்பிடம் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி செல்லும் பஸ்களில் சென்று கோவளம் அருகேயுள்ள திருவிடந்தை ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.போன் 044 2747 2235.அருகில் உள்ள ரயில் நிலையம் செங்கல்பட்டுஅருகில் உள்ள விமான நிலையம் சென்னை.

No comments: