Monday, July 7, 2008

திருஊரகம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்.திரு ஊரகம் காஞ்சிபுரம் மூலவர் உலகளந்த பெருமாள் திரிவிக்கரமப் பெருமாள் திருமேனி மேற்கு நோக்கி உலகளந்த திருக்கோலம் உற்சவர் பேரகத்தான் தாயார்.அமுதவல்லி நாச்சியார் ஆரணவல்லி அம்ருதவல்லி தீர்த்தம் நாக தீர்த்தம் மங்களாசாசனம் திருமழிசை ஆழ்வார் திருமங்கை யாழ்வார் தரிசனம் கண்டவர்கள் ஆதிசேஷன் மகாபலிச் சக்கரவர்த்தி ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தல வரலாறு மகாபலி சக்ரவர்த்தி என்பவன் அசுர குலத்தை சேர்ந்தவன்.இருந்தாலும் நல்லவன்.தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது.இதனால் அவனுக்க மிகுந்த கர்வம் ஏற்பட்டது.நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால்.பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார்.இதைக்கண்ட மகாபலி தாங்களோ குள்ளமானவர்.உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே.அது எதற்கும் பயன்படாதே என்றான்.அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார் வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தை தடுத்தார்.கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான்.பெருமான் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும் ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே என கேட்டார்.அகந்தை படித்த மகாபலி தலை குனிந்து.இதோ என் தலை.இந்த இடத்தை தவிர வேறு ஏதுமில்லை.பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பனார்.பாதாளம் சென்ற மகாபலிக்கு பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோ மே தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான்.எனவே பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து மகாபலி கடும் தவம் இருந்தான்.இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார்.இவனோ பாதாள உலகத்தில் இருந்தான்.எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை.எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான்.பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார்.இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது.இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.தல சிறப்பு பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திரு ஊரகம் எனப்படும்.இந்த கோயிலின் உள்ளேயே திருநீரகம் திருக்காரகம் திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது.அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது.இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் மிகவும் பரம்மாண்டமானவர்.108 திருப்பதிகளில் இந்த அளவு பிரமாண்ட தரிசனத்தை எங்கும் காணமுடியாது.இதே போல் இங்கு ஆதி சேஷனும் மிகவும் சக்தி வாய்ந்தவர்.இவரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நடக்கிறது.இவருக்கு திருமஞ்சனம் செய்து.பாயாசம் படைத்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. பூஜை நேரம் காலை 7 முதல் 12 வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசிக்கலாம்.இருப்பிடம் காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது.மொபைல் 94435 97107 98943 88279அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம்அருகிலுள்ள விமான நிலையம் சென்னை.

No comments: