Tuesday, July 8, 2008
பேய் குங் பாங்
பேய் குங் பாங் என்னும் அருங்காட்சியகம்.பெய்ஜிங்கில் பேய் குங் பாங் என்ற சிறப்பான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.அரண்மனை பூத்தையல் ஜேடு அரக்குப் பொருட்கள் காகித கத்தரிப்பு உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேலான சீனப் பாரம்பரிய கலைப்பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.இவ்வருங்காட்சியகம் பெய்ஜிங் மாநகரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.சுமார் 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான மண்டபத்தில் 30க்கு அதிகமான பணி அறைகள் உள்ளன.இவற்றில் பாரம்பரிய அரண்மனை மற்றும் நாட்டுப்புறக் கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.சர்வதேச சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் எரிக் துலுக் பேய் குங் பாங் என்னும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பிறகு புகழ்மிக்க பிரான்ஸ் Louvre அருங்காட்சியகத்தை போல சீனாவின் Louvre அருங்காட்சியகம் என பாராட்டினார்.இவ்வருங்காட்சியகத்தின் பணியாளர் TAO YE கூறியதாவது.உண்மையில் பேய் குங் பாங் மிகவும் சிறப்பான அருங்காட்சியகம் ஆகும்.கலைப்பொருட்களை வழிகாட்டிகள் மூலம் பயணிகளிடம் அறிமுகப்படுத்துவது அல்லது நிழற்படங்கள் மற்றும் பொருட்களைக் காட்சிக்கு வைப்பது மட்டுமல்லாது.கைவினை பொருட்காட்சி மூலம் பயணிகள் அக்கலைஞர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ளலாம்.பயணிகளின் கேள்விகளுக்கு கலைஞர்கள் அவ்வப்போது பதிலளிக்கின்றனர் என்றார் அவர்.தற்போது பேய் குங் பாங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய அரண்மனை கலைப்பொருட்கள் பத்துக்கு மேலான வகைகளாகும்.பெய்ஜிங் பூத்தையல் குறிப்பிடத்தக்கது.அரண்மனை பூத்தையல் எனவும் அழைக்கப்படுகிறது.அரச குடும்பங்கள் மற்றும் உயர் குடி மக்களின் ஆடைகளில் மட்டும் பயன்படுத்துவது என்பது அதன் பொருளாகும்.புகழ்பெற்ற பெய்ஜிங் பூத்தையல் கலைஞர் YAO FU YINGக்கு இவ்வாண்டு 66 வயது.அவர் 48 ஆண்டுகளாக பெய்ஜிங் பூத்தையல் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.அவர் கூறியதாவது.தரமிக்க மூலப்பொருள் தலைச்சிறந்த வடிவமைப்பு உணர்ப்பூர்வமான தயாரிப்பு ஆகியவை தலைச்சிறந்த ஜேடு சிற்பப் படைப்புக்கான முக்கிய காரணிகளாகும் என்றார் அவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment