Sunday, July 6, 2008

குச்சனூர்

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்.குச்சனூர் 1.மூலவர் சனீஸ்வரன் 2.சிறப்பு சுயம்பு 3.தல மரம் விடத்தை 4.தலபுஷ்பம் கருங்குவளை 5.தலஇலை வன்னி இலை 6.வாகனம் காகம் 7.தானியம் எள் 8.ஊர் குச்சனூர் 9.புராணப்பெயர்.செண்பகநல்லூர் 10.மாவட்டம்.மேலும் புதிய தொழில் தொடங்க வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.நேர்த்தி கடன் பகவானுக்கு எள்விளக்கு போடுதல் காக்கைக்கு அன்னமிடல் ஆகியவற்றை செய்யலாம்.தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் சனிபகவானுக்கு பிரம்மகதி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம்.சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகி றது.இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் சனி பகவான் கோயி லுக்கு வந்து செல்கின்றனர்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் தேனி 30 கி.மீ.மதுரை 100 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தேனி நகரில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.தேனி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.200 லிருந்து ரூ.500 வரை.போக்குவரத்து வசதி தேனியிலிருந்துகுச்சனூருக்கு பேருந்து வசதி உண்டு.அருகில் உள்ள ரயில் நிலையம் தேனி திண்டுக்கல் மதுரை அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஏர்ப்போர்ட்.முக்கிய திருவிழாக்கள் 5 வார ஆடிப் பெருந்திருவிழா.2 1.2 வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா.லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் தல வரலாறு தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான்.அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான்.அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது.அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரோடு வளர்ந்தான்.அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான்.புத்திசாலியான வளரப்பு மகன் சந்திரவதனுக்ககே முடி சூட்டப்பட்டது.இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது.இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான்.வளரப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான்.பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறுகிறது.இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று.

No comments: