Sunday, July 6, 2008

குமாரநல்லூர்

அருள்மிகு பகவதி அம்மன் குமாரநல்லூர் கேரளா மூலவர் குமாரநல்லூர் பகவதி இடம்
குமாரநல்லூர் பொது தகவல்கள் பூஜை நேரம் காலை 4 11.30 மணி மாலை 5 8 இருப்பிடம்
கோட்டயத்திலிருந்து 6 கி.மீ. துணரத்தில் குமாரநல்லூர் அமைந்துள்ளது.அங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.கோட்டயத்திலிருந்து பஸ் உள்ளது.போன் 0481 231 2737.கோயிலின் சிறப்பம்சம் 2ஆயிரத்து400 ஆண்டுகள் பழமையானதும் 108 துர்க்கை
திருத்தலங்களில் முக்கியமானதுமான இக்கோயிலில் நுழைந்தாலே பக்தர்களின் துயரம்
துணர விலகி விடுகிறது.முக்கிய திருவிழாக்கள் கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது.திருவிழாவின் ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகையன்று மதியம் ஆறாட்டு பூஜை
நடக்கிறது.இந்த பூஜையைக்காண திருச்சூரிலிருந்து வடக்குநாதரே வருகை தருவதாக ஐதீகம்.விழா நாட்களில் பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் மட்டுமே
பயன்படுத்தப்படும்.இது தவிர நவராத்திரி பங்குனி பூரம் கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய
விழாக்களாகும்.மலையாள மாத முதல் தேதி.செவ்வாய் வௌ஢ளி கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.தல வரலாறு பகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிஷ்டை செய்ய
விரும்பி ஒரு சிலை வடித்தார்.இதை ஜலவாசத்தில் வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார்.கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லுணரில்
முருகனுக்கும் வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான்.அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோயிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக்
காணவில்லை.அதை 41 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.இல்லாவிட்டால் சிரச்சேதம் செய்யப்படுவீர் என பூசாரி சாந்திதுவிஜனுக்கு மன்னன்
உத்தரவிட்டான்.பூஜாரியால் அதைக் கண்டுபிடிக்கவில்லை.41வது நாள் கவலையுடன் மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார் பூஜாரி.இங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடு.கண்விழித்த பூசாரியின் முன்னால் ஒரு ஔத செல்ல.இந்த பயணம் மதுரையைக்கடந்து கேரளாவைத்தொட்டது.குமாரநல்லுணரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில் கர்ப்பகிரகத்தில் அந்த ஔத
ஐக்கியமானது.அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டைக்குரிய பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில் குமரன் அல்ல ஊரில் ஊரில்
குமரன் இல்லை என்று அசரீரி ஒலித்தது.இதனால் இத்தலம் குமாரநல்லுணர் என அழைக்கப்படுகிறது.இதனால் கலங்கிப்போன மன்னன்.வைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டது.முடிவாக குமாரநல்லுணரில் பிரதிஷ்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும்
வைக்கத்தில் வைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிஷ்டை செய்ய
முடிவெடுக்கப்பட்டது.தொடர்ந்து.பிரதிஷ்டை செய்யும் நேரம் நெருங்கியது.அப்போது அதிசயத்தக்கவகையில் காவி உடை மற்றும் ஜடாமுடி கோலத்துடன் ஒரு
சன்னியாசி கர்ப்பக்கிரகத்தில் நுழைந்தார்.பகவதி சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு திடீரென மாயமானார்.இவர் பரசுராமர் என தல புராணம் கூறுகிறது.மதுரையிலிருந்து தெய்வீக ஔதயால் அழைத்து வரப்பட்ட சாந்திதுவிஜன் கோயில்
பூசாரியானார்.இவரது வாரிசுகள் இன்றும் கோயில் அருகே தங்கியிருந்து பூஜைகளை மேற்பார்வை
செய்து வருகின்றனர்.சுயம்வர புஷ்பாஞ்சலி நீண்டகாலம் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுயம்வர
புஷ்பாஞ்சலி என்ற பூஜை நடத்தினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது
நம்பிக்கை.முக்கிய வழிபாடு அம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால்.மஞ்சள் நீராட்டு முக்கிய வழிபாடு.குலம் சிறப்பாக வாழவும் குழந்தை பாக்கியம் வேண்டியும்.கல்வி சிறக்கவும் நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது.குடும்பத்தில் பிரச்னை நீங்கி தம்பதிகளின் ஒற்றுமையான வாழ்க்கைக்காக அம்மனுக்கு
பட்டு தாலி சாத்தப்படுகிறது.அம்மனின் பரிபூரண அருள் வேண்டி கோயில் நடையில் விளக்கு ஏற்றி வழிபாடு
செய்யப்படுகிறது.

No comments: