Sunday, July 6, 2008

குரங்காடுதுறை

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில்.வை யாறு செல்லும் வழியில் இந்தத் தலம் 20வது கி.மீ. தூரத்தில் உள்ளது.தஞ்சாவூரில் இருந்து 57 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்துடன் வரும் பக்தர்கள் அருகில்
உள்ள தஞ்சாவூர் கும்பகோணம் லாட்ஜ்களில் தங்கி இங்கு வந்து தரிசிக்கலாம்.கட்டணம் ரூ.300முதல் 2500 வரை அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி கோயிலின் சிறப்பம்சம் இக்கோயிலுக்கு முக்கியமாக
கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள்.கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்வதுண்டு.ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.திருஞான சம்பந்தர் அருணகிரி நாதரால் பாடல் பெற்றது.நடராஜரின் கல் சிற்பம் சிவகாமி அம்பிகை அர்த்தநாரீஸ்வரர் இரட்டை பைரவர் சூரியன் நாகர்
சனீஸ்வரர் லிங்கோத்பவர் பிரம்மா சுப்பிரமணியர் காசி விஸ்வநாதர் மகாலட்சுமி சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள் பாலிகின்றனர்.நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வச் சிறப்பு கூடும்.துர்க்கையின் சிறப்பு இங்கு விஷ்ணு துர்க்கை கையில் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள்.வேறு எந்த துர்க்கை தலத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை.நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரி யம்
அதிகரிக்கும்.முக்கிய திருவிழாக்கள் பங்குனி உத்திர திருவிழா நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை
சிறப்பாக நடக்கிறது.கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.தல வரலாறு சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.வாலிக்கு வால் வளர அருள் செய்த இடமே குரங்காடுதுறை ஆகும்.வாலிக்கு வால் அறுந்து போனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம்.வாலியைக் கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான்.அவனை வாலால் அடிக்கும் போது ஒரு வேளை வால் அறுபடுகிறது.தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான்.குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது.இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.அம்பாள் ஜடாமகுடநாயகி.சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார்.எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார்.செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே
நடந்து வந்து கொண்டிருந்தாள்.அவள் தாகத்தால் இறந்து விடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது.அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள்.சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னை மரத்தை வளைத்து இளநீரை பறித் அந்தப் பெண் தாகம் நீங்கினாள்.எனவே இறைவனுக்கு குலைவணங்கி நாதர் என்ற பெய.சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார்.இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.

No comments: