Tuesday, July 8, 2008

மாலைதீவுகள்

மாலைதீவுகள் Maldives அல்லது மாலத்தீவுகள் குடியரசு இந்து சமுத்திரத்தில் உள்ள பல சிறிய திவுகளாலான தீவு தேசமாகும்.இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ. தென்மேற்காகவும் அமைந்துள்ளது.மொத்தம் 26 பவழத்தீவுகளில் 1 192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 100 இல் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறது.நாட்டின் பெயர் மலைத்தீவுகள் என்ற தமிழ் பதத்தின் மருவலாகும் அல்லது மாலதிவிப தீவுகளின் மாலை என்ற சமஸ்கிருத மொழி பததின் மருவலாகும்.வேறு சிலரின் கருத்துப்படி இது.மகால் என்ற அரபு மொழிப் பதத்தின் மறுவலாகும்.1153இல் இஸ்லாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது.பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும்.1654 நெதர்லாந்திடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப் பட்டது.1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐ.இ. இடமிருந்து சுதந்திரம் பெற்றது.1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது.இருப்பினும் கடந்த 38 ஆண்டுகளில் மாலைத்தீவுகள் இரண்டு அதிபர்களை மட்டுமே கண்டது.ஆனால் இப்போது அரசியல் உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெருகின்றன.பொருளடக்கம் [மறை].1 வரலாறு.2 பொருளாதாரம்.2.1 மீன்பிடி.2.2 சுற்றுலாத் துறை.2.3 குடிசைக் கைத்தொழில்.3 அரசியல்.4 நிர்வாக அலகுகள்.5 புவியியல்.6 மக்கள் கணிப்பியல்.7 காலாச்சாரம்.7.1 மாலைதீவுகளில் இஸ்லாம்.7.2 மாலைதீவுகளின் இசை.8 விடுமுறை நாட்கள்.9 குறிப்புகள்.10 வௌதயிணைப்புகள்.வரலாறு.மாலைதீவுகளின் தொல்பொருள் ஆய்வு பற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ.பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது.பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார்.பின்னர் பல முறை.அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயுந் நோக்கில் இங்கு திரும்பினார்.கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது.ஏவிட்டா திவெயி ஀஦ஈநஇர஌஦ என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான காலச்சரம் மொன்றை கண்டுபிடித்தார்.அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர்.இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள் மீது எழுப்பட்டன என கருதுகின்றார்.அவன் முதலாவது சுல்தான் என கொள்ளப்படுகிறார்.இஸ்லாமிய மததுக்கு மாற முன்னர் மாலைதீவினர் பௌத்த மதத்தை பின்பற்றினார்கள்.மாலைதீவின் காலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது.விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.1988 இல் இலங்கை தாமிழ் ஆயுதக் குழு ஒன்று மாலைதீவை கைப்பற்றியது.[1][2].2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப் பட்டது.1 4.5 மீட்டர் உயரமான அலைகள்தாக்கியது.[3].பொருளாதாரம்.மாலைதிவுகளின் ஆள்வித வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது இப்போதும் அது பேணப்படுகிறது.சுற்றுலாத் துறையும் மீன்பிடி கைத்தொழிலும் மாலைதீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.கப்பல் மற்றும் வங்கி உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பை செய்கின்றன.தெற்காசியாவில் இரண்டாவது கூடிய ஆள்வீத வருமாணத்தை கொண்டது.மாலைதீவுகளின் முக்கிய வணிப நாடுகள் இந்தியா.இலங்கை தாய்லாந்து மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும்.[4].மீன்பிடி.மாலைதீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் காடல் சார் துறைகளில் முக்கியமாக தங்கியுள்ளது.மீன்பிடிப்பு மக்களின் முக்கிய தொழிளாக இருந்துவருகிறது.அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.1974 ஆம் ஆண்டில் பாராம்பரிய டநூனி.இன்று மீன்பிடி கைத்தொழில் மாலைதீவுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது.மேலும் நாட்டின் தொழிளாலர்படையில் 30% பேர் மீன்பிடிக்கைத்தொழிளில் ஈடுபடுகின்றனர்.வௌதநாட்டு வருவாயில் சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருவாயை கொடுக்கிறது.சுற்றுலாத் துறை.தலைநகரம் மாலேசுற்றுலாத் துறையின் வளர்ச்சி நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு வித்திட்டது.அது மறைமுகமாக பல வேலைவாய்ப்புகளை வழங்கியது.இன்று மொத்த தேசிய உற்பத்தியின் 20% வழங்கும் சுற்றூலாத்துறை.நாட்டுக்கு கூடிய வௌதநாட்டு வருவாயை பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது.86 சுற்றுலாதளங்களுக்கு 2000 ஆம் ஆண்டு சுமார் 467 154 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.குடிசைக் கைத்தொழில்.சுற்றுலாத்துறையின் வளர்ச்சி நாட்டின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களின் வளர்ர்சியை மறைமுகமாக ஆதரித்தது.பாய் நெசவு சிற்பம் கயிறு திரிதல் போன்ற கைத்தொழிகள் முக்கிய வளச்சியை கண்டன.அரசியல்.மாலைத்தீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்டத்துக்குள் நடைபெருகின்றது.அதிபர் அரசின் தலைவராக பணியாற்றும் அதேவேலை அமைச்சர் சபையையும் அவரே நியமிக்கிக்கும் முறை பின்பற்றப்படுகிறது.பாராளுமன்றத்தில் நடைபெரும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தெரிந்தெடுக்கப் படுகிறார்.எவ்வாரெனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிபடுத்த வேண்டும்.மாலைதீவுகளின் பாரளுமன்றம் மசிலிசு 50 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சி முறை பாரளுமன்றமாகும்.ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் தெரிந்தெடுக்க்ப்படுவதோடு மிகுதி 8 பேரை அதிபர் நேரடியாக நியமிப்பார்.நிர்வாக அலகுகள்.நாசாவின்.[5] மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு ஞாவியானி பவழத்தீவு என்பதாகும்.இவர்கள் கூட்டாக பவழத்தீவுகளின் நிர்வாகத்துக்கு அதிபருக்கு பதில் கூறவேண்டியவர்களாவர்கள்.புவியியல்.மாலைதீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும்.இங்கு நிலம் 2.3 மீற்றர் மட்டுமே உயர்கிறது.கட்டுமானங்கள் காணப்படும் பிரதேசங்களில் செயற்கையாக நிலம் சில மீற்றர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 20 சதம மீட்டர் உயர்ந்த்தது இது தொடந்து உயரும் என்பதே பொதுவான கருத்தாகும்.எனவே இது மாலைதீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.மக்கள் கணிப்பியல்.மாலைதீவுமக்கள் பல காலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர்.முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார்கள்.4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்து வந்த இந்தோ.ஆரிய மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார்கள்.கிபி 12வது நூற்றாண்டில் மலே தீவுகள் கிழக்காபிரிக்கா மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினார்கள்.இன்றைய மாலைதீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்காலாச்சார கலப்பு மக்களாவர்.ஆரம்பத்தில் பௌத்தராகவிருந்த இம்மக்கள்[6] கிபி 12வது நூற்றாண்டில் சன்னி இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர்.இன்று இஸ்லாம் நாட்டின் அனைவராலும் பின்பற்றப்படுகிறது.மாலைதீவுகளின் குடிமகனாவதற்கு இஸ்லாம் மதத்தை ஏற்பது கட்டாயமாகும்.மாலைதீவுகளின் ஆட்சி மொழி திவெயி மொழியாகும் இது ஒரு இந்தோ.ஐரோப்பிய மொழியாகும்.இம்மொழி சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும்.ஆங்கிலம் வணிபத்துறையில் பரவலாக பாவணயில் உள்ளது.இந்திய சாதி முறைக்கு ஒத்த சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது.ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றபடுவதில்லை.ஒருவரின் தரம் தொழில் செல்வம் இஸ்லாம் மிதான பற்று போன்ற வேறும் பல காரணிகளில் தங்கியுள்ளது.சுற்றுலாத்தளங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்ப்படுவதில்லை.மாலைதீவுகளில் இஸ்லாம்.இந்திய வாணிப சமுதாயத்தை தவிர்த்த ஏனைய மாலைதீவினர் சன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும்.மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக பாவணையில் உள்ளது.இஸ்லாம் மதம் வழிபாடுகளுக்கு பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும்.மாலைதீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன.மாலேயில் உள்ள பெரிய பள்ளிவாசல் பாக்கிஸ்தான் புருனை மலேசியா பாரசீக வளைகுடா பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது.ஐவேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும்.மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும்.ரமதான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேலையில் மூடப்படும்.அசுத்த ஆவிகள் பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும்.இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களை பின்பற்றுகின்றார்கள்.இதன் இசையில் மலேசிய இந்திய கிழக்காபிரிக்க அரபு தாக்கத்தை பிரதானமாக காணலாம்.மிக பிரசித்தமான உள்ளூர் இசை போடுபெரு என அழைக்கப்படுகிறது.இது மாலைத்தீவுகளில் 11ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்ததாக கருதப்படுகிறது.இது கிழக்காபிரிக்க சாயலைக்கொண்டுள்ளது.இது ஒர் நடன இசையாகும்.தலைமை பாடகர் ஒருவரோடு கூட 15 பேர் கொண்ட குழுவினரால் இசைக்கப்படும்.போடுபெரு பாடல்கள் மெல்லிசையில் ஆரம்பித்து பின்னர் வேக இசைக்கு மாரும் நடத்தின் வேகமும் அத்தோடு அதிகரிக்கும்.பாரசீக வளைகுடாவில் இருந்து வந்த அரபியார்களால் கிபி 17வது நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டதாக கருதப்படும்.தாரா இசை மாலைதீவுகளின் இன்னொரு முக்கிய இசை வகையாகும்.இதில் சுமார் 22 பேர் இரண்டு நிரல்களில் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி அமர்ந்து இசைப்பார்கள்.ஆண்கள் மட்டுமே இதனை இசைப்பது வழக்கமாகும்.போடுபெரு இசைகளைப் போலவே இதுவும் மெல்லிசையாக ஆரம்பித்து வேகை இசையாக மாறும்.கா ஒடி லாவா என்பது உடல் உழைப்பு தேவையான வேலைகளின் முடிவில் இசைக்கப்படும் பாடலாகும்.இது முதலாவது முகம்மது இமாதுடீன் 1620 1648 என்ற சுல்த்தானின் காலத்தில் மாலே கோட்டை சுவர் கட்ட உதவிய தொழிளாலருக்காக எழுதப் பட்டதாகும்.20ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்ப பாகுதியில் மூன்றாம் முகம்மது சமூசுடீன் என்ற சுல்த்தான இலங்கிரி என்ற இசைவடிவை அறிமுகப்படுத்தினார்.இது தாரா இசையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டதாகும்.பொலிமாலாஃபாத் நெசுன் என்ற பாடல் சுல்தானுக்குபரிசுகள் வழங்கும்போது பாடப்படும் பாடலாகும்.சுமார் 24 பெண்கள் இப்பாடல்களை இசைப்பது வழக்கமாகும்.1968இல் குடியரசான பிறகு சுல்த்தான் ஒருவர் இல்லத காரணத்தால் இது இசைக்கப்படுவதில்லை.

No comments: