Sunday, July 6, 2008
மணக்குளம்
அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் பாண்டிச்சேரி விநாயகர் மணக்குளத்தார் வலது ஆதிவிநாயகர் இடது நாகலிங்கம் தலமரம் வில்வம் தீர்த்தம் கிணறு பழமை 400 வருடம் கோபுரம் தங்க கூரை பாடல் பாரதியார் ஊர் பாண்டிச்சேரி மாவட்டம் பிரார்த்தனை எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன.கல்யாணவரம் குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது.தொழில் தொடங்குவோர் புதுக்கணக்கு எழுதுவோர்.கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர் புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம் கிறிஸ்த்தவ மதத்தை சார்ந்தவர்களும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.அத்தனை விசேசம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.நேர்த்தி கடன் உண்டியல் காணிக்கை வௌதநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது.அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம்.மேலும் விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய்.பஞ்சாமிர்தம் பழவகைகள் தேன் பால் தயிர் இளநீர் விபூதி சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள்.மேலும் சொர்ணா அபிசேகம் 108 கலசாபிசேகம் சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.வௌளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.கோயிலின் சிறப்பம்சம் பள்ளியறை சிறப்புவிநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது.இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார்.இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது.அதில் தீர்த்தம் உள்ளது.இதன் ஆழம் கண்டுபிடிக்கமுடியவில்லை.சென்றுகொண்டே இருக்கிறது.இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது.சுவாமி பீடம் இந்த தண்ணீர் மீதுதான் உள்ளது.இது முன்காலத்தில் இருந்த குளமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.தலபெருமைகள் அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார்.வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது.இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவிகளாக உள்ளனர்.சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார் விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார்.பாரதி அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது.மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள் உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் சென்னை 160 கி.மீ.விழுப்புரம் 40 கி.மீகடலூர் 23 கி.மீ. தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் 800 வரை போக்குவரத்து வசதி பஸ்வசதி பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரலாம்.சென்னையிலிருந்து பாண்டிக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.மேலும் பாண்டிக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.அருகில் உள்ள ரயில் நிலையம் பாண்டிச்சேரி அருகில் உள்ள விமான நிலையம் சென்னை முக்கிய திருவிழாக்கள் விநாயகர் சதுர்த்தி.பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும்.அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.மேலும் வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம் தீபாவளி பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.தல வரலாறு பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688 ல் பிரெஞ்சு காரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர்.இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில்.புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன.இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில்தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது.இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரபலமாயிற்று.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment