Monday, July 7, 2008
திருச்சத்திமுற்றம்
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்திமுற்றம். மூலவர் சிவக்கொழுந்தீசர் திருநாவுக்கரசர் ஊர் திருச்சத்தி முற்றம் மாவட்டம் தஞ்சாவூர் தலவரலாறு பக்தியே முக்திக்கு வித்து.என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ பார்வதி விரும்பினர்.இதற்காக சக்தி.சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் ஆனது.ஆனால் பார்வதி உறுதி கலையாமல் தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள்.சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன்.தீப்பிழம்பாக காட்சி தந்தாலும் அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த பார்வதி அந்த நெருப்பை கட்டித்தழுவினாள்.சிவன் குளிர்ந்து போனார்.குடும்பத்தில் பிரச்னைகள் நெருப்பென தாக்கினாலும்.தல சிறப்பு சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத்தலங்களில் இது 22வது.இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் திருச்சத்திமுத்தம் என பெயர் பெற்றது.மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம்.சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி முத்தமளிக்கும் தல ஐதிக மூர்த்தியும் உள்ளனர்.காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.சிறப்பம்சம் இங்கு பார்வதி அகத்தியர் ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம்.சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும் பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும் தடைகளும் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும்.கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழக்கூடிய கணவன் மனைவி இங்கு வந்து வணங்கினால் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.இத்தலத்தில் அமாவாசை பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாகும்.திருவிழா னிமாதம் முதல் நாள் முத்துப்பந்தல்.தைமாதம் ரதசப்தமி கார்த்திகையில் சோமவார வழிபாடு சிறப்பு.பூஜை நேரம் காலை 6 12 மணி மாலை 4 8 மணிவரை.இருப்பிடம் கும்பகோணம் பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் திருச்சத்திமுற்றம் உள்ளது.கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம்அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment