Sunday, July 6, 2008
திருமுல்லைவாசல்
அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில்.திருமுல்லைவாசல்.மூலவர் முல்லைவனநாதர் மாசிலாமணீசர் திருமேனி சுயம்புலிங்கம் அம்மன் அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை தல விருட்சம் முல்லை தீர்த்தம் பிரம்ம சந்திர தீர்த்தங்கள் பதிகம் திருஞான சம்பந்தர் பாடியது ஊர் திருமுல்லைவாசல் மாவட்டம் நாகப்பட்டினம் பொது தகவல்கள் பூஜைநேரம் காலை 8 முதல் மதியம் 12.30 மணிவரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும்.இருப்பிடம் சீர்காழியிலிருந்து கிழக்கே 12 கி.மீ. துணரத்தில் உள்ளது திருமுல்லை வாசல்.சீர்காழியிலிருந்தும் சிதம்பரத்திலிருந்தும் நிறைய பஸ்கள் உள்ளன.அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம்அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார்.எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார்.எனவே இங்கு பள்ளியறையும்.பூஜையும் கிடையாது.சுசாவி என்பவரின் மூத்தபிள்ளை வாமதேவர்.தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டார்.அப்படி போட்டு வரும் போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும்போது அந்த எலும்பு ரத்தினக்கல்லாக மாறியது.உடனே தந்தைக்கு இங்கு பிதுர் கடனாற்றினார்.இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம்.சூரிய சந்திர கிரகணம் அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.இத்தலம் 1300 வருடங்களுக்கு கிள்ளி வளவனால் கட்டப்பட்டது.தற்போது சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இத்தலத்திலிருந்து அரை கி.மீ. துணரத்தில் கடற்கரை அமைந்துள்ளது.முக்கிய திருவிழாக்கள் மாசி மகத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.தல வரலாறு பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு.தினமும் அதிகாலை வேளையிலும் இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம்.பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும்.திருமுல்லை வாசல் என்ற இத்தலத்தின் இறைவன் முல்லைவனநாதர்.மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இவருக்கு யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.அம்பாளின் பெயர் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி.கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான்.நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான்.அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது.எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது.அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை.முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது.அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோ மே என பார்க்க அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது.தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோ மே என வருந்திய வளவன் தன்னைத்தானே வெட்ட முற்பட்டான்.உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார்.எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது.லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment