Monday, July 7, 2008

திருப்புங்கூர்

அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில்.திருப்புங்கூர் மூலவர் சிவலோகநாதர் பெருமை சுயம்பு புற்று அம்பாள் சவுந்திரநாயகி நாயன்மார் நந்தனார் நந்தி.விலகியிருக்கும் தலமரம் புங்கமரம் தீர்த்தம் ரிபடதீர்த்தம் பதிகம் தேவாரம் புராணபெயர்.புன்கூர் மாவட்டம் நாக தோசம் பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும்.இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது.மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி.உத்தியோக உயர்வு.நேர்த்தி கடன்.சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள்.திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேசம்.மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேசம்.இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி அம்பாள் பிள்ளையார் முருகன் அகஸ்தியர் ஆகியோருக்கு பஞ்ச அர்ச்சனைகள் செய்து பூர்வ ஜென்ம பாவங்கள் விலகப் பெறுகிறார்கள்.அம்பாளுக்கு புடவை சாத்துதலும் அபிசேகம் செய்தலும் சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம்.மா மஞ்சள் பொடி திரவிய பொடி தைலம் பால் தயிர் விபூதி பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் எலுமிச்சை தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் மூலவர் புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் இந்த கோயிலுக்கு புங்கூர்கோயில் என்று பெயர் வந்தது.புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார்.சிறிய அளவில் உள்ளார்.இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே.பின் வந்தது நந்தி.இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன.சுவாமியை திருக்குவளை சாத்தியுள்ள நிலையில்தான் தினசரி பக்தர்களால் காணமுடியும்.பஞ்ச லிங்கங்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது.போட்டி வரும்போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன்.அதுபடி சுவாமி தர்ப்பையை கீழே போட அது வந்து விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது.அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது.அதன் மகிமை என்னவென்றால் திருமண வரம் நாகதோச நிவர்த்தி இவைகளைத் தரக்கூடியதாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.தலபெருமைகள் நந்தனார் வரலாற்றுக்கு சொந்தமான பெருமை மிகு சிவ தலம்.நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகிய இருக்கச் சொன்ன தலம்.எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும்.ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது.துவார பாலகர்கள் எல்லாக்கோயில்களிலும் நேராக இருப்பர்.ஆனால் இங்கு தலை சாய்த்து இருப்பர்.சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளளது.இத்தலத்தில் உள்ள அம்பாளுக்கு எதிராக நந்தி உள்ளது.குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம்.மிகவும் பழமையான கோயில் இது.அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.இராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மயிலாடுதுறை 10 கி.மீ.சீர்காழி 12 கி.மீ.வைத்தீசுவரன் 3 கி.மீ.நாகபட்டினம் 60 கி.மீ. தங்கும் வசதி.சொகுசு அறை ஏ.சி ரூ.400சாதாரண அறை.ரூ.199காட்டேஜ்கள் ரூ.500 தவிர மாவட்டத் தலைநகரான நாகபட்டினத்தில் தங்கும் வசதி விபரம் ஹோட்டல் தமிழ்நாடு போன் 04365 22389கட்டணம் ரூ.200 முதல் 400 வரை போக்குவரத்து வசதி வைத்தீசுரன்கோயில்.மணல்மேடு வழியில் திருப்புன்கூர் கோயில் உள்ளது.இத்தலத்துக்கு மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை வைத்தீசுவரன் கோயில்.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் வைகாசி விசாகம் 10 நாட்கள் திருவிழா பிரம்மோற்சவம் இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடக்கும் இந்த திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும்.மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.தல வரலாறு மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார் என்பவர்.மிகச் சிறந்து சிவபக்தர்.இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார்.ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை.அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்தபாடில்லை.நாளை போகலாம் நாளை போகலாம் என்றே இருந்தார்.அதனால் அவருக்கு திருநாளைப்போவார் என்று கூட பெயர் உண்டு.ஒருநாள் முதலாளி அனுமதி கிடைத்து சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வருகிறார்.கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார்.சுவாமி தெரியவில்லை.முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண்டிருந்தது.என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகுகிறார்.மலைபோல் நந்தி படுத்திருக்கே என்று பாடுகிறார்.இறைவன் சொல்படி நந்த விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார்.அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவதலம் இது.

No comments: