Monday, July 7, 2008

உறையூர்

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்.உறையூர்.மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் திரு மூக்கிச்சுரத்தடிகள்.ஐவண்ணப்பெருமாள்.திருமேனி சுயம்பு மூர்த்தி அம்மன் காந்திமதியம்மை.தலவிருட்சம் வில்வம்.தீர்த்தம் சிவதீர்த்தம் நாக தீர்த்தம்.பதிகம் அப்பர் சம்பந்தர் சிறப்பு இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.வழிபட்டோ ர் கருடன் காசிபர் மனைவி கத்துரு மற்றும் அவர்கள் மகன் கார்கோடன் வழிபட்டுள்ளனர்.ஊர் உறையூர் மாவட்டம் திருச்சி.தலச்சிறப்பு இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும் சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.தங்கம் வெண்மை செம்மை கருமை புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியது.உதங்க முனிவருக்காக இறைவன் ஐந்து வேளையில் ரத்தினம் ஸ்படிகம் பொன் வைரம் சித்திரம் ஆகிய ஐந்து லிங்கங்களாக காட்சியளித்த தலம்.இறைவன் கோழியாக வந்து பட்டத்து யானையின் மதம் அடக்கிய பெருமையுடையது.ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாரும் நாயன்மார்களில் புகழ்ச்சோழ நாயனாரும் அவதரித்த தலம்.கோச்செங்கட்சோழ நாயனார் முக்தி தலம்.கரிகாற்சோழன் ஒரு முறை சதுரங்க சேனையுடன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டு இத்தலத்தினை கடந்து சென்றான்.யானையோ மிகப்பெரிய உருவம்.கோழி சிறிய உருவம் இருந்தாலும் கோழி கொத்தியவுடன் யானை பின்வாங்கியது.உடனே இத்தலத்தின் சிறப்பை அறிந்த அரசன் இங்கேயே ஒரு நகரத்தை உருவாக்கி தங்கினான்.இதனால் இத்தலம் உறையூர் கோழி என அழைக்கப்பட்டது.தேவாரப்பதிகம் பெற்ற காவிரித்தென்கரையில் இது 5வது திருத்தலம் ஆகும்.நாத்திகர் கோயில்.ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான்.இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான்.தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான்.சிவனை வணங்கி இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான்.ராமபிரான் வழிபட்டது ராமேஸ்வரம்.விஷ்ணு வழிபட்டது திருமுக்கீச்சரம்.பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்கு திருவானைக்காவல் பூமிக்கு காஞ்சிபுரம் நெருப்புக்கு திருவண்ணாமலை.காற்றுக்கு காளஹஸ்தி.ஆகாயத்திற்கு சிதம்பரம் ஆகிய ஐந்து தலங்களில் வழிபட்ட புண்ணியத்தை இந்த ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.கார்கோடனாகிய பாம்பும் கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால்.நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும்.எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம்.நடைதிறப்பு காலை 5.30 முதல் மதியம் 12.30 வரையிலும் மாலை 4 முதல் இரவு 8.30 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.திருவிழா சித்ராபவுர்ணமி வைகாசி பிரம்மோற்சவம் ஆனி திருமஞ்சனம் ஆடி பவுர்ணமி இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார் ஆவணி மூலத்திருவிழா நவராத்திரி ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் மார்கழி திருவாதிரை தைப்பூசம் மகாசிவராத்திரி பங்குனி உத்திரம்.இருப்பிடம் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து உறையூருக்கு அடிக்கடி பஸ் உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் உறையூர்அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிபோன் 0431 276 8546..

No comments: