Monday, July 7, 2008

வடபழநி

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி 1.மூலவர் வடபழநிஆண்டவர் 2.1.சாது அண்ணாச்சாமி 3.2.சாது இரத்தினசாமி 4.3.சாது பாக்கிய லிங்கம் 5.தனிசன்னதி அங்காரகன் 6.தீர்த்தம் திருக்குளம் 7.ரதம் தங்க ரதம் 8.ராஜகோபுரம் 72 அடி 9.ஊர் வடபழநி 10.மாவட்டம் பிரார்த்தனை இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம்.கல்யாண வரம்.தவிர வேல் காணிக்கை ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கை இக்கோயிலின் மிக முக்கிய வருமானம் ஆகும்.பால் சந்தனம் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் ஆகிவற்றாலான அபிசேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன.முக்கிய திருவிழாக்கள் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு கிருத்திகை சித்ரா பௌர்ணமி ஆகிய தினங்களில் கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் ஆனி ஆடி ஆவணி சுவாமி வீதி உலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.ஐப்பசி கந்த சஷ்டி.6 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கூடுவர் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா பக்தர்கள் பெருமளவில் கூடுகின்றனர்.ஹை லைட்ஸ் பாவடம் நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்அண்ணாசாமி தம்பிரான் இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்.தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.இரத்தினசாமி தம்பிரான் இவரும் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர்.இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார்.அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது.குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.பாக்யலிங்க தம்பிரான் இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிருகமும் முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர்.இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர்.இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது.இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன.இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில்பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது.கோயிலின் சிறப்பம்சம் பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுவது நலம்.இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் காலணிகள் சுவாமி இருப்பது விசேசம் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது.சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலமாக திகழும் கோயில்.விசேச நாட்கள்தான் என்றில்லாமல் வருடத்தின் அத்தனை நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தலம்.உண்டியல் வருமானம் மிக அதிக அளவில் அரசுக்கு வரும் தலங்களில் இது முக்கிய தலம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது.தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் 800 வரைபோக்குவரத்து வசதி பஸ்வசதி.அருகில் உள்ள ரயில் நிலையம் சென்னை.அருகில் உள்ள விமான நிலையம் சென்னை தல வரலாறு அண்ணாசாமி தம்பிரான் இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்.தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.இரத்தினசாமி தம்பிரான் இவரும் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர்.இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார்.அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது.குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.பாக்யலிங்க தம்பிரான் இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிருகமும் முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர்.இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர்.இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது.இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன.இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில்பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது.

No comments: