Monday, July 7, 2008

வரதராஜப் பெருமாள்

அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் 1மூலவர் தேவராஜர் 2.பிறபெயர்.வரதராஜர் 3.சந்நிதி.அத்திகிரி 4.விமானம் புண்ணியகோட்டி 5.பெருமை திவ்யதேசம் 6.தாயார்.பெருந்தேவி 7விமானம் கல்யாணகோட்டி 8.தலமரம் அரசமரம் 9.தீர்த்தம் அனந்த சரஸ் 10.மாவட்டம்.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள்.குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்தங்கபல்லி.நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.நேர்த்தி கடன் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல் தாயாருக்கு புடவை சாத்துதல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.கோயிலின் சிறப்பம்சம் மிக முக்கிய திவ்ய தேசம் பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார்.பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார்.எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு அத்திகிரி என பெயர் வந்ததாம்.அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்லவேண்டும்.இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.நாரத முனிவர் பிருகு முனிவர் பிரம்மா ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம் இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும்.அத்தி வரதர் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது.அதில் தான் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.சக்கரத்தாழ்வார் திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சி யளிக்கின்றார்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.சென்னையிலிருந்து 75 கி.மீ.செங்கல்பட்டிலிருந்து 35 கி.மீஅரக்கோணத்திலிருந்து 30 கி.மீ.தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் 500 வரைபோக்குவரத்து வசதி பஸ்வசதி காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் உள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது.அருகில் உள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம் அரக்கோணம் சென்னை.அருகில் உள்ள விமான நிலையம் சென்னை முக்கிய திருவிழாக்கள் பிரம்மோற்சவம் வைகாசி 10 நாட்கள் திருவிழா பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்று நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் நவராத்திரி புரட்டாசி 10 நாட்கள் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.பாசுரம் பாடியோர் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் பூத்தாழ்வார் ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பி ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோர்.தல வரலாறு பிரம்மா தன்மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள்.பிரம்மாவின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து வரதராஜபெருமாள் தோன்றினார்.வரதராஜபெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர்.24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.

No comments: