Monday, July 7, 2008

வேலிமலை

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில்
வேலிமலை மூலவர் குமாரசுவாமி
பிறபெயர்.சுப்ரமணியர் உயரம் 10 அடி இறைவி வள்ளி
உற்சவர் மணவாளகுமரன் தலமரம் வேங்கை
மரம்.தீர்த்தம் தெப்பக்குளம் ஊர் குமார கோயில்
புராணபெயர்.வேள்விமலை மாவட்டம் கன்னியா குமரி.பிரார்த்தனை இத்தலத்தில் வேண்டும்
அனைத்து காரியங்குளும்
நிறைவேறுகின்றன.வேண்டுவோர்க்கு வேண்டுவன
நல்கியருளும் கடவுளாக வேலிமலைக்
கடவுள் திகழ்கிறார்.திருமணம் குழந்தை பாக்கியம் வியாபார
விருத்தி.கல்வி ஞானமும் உடல்பலமும் கொடுக்கும்
தெய்வமாக திகழ்கிறார்.மனபலம் உடல் பலம் ஆகியவை
தருபவராகவும் மனதுக்கு அமைதியும் தரும்
சிறப்பு பெற்றவராகவும் உள்ளார்.இங்குள்ள இறைவனை மலையேறி
வணங்கினால் நம் உடற்பிணியெல்லாம்
விட்டு விலகும் என பக்தர்கள்
கூறுகிறார்கள்.நேர்த்தி கடன் மொட்டை போடுதல்
எடைக்கு எடை நாணயம் வழங்கல் பொங்கல்
படைத்தல் சுவாமிக்கு சந்தனகாப்பு
பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம்
அன்னதானம் வழங்குவது நெய் விளக்கு
ஏற்றுதல் பால்குடம் எடுத்தல்
காவடிஎடுத்தல் அபிசேக ஆராதனைகள்
ஆகியவை இத்தலத்து முக்கிய
நேர்த்திகடன்களாக உள்ளது.வசதி படைத்தவர்கள் கோயில்
திருப்பணிக்காக பொருள் தருவதும்
வழக்கமாக உள்ளது.கோயிலின் சிறப்பம்சம் மூலவர் மிகவும்
பழமையான இக்கோயிலில் மூலவர்
தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு
வள்ளி இருக்கிறார்.10 அடி உயர சிலையாக சுவாமி
பிரமாண்டமாக காட்சி தருவதுசிறப்பு.சுவாமியின் காதுகள் நீண்டு
காணப்படுகிறது.இதை வைத்து பார்க்கின்ற போது இந்த
சுதை புத்தர்கால கட்டத்தை சேர்ந்தது
என்றும் கூறுகிறார்கள்.சுதை சாதரண கல் வகையை சேர்ந்ததாக
இல்லாமல் மிகவும் உறுதியுடன்
இருப்பதாகவும் அர்ச்சகர்கள் கூறுகிறாரகள்.கேரள எல்லையில் அமைந்துள்ள
இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக்
கருதப்படுகிறது.தலபெருமைகள் வள்ளி திருமணம் நடந்த
தலம் என்று கூறப்படுகிறது.கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய
முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல
நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் வள்ளி தோழியரோடு
தினைப்புனம் விளையாடிய இடமாக
கருதப்படுகிறது.சிலை புத்தர் காலகட்டத்திலிருப்பது போல்
காது நீண்டு வரத முத்திரையோடு வள்ளி
இடது பக்கமாக காட்சி தருகிறார்.நம்பிராஜன் வாழ்ந்த இடம்.முருகன் வேங்கையாக நின்ற இடம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து
தூரம் தக்கலை 4 கி.மீ.
நாகர்கோயிலிலிருந்து 12 கி.மீ.தங்கும் வசதி.கட்டணம் ரூ.150 முதல் ரூ.400 வரை.போக்குவரத்து வசதி தென்தமிழ்நாட்டின்
முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோயிலுக்கு
நிறையபஸ் வசதி உள்ளது.அங்கிருந்து தக்கலை மார்க்கமாக
கோயிலுக்கு செல்லலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் இரணியல்
நாகர்கோயில் அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம் மதுரை.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செயல்
அலுவலர் அருள்மிகு குமார சுவாமி
திருக்கோயில்.வேலிமலை.போன் 04651 250706 233270 பேக்ஸ் முக்கிய
திருவிழாக்கள் வைகாசி விசாகத் திருவிழா 10
நாள் 15 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்ஆவணி
கடைசி வௌ஢ளி புஷ்பாவிஷேகம் 1
நாள்பங்குனி திருக்கல்யாணம் 7 நாள்தவிர
முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும்
பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும்.பொங்கல் தீபாவளி வருடப்பிறப்பு ஆகிய
நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால்
நிரம்பி வழியும்.தல வரலாறு முருகப்பெருமானுக்கு
தமிழகத்தில் இருக்கம் 6 படை வீடுகளோடு
ஏழாவது படைவீடாக இணைந்திருக்க
வேண்டிய திருக்கோயில்.குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள
மாநிலத்தோடு இருந்துவிட்டது.மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது
இருக்கிறது.முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம்
இங்குதான் திருமணம் செய்து கொண்டாதாக
கூறப்படுகிறது.மிகவும் பழமையான இக்கோயிலில்
தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு
வள்ளி இருக்கிறார்.10 அடி உயர சிலையாக சுவாமி
பிரமாண்டமாக காட்சி தருவதுசிறப்பு.கேரள எல்லையில் அமைந்துள்ள
இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக்
கருத்ப்படுகிறது.

No comments: