Monday, July 7, 2008

வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில்.வேதாரண்யம் மூலவர் திருமறைக்காடர் பெருமை சுயம்பு அம்பாள் வேதநாயகி தலம் சப்தவிடதலம் சிறப்பு கதவுதிறந்தது தலமரம் வன்னிமரம் தீர்த்தம் மணிகர்னிகை பதிகம் தேவாரம் புராணபெயர்.திருமறைக்காடு மாவட்டம்.நாக தோசம் நீங்கும்.பில்லி சூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் அத்தகைய துன்பங்கள் நீங்கும்.இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை யமுனை நர்மதை சிந்து காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம்.பிரமகத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.பல ஆண்டுகள் யோகம் தானம் தவம் செய்த பலன்களை அடையலாம்.இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம்.இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அம்மாவாசை தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும்.குழந்தைபாக்கியம் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் செல்வ செழிப்பு பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி.உத்தியோக உயர்வு.நேர்த்தி கடன் குழந்தை வரம் வேண்வோர் தொட்டில் கட்டுகிறார்கள்.திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர்.அம்மனுக்கு புடவை சாத்துதலும் அபிசேகம் செய்தலும் சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.சுவாமிக்கு மா மஞ்சள் பொடி திரவிய பொடி தைலம் பால் தயிர் விபூதி பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் எலுமிச்சை தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் மூடியிருந்த திருக்கோயில் கதவு திறந்த கதை.இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர்.இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர்.வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர்.உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வௌதயே வந்தபோது அப்பர்.இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.வேதநாயகி.அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர்.இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.துர்க்கை இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள்.தியாகராசர் இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று.முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று.இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.புவனிவிடங்கர் தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு இப்பெயர் உண்டு.காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு.இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.வீரகத்தி விநாயகர் இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர்.இராமபிரானைத் துரத்திவந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு.தலவிருட்சம் தலவிருட்சமாக வன்னிமரமும் புன்னை மரமும் உள்ளன.தலபெருமைகள் திருமறைக்காடு என்று தமிழிலும் வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம்.சப்தவிடத்தலங்களுள் இது இரண்டாவது தலம்.சக்தி பீடங்கள் 64 ல் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில்.மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு.வீணை இல்லாத சரஸ்வதி இருக்கும் சிவதலம் இது.நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர்.ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.ரிக் யசூர் சாம அதர்வண வேதங்கள் இறைவனை வழிபட்ட தலம்.அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம்.மனு மாந்தாதா தசரதன் ராமன் பஞ்சபாண்டவர் மகாபலி முதலியோர் வழிபட்ட பேறு பெற்ற தலம்.பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம்.அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடப்பெற்ற தலம்.புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார்.தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இவ்வூரைச் சேர்ந்தவர்.இக்கோயில் வளாகத்திற்கு வௌதயில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும்.இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் நாகபட்டினம் 45 கி.மீ.திருத்துறைபூண்டி.35 கி.மீ.திருவாரூர் 63 கி.மீ.கோடியக்கரை 12 கி.மீ. தங்கும் வசதி.வேதாரண்யம் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.250 முதல் ரூ.400 வரை.தவிர மாவட்டத் தலைநகரான நாகபட்டினத்தில் தங்கும் வசதி விபரம் ஹோட்டல் தமிழ்நாடு போன் 04365 22389கட்டணம் ரூ.200 முதல் 400 வரை போக்குவரத்து வசதி நாகபட்டினத்திலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் வேதாரண்யத்துக்கு பேருந்து வசதி உள்ளது.திருத்துறைப்பூண்டியிருந்தும் பேருந்து வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் வேதாரண்யம் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் மாசி மகம் பிரம்மோற்சவம் 29 நாட்கள் திருவிழா அடைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் திருவிழா நடக்கும்.இதில் மக தீர்த்தம் அன்று சுவாமி கடலுக்கு போய் தீர்த்தமாடி வருவது சிறப்பு 73 மூவர் சுவாமி புறப்பாடும் கைலாச வாகனம் புறப்பாடும் நடக்கும்.ஆடிப்பூரம் 10 நாட்கள் இது அம்மனுக்கு நடக்கும் பெரிய அளவிலான திருவிழா ஆகும்.விநாயகர் சதுர்த்தி.கந்தர் சஷ்டி ஆகியன இத்தலத்தின் முக்கிய விழா நாட்கள் ஆகும்.மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.தல வரலாறு வடமொழி வேதங்கள் ரிக் யசூர் சாம.கலியுகம் பிறந்தவுடன் இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை.இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம் செடி கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது.பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும் வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

No comments: