Sunday, July 6, 2008

தேவிபட்டிணம்

அருள்மிகு நவபாஷாணம் தலம் தேவிபட்டிணம் தெய்வங்கள் நவகிரகங்கள் பிரதிஷ்டை.ஸ்ரீராமர்பிரான் சிறப்பு கடல்நடுவே புராணம் இராமயணம் தீர்த்தம் அக்னி தீர்த்தம் தீர்த்தம் ராமர் தீர்த்தம்.ஊர் தேவிபட்டணம்.புராணபெயர் தேவிப்பூர் பிறபெயர்.தேவிபுரம் மாவட்டம் ராமநாதபுரம்.பிரார்த்தனை முன்ஜென்ம பாவங்கள் தீர பிதுர்கடன் கழிக்க தர்ப்பணம் ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம்.நவகிரக தோசங்கள் விலக இங்கு வழிபடலாம்.இவை தவிர குழந்தை பாக்கியம் ஆயுள் கல்வி செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம்.நேர்த்தி கடன் நவதானியங்கள் படைத்தல் நவகிரக வலம் தானம் செய்தல் தோச பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.கோயிலின் சிறப்பம்சம் நவகிரக மகிமை நவ ஒன்பது பாஷாணம் கல்.ஸ்ரீராமனும் இத்தலமும் வேத சாஸ்திரங்களிலே எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை நவகிரக பூஜை செய்வது வழக்கம்.இராமர் பிரதிஷ்டை செய்த நவகிரங்கள் நவ பாஷாணமாக ஒன்பது கற்களாக அமைந்து அன்றும் இன்றும் என்றும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.தலபெருமைகள் தலபெருமைகள் ஆரவாரமில்லாத கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவகிரகங்கள் அருள் பாலித்து இதலத்து முக்கிய சிறப்பு மூர்த்தி தலம் கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம்தான் நவபாஷாணம் ஆகும்.ஸ்ரீ ராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம்.பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.அனைவரும் இங்குள்ள நவகிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம் அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை.ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோசத்தை நிவர்த்தி செய்த தலம்.சேது தலத்தை தரிசித்தாலே முன் கர்ம பாபங்கள் அனைத்தும் விலிகி புண்ணியம் ஏற்படும் புராண காலம் தொட்டு கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவகிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் ராமேஸ்வரம் 77 கி.மீ.ராமநாதபுரம் 15 கி.மீ.மதுரை 115 கி.மீ.சிவகங்கை 47 கி.மீ.தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் ரூ.600 வரை.போக்குவரத்து வசதி இராமேஸ்வரத்திற்கும் ரயில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.மதுரைஉள்ளிட்ட பெரும்பாலான மாவட்டத் தலைநகர்களிலிருந்தும் ராமநாதபுரத்திற்கும்.இராமேஸ்வரத்திற்கும் பஸ்வசதி உள்ளது.அங்கிருந்து தேவிபட்டிணத்திற்குபஸ் வசதி உண்டு.அருகிலுள்ள விமான நிலைம் மதுரை.முக்கிய திருவிழாக்கள் பத்து நாள் ஆடிஅம்மாவாசை திருவிழா நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட இத்தலத்தில் கூடுவது வெகு சிறப்பு.தை அம்மாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.தல வரலாறு இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டதை அறிந்து அவரை மீட்க ஸ்ரீ ராம பிரான் தென் திசை நோக்கி வருகிறார்.வேத சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பு பிள்ளையார் பூஜை நவகிரக பூஜை செய்வது வழக்கம்.அவ்வமயம் கடல் கொந்தளிப்பு ஏற்பட தமது திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதி அடைந்ததாக ஐதீகம்.ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் நவபாஷாணமாக ஒன்பது கற்களாக அமைந்து இன்று அருள் தருகின்றனர்.

No comments: