Sunday, July 6, 2008
திண்டுக்கல்
அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்.திண்டுக்கல் அம்மன் மாரியம்மன்.காலம் 18ம் நூற்றாண்டு முன்பக்கம் விநாயகர் வடபுறம் கருப்பண்ணசுவாமி தென்புறம் முனீஸ்வரசுவாமி தென் வடக்கு மதுரைவீரசுவாமி வாயில்கள் 3 ஊர் திண்டுக்கல்.புராணப்பெயர்.திண்டீஸ்வரம் மாவட்டம் திண்டுக்கல்.பிரார்த்தனை இங்கு அம்மனை வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும்.மற்றும் தீராத நோய்களும் குணமாகின்றன.நேர்த்தி கடன் நோய் நொடிகளிலிருந்து நீங்க வேண்டும் என்பதற்காக மஞ்சளும் உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள்.தீச்சட்டி ஏந்திவருவது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும்.மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்து அம்னை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள்.இதுபோன்ற காலத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அம்மனை வழிபடுவார்கள்.கோயிலின் சிறப்பம்சம் திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது.வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது.மேற்கு திசையில் மலையும் அமைந்துள்ளது.300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும் இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள் தலபெருமைகள் 8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு சூலாயுதம் மணி கபாலம் ஆகியவையும் இடது கையில் வில் கிண்ணம் பாம்பு ஆகியவைகள் காணப்படுகின்றது.இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்ப குதி.பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப் பாகும்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் உள்ளது.மதுரையிலிருந்து 50 கி.மீ.தங்கும் வசதி.போக்குவரத்து வசதி பஸ்வசதி திண்டுக்கல்அருகில் உள்ள விமான நிலையம் மதுரை.முக்கிய திருவிழாக்கள் திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அம்மாவாசை முடிந்த 5 பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும் அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது.அதுவே திண்டுக்கல் மக்களுக்கு கோட்டை மாரியம்மனாகவும் காவல் தெய்வாமாக உள்ளது.இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது.பின்புற வாயிகள் மாலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது.தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டடுள்ளது.அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும் வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில்.முன்புற வடக்கில் நவக்கிரங்கள் பின்பக்கம் தென்புரம் மூனீஸ்வரசுவாமிசன்னதி வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை துர்கை சிலை உள்ளது.மேலும் சிம்மவாகனம் ரிஷப வாகனம் குதிரை வாகனம் ஆகிய வாகனங்கள் விழாக்காலத்தில் அம்மன காட்சிதருவார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment