Sunday, July 6, 2008

கரூர்

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கரூர் அம்மன் ஸ்ரீ மாரியம்மன் பிறபெயர்.மகாமாரி பார்வை ஈசாண்யம் பிரசாதம் திருமண் படையல் தயிர்சாதம் திருவிழா வைகாசிவிழா சிறப்பு பூச்சொரிதல் ஊர் கரூர் புராணபெயர்.கருவூர் மாவட்டம் கரூர் பிரார்த்தனை நேர்த்தி கடன் கோயிலின் சிறப்பம்சம் பொது தகவல்கள் முக்கிய திருவிழாக்கள் தல வரலாறு பிரார்த்தனை அம்மை முதலான நோய்கள்.மற்றும் உடல் உபாதைகள் வழக்கு சிக்கல்கள் காணாமற் போன பொருட்கள் வியாபார சிக்கல் முதலிவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.அலகு குத்தல் காவடி எடுத்தல் பால் குடம் மாவிளக்கு வைத்தல் பொங்கல் வைத்தல் ஆகியவை.இவை தவிர நீர்மோர் பானக்கம் வடைபருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம்.பால் அபிசேகம் செய்யலாம்.திருவிளக்கு பூஜை நடத்தலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.தயிர்ச்சாதம் படைத்தல் இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள்.தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.தலபெருமைகள் அம்மன் ஈசாண்யப் பார்வையுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.100 வருடத்திற்கும் முந்தய பழமையான கோயில்.இந்துக்கள் தவிர முஸ்லிம்கள் கிருஸ்த்துவர்கள் என்று அனைத்து மத்தினரும் வந்து வழிபடும் ஆலயம்.கோயிலின் சிறப்பம்சம் திருமண் தத்துவம் மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில்.மறைவது பூமித் தாயின் வயிற்றில்.எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் எனபதே இதில் அடங்கியுள்ள தத்துவம்.இதன் உண்மை வடிவமே மாரியம்மன்.அந்த வகையில் இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.இதை சுவாமியாகக் கருதுகிறார்கள்.இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.அதற்கான ஆவணமே உள்ளது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கரூர் நகரின் மத்தியில் உள்ளது.தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.போக்குவரத்து வசதி கரூர் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம் அருகிலுள்ள ரயில் நிலையம் கரூர் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் வைகாசிப் பெருந்திருவிழா 21 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாதான் இத்தலத்தின் மிகப்பெரும் திருவிழா.கரூர் நகரமே பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.தவிர ஆடிவெள்ளி நவராத்திரி தீபாவளி பெரிய கார்த்திகை பொங்கல் தை வெள்ளி பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிசேக ஆண்டுவிழா பங்குனி உத்திர திருவிழா நாட்களின் போதும் பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.தல வரலாறு.இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல் உள்ள பெரியதொரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பாக நடக்கும்.

No comments: