Monday, July 7, 2008

நாகர்கோயில்

அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் நாகர்கோயில் மூலவர் நாகராஜர் பிறபெயர்.நாகரம்மன் பிரதிஷ்டை.நீருக்குள் சிறப்பு சுயம்பு கருவறை ஓலைகூரை தலமரம் ஓடவள்ளி தீர்த்தம் தெப்பக்குளம்
தனிசந்நிதி.துர்க்கை ஊர் நாகர்கோயில்.மாவட்டம் கன்னியாகுமரி.பிரார்த்தனை நாகசிலைகளால் சூழப்பட்ட மரங்களை சுற்றி வலம் வந்தால் நாகதோஷம்
நீங்கும் குழந்தைப் பேறு கிடைக்கும் மருந்துகளால் குணப்படுத்த முடியாத தோல்
வௌ஢ளை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகிறது.நேர்த்தி கடன் வௌ஢ளி நாகம் படைத்தல் பால் ஊற்றுதல் மஞ்சள் அபிஷேகம் செய்தல்
முட்டை வைத்தல் உப்பு மிளகு காணிக்கை கோயிலின் சிறப்பம்சம் கருவறை சிறப்பு பெரிய
கோயிலாக இருந்தாலும் இங்கு மூலவர் கருவறையின் மேற்கூரை வெறும் ஓலை மட்டுமே
வேயப்பட்டுள்ளது.விமானம்கிடையாது பீடமும் கிடையாது.வருடத்திற்கு ஒருமுறை கூரை வேயும் போது பாம்பு வருவது வழக்கம்.மூலவர் அமர்ந்திருக்கும் இடம் எப்போதுமே ஈரமாக இருப்பது அதிசயம்.மூலவர் இங்கு தண்ணீர் நடுவில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.தலபெருமைகள் நாக வழிபாட்டுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட கோயில்.மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தண்ணீர் ஊற்றிலிருந்து எடுக்கப்படும் மண்ணே
இக்கோயிலின் முக்கிய பிரசாதமாகும்.இது ஆறு மாத காலம் கறுப்பு நிறமாகவும் எஞ்சிய நாட்களில் வௌ஢ளை நிறமாகவும்
மாறி வருகிறது என்பர்.எவ்வளவோ காலமாக எடுக்கும் அந்து மண் குறையாமலிருப்பது அதிசயம்.ஓட வள்ளி மரத்தின் இலைகள் சாப்பிட்டால் தொழுநோய் குணமடையும்.ஒவ்வொரு இலையும் தனி தனி சுவையாக இருப்பது புதுமை.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ.
மதுரையிலிருந்து 230 கி.மீ.தங்கும் வசதி ரூ.150 முதல் ரூ.700 வரை.போக்குவரத்து வசதி தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோயிலுக்கு நிறையபஸ்
வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் நாகர்கோயில் அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம்
மதுரை.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செயல் அலுவலர் அருள்மிகு நாகராஜர் திருக்கோயில்
நாகர்கோயில்.போன் 04652 232420 முக்கிய திருவிழாக்கள் தைத் திருவிழா 10 நாள் 5 ஆயிரம் பக்தர்கள்
கூடுவர்.ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் 10ஆயிரம்பக்தர்கள் கூடுவர்.தவிர ஆயில்ய நட்சத்திரத்தன்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பக்தர்கள் பெருமளவில்
கூடுகிறார்கள்.தல வரலாறு புல்லும் புதரும் நிறைந்திருந்த இந்த இடத்தில் இளம் பெண்ணொருத்தி புல்
அறுக்க அவளது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம்
பெருக்கெடுத்தோடியது.இதைக் கேள்வியுற்றுப் பல இடங்களிலிருந்தும் மக்கள் திரளாக அங்கே வந்து வணங்கினர்.பின் தொழுநோயால் வருந்திய களக்காட்டு மன்னர் இக்கோயிலில் வந்து பிரார்த்திக்க நோய்
குணமானது.இதனால் அவர் இக்கோயிலை கட்டினார்.பின்னர் நாளடைவில் இக்கோயில் பிரபலமானது.

No comments: