Saturday, July 5, 2008

சமயபுரம்

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில்.சமயபுரம் மூலவர் ஆதிமாரியம்மன் உற்சவர் சமயபுரம் மாரியம்மன் தல விருட்சம் வேப்பமரம் சிறப்பு மாரியம்மன்களில் முதன்மையானதாக கருதப்படுபவர் மாவட்டம் திருச்சி ஊர் சமயபுரம் முக்கிய திருவிழா தை கடைசி ஞாயிறும் மாசியில் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமையும் அம்மன் உலா உண்டு.மூன்றாம் ஞாயிறு அன்று தேரோட்டம் நடக்கிறது.இங்கு விழா முடிந்த பிறகு தான் சமயபுரத்தில் விழா துவங்குகிறது.கார்த்திகை சோம வாரம் சித்ரா பவுர்ணமி நவராத்திரி விழா ஆகியவை முக்கியமானது.தல சிறப்பு பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் தன் தாயைக் காண வருகிறாள்.போது ஊர் மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர்.தாய் வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். மணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்து விடுகின்றனர். சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர். இந்த சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சமயபுரத்து அம்மனைப் பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை. மாரியம்மன்
பிறந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.விழாக் காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சியாக இருப்பது போலவும்
திரும்பிச் செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.தாயைப் பிரிந்து செல்வதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை. கோயிலில் விநாயகர் முருகன் நாககன்னி சன்னதியும் உள்ளது.நாககன்னி சன்னதி முன்புள்ள வேப்ப மரத்தில் குழந்தை இல்லாத பெண்கள் தாங்கள் கட்டிவரும் சேலையின் முந்தானையை கிழித்து மரத்தில் கட்டி ஒரு கல்லை வைத்து விடுகிறார்கள்.இதனால் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்ததும் இங்கு வந்து
தொட்டிலை அவிழ்த்து விட்டு அம்பாளுக்கு பூஜை செய்து திரும்புகின்றனர்.தலவரலாறு இஸ்லாமியர்களின் படையெடுப்பின் போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்று விட்டனர்.சமயபுரத்திலிருந்து செல்லும் போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது.அம்பாளை கரையில் வைத்து விட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கைகால் கழுவினர்.பார்த்து சோர்ந்து சென்று விட்டனர்.இதன் பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர்.சிலைக்கு பூஜை செய்து விளையாடினர்.இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவந்தது.அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்ற போது ஒரு பெண்ணுக்கு அருள்
வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறிமக்கள் பூ கட்டி பார்த்தனர்.லும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது.எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு
கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது.யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது.அந்த இடத்தில் சிலையை வைத்து பூஜை செய்தனர்.இவளே ஆதி மாரியம்மன் எனப்பட்டாள்.சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாக கருதப்படுகிறாள்.போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண
வருவதாக ஐதீகம்.இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டு வரப்படுகிறாள்.பொதுத்தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சி சமயபுரம் மாரிய்மமன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. ஆட்டோக்கள் கார்களில் செல்லலாம் தங்கும் வசதி
குடும்பத்துடன் வரும் பக்தர்கள் அருகிலுள்ள திருச்சி லாட்ஜ்களில் தங்கி இங்கு வந்து
தரிசிக்கலாம்.கட்டணம் ரூ.250முதல் 2000 வரை அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி அருகிலுள்ள
விமான நிலையம் திருச்சி.

No comments: