Sunday, July 6, 2008

சிக்கல்

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்.சிக்கல். மூலவர் நவநீதேஸ்வரர் திருமேனி சுயம்பு மூர்த்தி பிறபெயர்.வெண்ணெய் பெருமான் அம்மன் சக்தியாயதாட்சி வேல்நெடுங்கண்ணி தல விநாயகர் சுந்தர கணபதி தல விருட்சம் மல்லிகை தீர்த்தம் க்ஷீர புஷ்கரி பாற்குளம் சிறப்பு சிக்கல் சிங்காரவேலவர் பதிகம் சம்பந்தர் பழமை 1600 ஆண்டுகள் ஊர் சிக்கல் மாவட்டம் நாகப்பட்டினம் தல வரலாறு விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும் இதை அறிந்த சிவன் பசுவை புலியாக மாறும் படி சபித்ததாகவும் கூறப்படுகிறது.வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது.மனமிறங்கிய சிவன் பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்.சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது.இதனால் இந்த குளம் பாற்குளம் ஆனது.தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது.சிவனின் ஆணைப்படி வசிட்டர் இத்தலம் வந்து.இந்த வெண்ணெய் மூலம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார்.இதனால் இத்தல இறைவன் வெண்ணெய் நாதர் ஆனார்.வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் சிக்கல் என்றழைக்கப்பட்டது.முருகனின் சிறப்புகந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது.இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.எட்டுக்குடி எண்கண்.கோலவாமனப்பெருமாள்ஒரு முறை தேவர்கள் அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர்.எனவே இத்தல பெருமாள் கோலவாமனப்பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.தல சிறப்பு அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.விசுவாமித்திரர் அகத்தியர் காத்தியாயனர் நாரதர் முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.சிவன் பெருமாள் முருகன் அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும்.தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 83வது தலம்.அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார்.கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.வெண்ணெய் உருகுவது போல் நமது கஷ்டங்கள் உருகி விடும் என்பது ஐதீகம்.தேவர்கள் சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு திரி சதை செய்து வேண்டிக்கொண்டனர்.இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.சிங்கார வேலனுக்கு சத்ரு சம்ஹார திரி சதை அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை. திருவிழா சித்திரை பிரமோற்சவம் ஐப்பசி கந்த சஷ்டி.திறந்திருக்கும் நேரம் காலை 5.30 12.30 மணி மாலை 4 9 மணி.இருப்பிடம் நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ. திருவாரூர் செல்லும் வழியில் சிக்கல் உள்ளது.அர்ச்சகர் எஸ். சேகர்போன் 04365 245 452 245 350.அருகிலுள்ள ரயில் நிலையம் சிக்கல்அருகிலுள்ள விமான நிலையம் சென்னை திருச்சி.

No comments: