Monday, July 7, 2008
திருநீரகம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்.திருநீரகம் காஞ்சிபுரம்.இது உலகளந்த பெருமாள் கோயிலினுள் அமைந்துள்ள திவ்ய தேசம் மூலவர் திருநீரகத்தான் உற்சவர் ஜெகதீசப்பெருமாள் திருமேனி தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம் தாயார்.நிலமங்கை வல்லி விமானம் ஜெகதீஸ்வர விமானம் தீர்த்தம் அக்ரூர தீர்த்தம் மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் தரிசனம் கண்டவர்கள் அக்ரூரர் ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தல வரலாறு.உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார்.பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன்.நீரிடை மீனாக அவதாரம் செய்தவன்.நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன்.பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ.எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை.திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் திருஊரகத்துடன் வந்து விட்டதா.அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.தல சிறப்பு பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருநீரகம் எனப்படும்.இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும்.இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம் திருக்காரகம் திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது.அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது.இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.பூஜை நேரம் காலை 7 முதல் 12 வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசிக்கலாம்.இருப்பிடம் காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது.மொபைல் 94435 97107 98943 88279அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம்அருகிலுள்ள விமான நிலையம் சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment