Monday, July 7, 2008

வள்ளிமலை

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்.வள்ளிமலை மூலவர் சுப்ரமணியர் வள்ளியம்மை சுயம்பு இறைவிகள் வள்ளிதெய்வானை பெருமை குடைவரைகோயில் விநாயகர் வரசித்திவிநாயகர் தலமரம் வன்னிமரம் தீர்த்தம் சிவகங்கை ஊர் வள்ளிமலை புராணபெயர்.வள்ளியம்பதி மாவட்டம் பிரார்த்தனை திருமணம் ஆகாதவர்கள் இங்கு நீர் மாலை அர்ச்சனை பண்ணுவது இங்கு சிறப்பு.இந்த அர்ச்சனை செய்தால் உடனே திருமணம் நடக்கிறது.குழந்தையில்லாதவர்கள் தொட்டில் கட்டி வழிபட்டு குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள்.கற்கள் அடுக்கி பிரார்த்தனை செய்தால் வீடு தொழிற்சாலை ஆகிய வரங்களை கிடைக்கப்பெறுகிறார்கள்.செல்வம் செழிக்க அம்மன் பாதத்தில் கல்லை வைத்து அந்த கல்லை எடுத்து கட்டுகிறார்கள்.மூலஸ்தானத்தில் உள்ள சுரங்கப்பாதையில் தங்களது வேண்டுதலை பக்தர்கள் சொன்னால் உடனே நிறைவேறுகிறது.இங்கு வழிபட்டால் நோய் நீங்கி வளம் பெறலாம்.நேர்த்தி கடன் எடைக்கு எடை நாணயம் போடுதல் துலாபாரம் கல்கண்டு வாழைப்பழம் வெல்லம் ஆகியவற்றையும் எடைக்கு எடை தந்து நேர்த்திகடன் செய்கிறார்கள்.வேல் வாங்கி வைக்கிறார்கள்.செல்வம் கொழிக்க இவ்வாறு நேர்த்திகடனை செய்கிறார்கள்.புடவை வேட்டி சாத்துதல்.மொட்டை எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.சேவல் காணிக்கை பசுமாடு காணிக்கை ஆகியவற்றை செய்கின்றனர்.பால் பன்னீர் விபூதி சந்தனம் தேன் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்கின்றனர்.கோயிலின் சிறப்பம்சம் முருகன் மட்டுமே தெரிவார்.வலது பக்கத்திலிருந்து பார்த்தால் இடது பக்கமிருக்கும் வள்ளி தெரிவார்.இடது பக்கத்திலிருந்து பார்த்தால் வலது பக்கமிருக்கும் தெய்வானை தெரிவார்.இத்தகைய அரிய காட்சியை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.அடியெடுத்து சீக்கிரம் வா என்றதால் ரெண்டாடி என்றும்.போகும்போது மயிலாடிக் கொண்டிருந்ததால் மயிலாடும்பாறை என்றும்.கால் வலிக்கிறது என்று வள்ளி சொல்லி அமர்ந்து விட்டு சென்றதால் அம்மையார் குப்பம் என்றும்.தலபெருமைகள் குறமகளாம் குலமகள் வள்ளி தோன்றிய அழகு மலையே இவ்வள்ளி மலை ஆகும்.சுவாமிக்கு ருத்ராட்சப் பந்தல் மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.444 படிகளைக் கொண்ட அழகிய மலைக் கோயில்.மூலஸ்தானம் குடவரைக்கோயிலாக உள்ளது.வள்ளியம்மை இத்தலத்தில் சுயம்புவாக காட்சி தருகிறார்.உள் மண்டபத்தின் இடப்புறத்தில் முருகன் வள்ளியைக் கவர்ந்து கொண்டு தணிகைக்குச் சென்ற சுருங்கை வழி உள்ளது.இது தற்போது மூடப்பட்டு ஒரு சிறிய வழி ஆக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து திருத்தணிக்கு சுரங்கப்பாதை இருப்பதாக கூறப்படுகிறது.சச்சிதானந்தா சுவாமிகள் இத்தலத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார் வள்ளிமலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.கிருபானந்த வாரியார் வள்ளிமலை மீது தனி பற்று கொண்டு திருப்பணிகள் பல செய்து குடமுழுக்கும் செய்துள்ளார்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் வேலூர் 30 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் வேலூர் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.ஹோட்டல் ரியர் வியூ போன் 25060ஹோட்டல் கங்கா போன் 23060ஹோட்டல் வசந்தவிகார் போன் 21496ஹோட்டல் வெல்கம் லாட்ஜ் போன் 22401 கட்டணம் ரூ.200 முதல் 600 வரை போக்குவரத்து வசதி பஸ்வசதி வேலூர்.அருகில் உள்ள ரயில் நிலையம் காட்பாடி திருவாளம்அருகில் உள்ள விமான நிலையம் சென்னை முக்கிய திருவிழாக்கள் மாசி மகம் பிரம்மோற்சவம் 11 நாட்கள் திருவிழா பஞ்சமி கொடி ஏற்றம் தீர்த்தவாரி கொடி இறக்கம் 4 நாள் தேர் மலையை சுற்றி வரும்.வாகனங்களில் சுவாமி வீதி உலா லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.மாசிப் பவுர்ணமி வள்ளிக்கு கல்யாணம் ஆடி கிருத்திகை 3 நாகள் தெப்பத் திருவிழா ஐப்பசி கந்த சஷ்டி விழா லட்சார்ச்சனை தெய்வானை திருவிழா சூரசம்காரம் கார்த்திகை ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் 3 நாட்கள் 108 குடம் பால் அபிசேகம் சந்தன காப்பு மஞ்சள் காப்பு விபூதி காப்பு அபிசேகம் ஆகியவை செய்யப்படுகின்றன.பங்குனி படிவிழா 29 30 31 ந் தேதிகள்.படிகள் கிருபானந்த வாரியாரால் கட்டப்பட்டது என்பது விசேசம்.ஜனவரி முதல் தேதி 1008 குடம் பால் அபிசேகம் சிறப்பு அலங்காரம் மின் விளக்கு அலங்காரம் வாணவேடிக்கை ஆகியவற்றோடு சுவாமி வீதியுலா தீபாவளி பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.பவுர்ணமி கிரவலம் இங்கு விசேசமாக நடைபெறுகிறது.மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.தல வரலாறு.அந்த கர்ப்பத்தில் தெய்வ மகளாம் வள்ளி கருவாக இருந்தாள்.மான் தன் வயிற்றிலிருந்து அக்குழந்தையை வள்ளிக்கிழங்கு அகழ்ந்ததோர் குழியில் ஈன்றது.குறிஞ்சி நிலமாம் இவ்வள்ளி குன்றினை அந் நிலத்திற்கே உரிய வேடவத் தலைவன் நம்பிராஜன் ஆண்டு வந்தான்.அவன்எடுத்து வள்ளி எனப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்குகிறான்.

No comments: