Monday, July 7, 2008

விளக்கொளி பெருமாள்

அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்.காஞ்சிபுரம் மூலவர் அருள்மிகு விளக்கொளி பெருமாள் பிறபெயர்கள்.தீபப்பிரகாசர் திவ்யபிரகாசர் தாயார்.மரகதவல்லி தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் விமானம் ஸ்ரீகர விமானம் பிற சன்னதிகள் லட்சுமி ஹயக்கிரீவர் ஆண்டாள் தீபப்பிரகாசர் ஆழ்வார்கள் கருடன் வேதாந்த தேசிகர் தலவரலாறு படைப்பின் நாயகன் பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற கார ணத்தால் வருத்தப்பட்டு.சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார்.அந்த யாகத் திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை.கோபம் கொண்ட சரஸ்வதி பிரம்மா நடத் தும் யாகம் வௌதச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடட்டும் என சாபம் இட்டாள்.பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம் தனது யாகம் தடைபடமால் இருக்க வேண்டினார்.இதனால் தான் இங்குள்ள பெருமாள் விளக்கொளி பெருமாள் என்றும் தீபப்பிரகாசர் என்றும் அழைக்கப்படுகிறார்.சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்.தல சிறப்பு பெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று.காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோயில்.சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார்.தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி துணப்புல் திருத்தண்கா எனவும் அழைக்கப்படுகிறது.ஆச்சாரியரான வேதாந்த தேசி கன் இங்கு அவதாரம் செய்ததால் அவர் துணப்புல் வேதாந்த தேசிகன் என அழைக்கப்பட்டார்.திருமங்கை யாழ்வாரால் 2 பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.வேதாந்த தேசிகன் வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார்.இதனால் தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின் போது மணி அடிப்ப தில்லை என்றும் கூறுவார்கள்.பல நுணல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த் தார்.அடைக்கலப்பத்து.என்ற பாமாலையைப் பாடினார்.கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது.தேசிகன் வணங் கிய லட்சுமி ஹயக்கிரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது.சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.திருவிழா.ஆவணி மாதத்தில் விளக் கொளி பெருமாள் தேசிகர் சன்னதிக்கு புறப்பட்டு செல்வதும் மார்கழி சித்ரா பவுர்ணமியில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதையும் காண கண்கோடி வேண்டும்.திறக்கும் நேரம் காலை 7.30 முதல் 10 மணிவரையிலும் மாலை 5 முதல் இரவு 7 மணிவரையிலும் தரிசனம் உண்டு.இருப்பிடம் காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண் டிலிருந்து ஒரு கி.மீ. துணரத்தில் கோயில் உள்ளது.போன் 98944 43108அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம்அருகிலுள்ள விமான நிலையம் சென்னை.

No comments: