Monday, July 7, 2008

விற்குடி

அருள் மிகு பரிமளநாயகி சமேத வீரட்டேஸ்வரர் கோயில்.விற்குடி.மூலவர் வீரட்டேஸ்வரர் திருமேனி சுயம்பு அம்மன் ஏலவார் குழல் அம்மை பரிமளநாயகி உற்சவர் ஜலந்தரவதமூர்த்தி தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் தலவிருட்சம் துளசி தீர்த்தம் சங்கு சக்கர தீர்த்தம் பதிகம் சம்பந்தரால் பாடல் பெற்றது ஆகமம் காரண ஆகமம் பழமை 2500 ஆண்டுகள் புராணபெயர்.கோதிட்டைக்குடி.பொது தகவல்கள் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில் தங்கலாஞ்சேரியில் இறங்கி செல்ல வேண்டும்.திருவாரூரில் இருந்து ஆமூர் திருமருகல் செல்லும் பஸ்களில் செல்லலாம்.காலை 6 12 மாலை 4.30 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.முக்கிய திருவிழாக்கள் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.தல வரலாறு துளசியை தல விருட்சமாகக் கொண்ட சிவாலயம் ஒன்று.வாஸ்து சம்பந்தப்பட்ட தோஷங்களுக்கு பரிகார ஸ்தலமாக உள்ளது.வீடு கட்டினாலோ வாங்கிய வீட்டில் வைத்தாலோ பிரச்னை ஏதும் இருக்காது என்பது நம்பிக்கை. இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவிற்குடி ஆகும்.ஒரு முறை இந்திரன் தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான்.இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று.உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார்.கோபமடைந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான்.கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார்.காவல் காப்பவர் சிவன் என்பதை அறிந்த இந்திரன் ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான்.கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தௌதத்தார் சிவன்.அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது.பாற்கடல் நீர் பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு ஜலந்தராசூரன் என பெயர் வைக்கப்பட்டது.அவன் பெரியவனானதும் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும்.சாகாவரமும் கேட்டான்.பிரம்மன் மறுத்தார்.அதற்கு ஜலந்தராசூரன் தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும் என வரம் வாங்கி விட்டான்.இவனது அட்டகாசம் அதிகமானது.கடைசியில் சிவனையே அழிக்க சென்றான்.சிவன் அந்தணர் வேடமிட்டு.அசுரன் முன் வந்து நின்று.தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார்.இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்.ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான்.இந்த நேரத்தில் திருமாலை அழைத்த சிவன் நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார்.கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை.ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.இந்நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது.இதை அறிந்த பிருந்தை.தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம் நான் கணவனை இழந்து வருந்துவது போல நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்.என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள்.இதனால் தான் விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது.பித்தை தௌதவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார்.இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது.இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது.அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார்.அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால் சிவனை பூஜித்தார்.சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது.திருமால் தன் இருகண்களையும் எடுத்து.சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.சிறப்பம்சம் இங்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்.அம்மன் பரிமளநாயகி.பிருந்தை என்னும் சொல்லுக்கு துளசி என்பது பொருள்.கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக துளசி தான் இங்கு தல விருட்சம்.இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம்.வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால் இங்கிருந்து கல் எடுத்து சென்று அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.ஆஞ்சநேயர் வழிபாடு இங்கு சிறப்பு.முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி அவர்கள் இறந்து போய் இருந்தால் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

No comments: